Skip to main content

Posts

Showing posts from September, 2019

நவராத்திரி விழாவின் சிறப்பும், மகத்துவமும்!!

நவராத்திரி விழா என்பது மக்களை துன்புறுத்தி வந்த மகிசாசுரன் என்ற அரக்கனுடன், ஆதிபராசக்தி 9 நாள்கள் போரிட்டு 10ஆவது நாளில் அவனை வதம் செய்து வெற்றிகொண்டதாக நம்பப்படுகிறது. இதனை நினைவுகூரும் வகையில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரியில் பராசக்தியான துர்கா பரமேஸ்வரியையும், மகாலஷ்மியையும், சரஸ்வதி தேவியையும் பூஜிக்கிறோம். பாராசக்தி மூன்றாக இருந்தாலும், முப்பத்து முக்கோடியாக இருந்தாலும், அத்தனையாகவும் இருப்பது ஒரே பராசக்திதான்.   நவராத்திரி பண்டிகை உலக நலத்துக்காக, தன்னை நம்பும் பக்தர்களுக்காக ஸ்ரீமஹாதேவி பிரசன்னாமாகி மகிஷாசுரவதம் நடத்தி, தன் குழந்தைகளை எப்படியும் காப்பாற்றுவேன் என்று பறைசாற்றும் நாளே விஜயதசமி நன்நாளாகும். நம் தாய் ஆதிபராசக்தியே லக்ஷ்மி, சரஸ்வதி, பார்வதி என முப்பெரும் தேவிகளாக ரூபம் கொண்டு வாழத் தேவையான ஐஸ்வர்யம், ஞானம், வீரம் போன்றவற்றை அருள்கிறாள். அன்பின் சொரூபமான அவள் நம்மிடம் எதிபார்ப்பது ‘ஆத்ம சரணாகதி' என்ற தூய அன்பை மட்டுமே. நவராத்திரி கொலுவில் இடம்பெறும் பிரமாண்டமான மலைகள், பலவகையான பாதாள குகைகள்,  நிறைய நீர்வீழ்ச்சிகளுடனான ஆறுகள், எரிமலை நெ

சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை திரை விமர்சனம்!

கதைக்களம்   நம்ம வீட்டுப்பிள்ளை சிவகார்த்திகேயன் பெரிய குடும்பத்தில் எந்த ஒரு நல்லது கெட்டது என்றாலும் முதல் ஆளாக தோல் கொடுத்து அனைத்து சொந்த பந்தங்களையும் விட்டுக்கொடுக்காமல் முறை செய்கிறார். ஆனால், அவருக்கு அப்பா இல்லை என்பதால் மற்ற அனைவருமே அவரை குடும்பத்தில் ஒருவராக பார்ப்பதில்லை, சிவகார்த்திகேயன் தங்கையான ஐஸ்வர்யா ராஜேஸையும் சேர்த்து. தங்கைக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என சிவகார்த்திகேயன் ஊர் முழுவதும் அழைகிறார். ஆனால், யாருமே கட்டிக்கொள்ள முன்வராத போது நட்டி அவரை திருமணம் செய்ய முடிவெடுக்கின்றார். ஆனால், அவர் முன்வருவது சிவகார்த்திகேயனுடன் ஏற்கனவே இருக்கும் ஒரு பகைக்காக தான், அது தெரியாமல் தங்கையை கட்டிக்கொடுக்க, தன் பின் அவர் சிவகார்த்திகேயனை மதிக்காமல் இருக்க, பதிலுக்கு சிவகார்த்திகேயன் தங்கைக்காக இறங்கி போக, கடைசியில் என்ன ஆனது என்ற பாசப்போராட்டமே இந்த நம்ம வீட்டு பிள்ளை

பிடித்திருந்தால் அதிகம் பகிருங்கள்........

1. தினமும் 10லிருந்து 30 நிமிடங்கள் நடந்து செல்லுங்கள். அவ்வாறு செல்லும் போது சிரித்த முகமாகச் செல்லுங்கள். 2. தினமும் ஒரு 10 நிமிடங்களாவது, எந்த சிந்தனைகளும் இல்லாமல் அமைதியாக கண்ணை மூடி அமருங்கள். 3. தினமும் ஏழு மணி நேரம் உறங்குங்கள். 4. எப்போதும் இரக்கம், உற்சாகம், ஊக்கம், கருணை ஆகிய குணங்கள் மனத்தில் நிறைந்திருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். 5. அதிக நேரம் ஏதாவது விளையாடுங்கள். 6.  அதிகமான ஆன்மீக மற்றும் விஞ்ஞான  புத்தகங்களை படியுங்கள். 7. உங்கள் தினசரி அலுவலில் தியானம், யோகம், வழிபாடு போன்றவற்றிற்கு இடம் கொடுங்கள். இவை உங்கள்  வாழ்க்கைக்கு புத்துணர்ச்சி அளிக்கும். 8. உங்கள் ஓய்வு நேரத்தை 70 வயது கடந்த முதியவர்களுடனும், ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுடனும் செலவழியுங்கள். 9. அடிக்கடி நிறைய கனவு காணுங்கள், விழித்திருக்கும் போது! 10. மரங்களிலும்,செடி கொடிகளிலும் விளையும் உணவுப்பொருட்களை பச்சையாக அப்படியே  நிறைய உண்ணுங்கள். 11. தினசரி மூன்று நபர்களையாவது மகிழ்ச்சிப்படுத்துங்கள். 12. தினமும் நிறைய தண்ணீர் அருந்துங்கள். 13. உங்களுக்குள் உன்னதமான ஆற்றல் மறைமுகமாக இருப்பதை உணருங்கள், 14

கரவெட்டியில் சர்வதேசத் தரத்தில் உணவகங்கள்! பாராட்டத் தெரியாத ஆளுநர் அலுவலகம்!

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 உணவகங்ள் 'ஏ' தரத்தில் இயங்குவதுடன் அனைத்து உணவங்களும் தொடர்ச்சியான கண்காணிப்பில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த வருடத்தில் மட்டும் உணவகங்களுக்கு எதிராக 42க்கு மேற்பட்ட வழக்குகள் பருத்தித்துறை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அண்மையில் சில உணவகங்களை மட்டும் தரிசித்த ஆளுநர் அலுவலகத்தைச் சார்ந்த சில பயிலுநர்கள் ஏற்கனவே பொதுச் சுகாதார பரிசோதகர்களால் திருத்த வேலைகளுக்காக கால அவகாசம் வழங்கப்பட்ட சில உணவகங்களில் மட்டும் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வேறு பிரதேசங்களில்  எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும் இணைத்து ஊடகங்களில் வெளியிட்டதுடன் மிகவும் நல்ல நிலையில் இயங்கி வரும் தரமான உணவகங்களைத் தரிசித்த போதிலும் அதனது படங்களை வேண்டுமென்றே இருட்டடிப்புச் செய்துள்ளார்கள்.  அண்மையில் நடைபெற்ற ஜி.எம்.பி எனப்படும் சர்வதேச தரச்சான்றிதழ் விழாவில் கரவெட்டியைச் சார்ந்த 3 உணவங்கள் தெரிவு செய்யப்பட்டு அதனது தரங்கள் உறுதி செய்யப்பட்டு விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டன. இதற்காக அப்பகுதியினைச் சேர

இதுவரை தோண்டப்பட்ட நகரங்களில் கடவுள் சிலையோ கோவிலோ இல்லாத முதல் நகரம் தமிழனின் "கீழடி"நகரம்!!!

இனிய காலை வணக்கங்கள். இதுவரை தோண்டப்பட்ட நகரங்களில்  கடவுள் சிலையோ கோவிலோ இல்லாத முதல் நகரம் தமிழனின் "கீழடி"நகரம்!!! இதன் பொருள் இந்து மதத்திற்கு முந்திய நாகரீகத்திலேயே சிறப்பாக வாழ்ந்த இனம் கீழடி தமிழினம்... கீழடி அகழாய்வு: ‘செங்கல் சூளைக்கு மண் தோண்டும்போது கிடைத்த 2600 ஆண்டு வரலாறு’ கீழடியில் செய்யப்பட்ட அகழ்வாய்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தங்கள் ஊரில் 2,600 ஆண்டுகால வரலாறு புதைந்து கிடந்தது குறித்து கீழடியைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள் மகிழ்ச்சியையும் வியப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர். கீழடியில் அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடம் ஒன்றுக்கு உரிமையாளரான கருப்பாயி பேசுகையில், முதலில் இந்த இடம் தென்னந்தோப்பாக இருந்தது. வறட்சியின் காரணமாக மரங்கள் கருகி போனதால் செங்கல் சூளைக்கு மணல் எடுப்பதற்காக தோண்டியபோது முதலில் செங்கல் சுவர் ஒன்று காணப்பட்டது என்றார். அதனை தொடர்ந்து தொல்லியல் துறை சார்பில் இங்கு பல இடங்களில் தோண்டி பார்த்ததில் பழங்கால தமிழர்கள் வாழ்ந்த சுவடுகளான உறை கிணறு, செங்கல் சுவர், எலும்பு கூடுகள் என பலவும் மண்ணுக்கு அடியில் இருந்து எடுத்து வருவதாக தெரிவித்தார்.

திடீரென வாட்ஸ்ஆப்பில் வந்துள்ள புத்தம் புதிய அம்சம்: உடனே ட்ரை பண்ணுங்க மக்களே.!

வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை சேர்த்த வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் புதிய அப்டேட் அனைத்தும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.  வாட்ஸ்ஆப் நிறுவனம் வாட்ஸ்ஆப் நிறுவனம் அதன்படி இந்நிறுவனம் அனைவரும் அதிமாக எதிர்பாரக்கும் அம்சத்தை தற்சமயம் அறிமுகம் செய்துள்ளது, அது என்னவென்றால் வாட்ஸ்ஆப்பில் பகிரும் ஸ்டேட்டஸை, பேஸ்புக் ஸ்டோரியாகவும் பகிரந்து கொள்ளும் ஒரு புதிய அம்சத்தினை வாட்ஸ்ஆப் நிறுவனம் கொண்டுவந்துள்ளது.  ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் குறிப்பாக வாட்ஸ்ஆப் நிறுவனம் கொண்டுவந்துள்ள இந்த புதிய அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய அம்சம் பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்று தான் கூறவேண்டும்.

மும்பையில் நடந்த ஒரு வங்கிக் கொள்ளையின் போது நடந்த சுவார்சியமான சம்பவம்!

கொள்ளையா்கள் துப்பாக்கியுடன், அனைவரையும் மிரட்டினா இந்தப் பணம் அரசுக்கு சொந்தமானது , ஆனால் ,உங்கள் உயிர் உங்களுக்குச் சொந்தமானது"" அதனால்,யாரும் எங்களை எதிர்க்க வேண்டாம்!அனைவரும் அசையாமல் கீழே படுங்கள் என்றார்கள். படுத்துவிட்டார்கள் . மனதை மாற்றும் முறை என்பது இதுதான் .  ". This is called "Mind Changing Concept” Changing the conventional way of thinking." அங்கே ஒரு பெண், கொள்ளையர் களின் கவனத்தைத் திருப்ப அநாகரிகமாக நடந்தாள் . அப்பொழுது கொள்ளையா்களில் ஒருவன் , இங்கு நடக்க போவது கொள்ளை, கற்பழிப்பு அல்ல என்று மிரட்டி, அமர வைத்தான்... இதைத்தான், செய்யும் தொழில்களில் கவனம் தேவை என்று சொல்கிறோம்  "Being Professional & Focus only on what you are trained"" கொள்ளையடித்து விட்டு வீட்டிற்கு வந்தவுடன் கொள்ளையா்களுள் ஒருவன் கேட்டான் "" வாருங்கள் சீக்கிரம் பணத்தை எண்ணி விடலாம்"" என்று . மற்றொருவன் சொன்னான் , பொறு , அவசரம் வேண்டாம் . பணம் நிறைய இருக்கிறது .நேரம் அதிகம்  செலவாகும். அரசே நாம் எவ்வளவு₹#கொள்ளை அடித்தோம் என்று, நாளை செய்

கரவெட்டி கிராமத்தின் வரலாறு!

கரவெட்டி கிராமம் ஆனது வதிரி உடுப்பிட்டி துன்னாலை கரணவாய் என்று பெயர் சொல்லக்கூடிய கிராமங்களை எல்லையாக கொண்டு வடமராட்சியில் ஒரு முக்கிய கிராமம். இந்த கரவெட்டியில் நெல்லியடி, சம்மந்தர் கடையடி, கிளவிதோட்டம், யார்க்கரை, அத்துளு, கட்டைவேலி என்றவாறாக சிறு சிறு கிராமக்குடிகளை கொண்டு விளங்குகிறது. ஊர் வழக்கில் நெல்லியடியை கரவெட்டி என்று சொல்லுவதில்லை. அதை நெல்லியடி என்றே சொல்லிக்கொள்ளுவார்கள். கேவளை, தூவெளி, நுகவில் வயல் பகுதி, சாமியன் அரசடி, கோவில்சந்தை, போன்றவற்றை எல்லை கோடுகளாக கொண்டு அழகிய கிராமமாக விளங்குகிறது இதில் கேவளை சந்தி முந்தி ஒரு முக்கியமான இடமாக இருந்திருக்கின்றது. ஏனென்றால் சாவகச்சேரி ஊடாக முந்தி பஸ் ஓடிய காலத்தில் கனகம்புளியடி, கப்பூது, அந்தணதிடல் ஊடாக இந்த சந்திக்குதான் பஸ் எல்லாம் வந்து போறதாம். அது மட்டும் இல்லாமல் யாழ்ப்பாணம் நகரத்திலிருந்து போற பஸ் கூட புத்தூர் வழியாக வந்து கப்பூது வந்து இந்த சந்தி வந்து தான் பருத்தித்துறை போகும். அப்படியாக இந்த சந்தி ஒரு முக்கியமான ஒரு இடமாக விளங்கியிருந்தது என்றால் மிகையாகாது. அதுமட்டும் இல்லாமல் இந்த சந்தியை  ஆயம் என்றும்  ஆயக்கடவ

அப்பிள் கொம்பனி 2015 போன் விற்பனைக்கு என்று ஒரு முறைமை ஒன்றை அறிமுகம் செய்திருந்தது . அதன் பெயர் “i phone upgrade program. “ அது பற்றி தெரியுமா?

அதன்படி ஒருவர் புது போன் வாங்கனும் என்றால் குறிப்பிட்ட அளவு பணத்தை மட்டும் செலுத்தி (£ 69 ) மிகுதியை 20 மாத தவணைகளாக பிரித்து செலுத்தலாம் . இதற்கு வட்டி இல்ல .  ஆனால் இந்த முறையில் போன் வாங்குவது என்றால் "apple care " என்கிற சேவையையும் வாங்க வேண்டும் . அதன் பெறுமதி£ 199 . Apple care என்பது ஒரு warrenty . குறிப்பிட்ட காலத்துக்கு techincal சம்பந்தமான பிழைகள் மற்றும் போன் உடைவு என்பவற்றுக்கான உத்தரவாதமாகும் . போன் கீழே விழுந்து உடைந்தால் கூட அவர்கள் திருத்தி தருவார்கள் . முழு காசு கொடுத்து போன் வாங்குற ஆட்களே இந்த சேவை யையும் பணம் செலுத்தி பெற்று கொள்வார்கள் . போன் தொலைந்து போவதற்கு இது பிரயோகமாகாது  எனவே இதன் படி போன் காசு + apple care காசான 199 உம் கூட்டி முதலில் கட்டும் 69 பவுண்ட்ஸ் ஐ கழிச்சு வாற தொகையை 20 ஆல் பிரித்து வரும் தொகையை ஒவ்வொரு மாதமாக செலுத்தலாம்  இந்த iphone upgrade program ஐ லண்டனில் barclays வங்கியின் barclays finance partners எனும் நிறுவனம் வழங்குது . வழமையாக கடன் தரும்போது செய்யப்படும் கிரெடிட் செக் செய்யப்பட்டு அந்த கடன் வாழங்குவதற்கு உரிய தகுதி உள்ளதாய

இந்த பதிவை இட்டமைக்கு பெண்கள் மன்னிக்கவும்!

ஒரு நல்ல சிந்தனையில் பதிவு செய்துள்ளேன் தவறான என்னத்தில் பதிவு இடவில்லை அவசியம் ஆண்கள் படிக்கவும்  பெண்களும்  படியுங்கள் படித்த பின் உங்கள் கருத்துக்களை சொல்லவும்... ஒரு சில ஆணகள் என்னை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கலாம் இருப்பினும்  நானும் ஒரு ஆணாக இருப்பதால் நான் படித்து தெரிந்ததை என் தோழர்களும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்  பெண்களின் மாதவிடாய் காலத்தில் ஆண்களால்  தீட்டப்பட்ட வேண்டியவர்கள்   அல்ல! மாதவிடாய் காலத்தில் ஆண்களால் பாஷத்துடனும் அரவணைப்புடனும் பாதுகாப்புடணும் பாதுகாக்க வேண்டும் அதுவே ஆணின் சிறப்பு நன்றி வணக்கம் அவளின் உடலியல் செயல் பற்றி வெளிப்படையாக பேசுவதை, அருவருப்பாகவும் அவமானமாகவும் இன்னும் பார்க்கிறது கூன் விழுந்த வளர்ந்த சமூகம்..!! தீட்டுப் பட்டவள் அவளென சாமி அறையிலிருந்து சமையலறை வரை செல்லக்கூடாது, ஊறுகாயைத் தொடக்கூடாது, என்று தள்ளி ஒதுக்கி சீரழிக்கிறது அறிவாளி சமூகம்..!! சமுதாய பூச்சாண்டிகளே பயம் காட்டியது போதும் அவளைச் சுற்றி கட்டப்படும் கட்டுக்கதைகளும், கற்பனைகளும் பெண்ணை இன்னும் புண்ணாய் ஆக்குகின்றன.!! அகத்தின் செயலுக்கு புறத்தில் குறை கூறும் இந்த சமூ

விபசார bigbossகு திரைக்கதை வசனம் எழுதுவது யார்?

பிக்பாஸ் செய்யும் நுணுக்கமான மூளை சலவை   #சினிமா கூத்தாடிகள் மற்றும் #அரசியல் விஐபி-க்கள் சிலரைத் ஒரே குடும்பமாக வீட்டிற்குள் அடைக்கிறார்கள்.                அங்கு ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு உறவுமுறை உருவாகிறது. அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, மகன், மகள் என்று, பின்னர் வாரம் ஒருமுறை எலிமினேஷன் என்ற பெயரில் ஒவ்வொருவரும் சக உறுப்பினர்களை ஏதோவொரு காரணத்திற்காக கட்டாயம் எலிமினேஷன் செய்கின்றனர். கோமாளி மக்களையும் எலிமினேஷன் செய்ய சொல்லுகின்றனர் காரணம்  எத்தனை கோமாளி மக்கள் Voting  பண்ணி இருக்குனு பார்பதற்கு . ஆனால் விபசார bigbossகு திரைக்கதை வசனம் எழுதிரவன் தான் யார் வெளியேறனும் என்று முடிவெடுப்பான்😂 பிக்பாஸ் மூன்று பாகத்திலுமே நீங்கள் கூர்ந்து கவனித்தீர்கள் என்றால், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்குள்ளும் முறைதவறி கட்டித்தழுவுவது, முத்தம் கொடுப்பதுமாக இருக்கிறார்கள். காதல் என்று எதையாவது கிளப்பி விடுகிறார்கள். தன்னை அப்பாவாக காட்டிக்கொள்ளும் சேரன் பார்க்கின்ற எல்லா பெண்களையும் கட்டித்தழுவுகிறார். தனது மகள் முறையான லோஸ்லியாவை கசக்கி எடுக்கிறார்.    நண்பர்களே கூறுங்கள் உங்கள் எவர் வீட்

சட்டியை தோண்டி எடுத்த உடனேயே ஆணியால் J Y k பெயர்கள் எழுதி உள்ளனர் தமிழ்மொழியை மறைத்து வேற்றுமொழி நாகரிக மக்கள் கீழடியில் வாழ்ந்ததாக காமிப்பதற்கு

புதிதாக எழுதினத்துக்கும் 2600 வருடங்கள் முதல் எழுதின எழுத்துக்கும் வித்தியாசம் தெரியாதா என்ன?       2600வருடங்கள் என்று சொல்வதும் பொய் பல லச்சம் வருடங்கள் பழமை வாய்ந்தது தமிழனின் கோவில் நாகரிகம்.      #யாரும் கறி சமைக்கிற சட்டி அல்லது கள்ளு இறக்கும் சட்டியில் பெயர் எழுதுவானா ? #கீழடியில் தொழிசாலைகள் , தண்ணீர் செல்லும் குழாய்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இவ்வளவு தொழில்நுற்பம் தெரிந்தவன் தனக்கென்று ஒரு மொழி இல்லாமலா இருந்திருப்பான்? #கீழடி #அகழ்வு  ஆரட்சியில்  இரண்டு வீடுகள் அளவிலான இடத்தை மட்டும் தோண்டி அதிலுள்ள பொருள்களை எடுத்து விட்டு அதை வைத்து தமிழனின்  ஒரு சில வரலாற்றை மட்டுமே கணக்கிட முடியும் ஏனென்றால் அது இரு பொதுமக்களின் வீடுகளாக  இருக்கலாம். ஒரு கிராமத்தில் 100 ற்று   கணக்கான வீடுகள் இருக்கும் ஒரே  ஒரு கோவில் தான் ஒரு கிராமத்தில் இருக்கும் ..#கீழடி #அகழ்வு  ஆரட்சியில் நமது   இரு மூதாதையர்  வீட்டினை தோட்டி  எடுத்துவிட்டு கோவில் நாகரீகத்தில் தமிழன் வாழ  இல்லை என்று சொல்லும் மனிதர்கள் கோமாளிகளை விட கேவலம் ....   01'/'வீதம் மட்டுமே தமிழனுடைய பொருள்கள் கண்டெடுத்துள்ளனர்

சனி எம்மை பிடித்தால் என்ன நடக்கும் தெரியுமா? சிவனையே சனி பிடித்த கதை உங்களுக்கு தெரியுமா?

சனி பகவான் என்றாலே பயம்தான். சனி பிடித்துக்கொள்வாரோ என்று பயந்து முன்னதாகவே பரிகாரம் செய்வார்கள். கயிலாய நாதன் சிவபெருமானை அந்த சனிபகவான் பிடித்த கதை தெரியுமா? தவறு செய்தவர்களை மட்டுமே தண்டிப்பார் சனிபகவான். முன்ஜென்ம வினைக்கேற்ப இந்த பிறவியில் ஒருவரின் ராசிக்கட்டத்தில் அமர்கிறார் சனிபகவான். ஏழரைச் சனி ஒருவருடைய வாழ்வில் முதல்முறை வரும் போது அவர் பள்ளி, கல்லூரிப் பருவத்தில் இருப்பார். அச்சமயத்தில் படிப்பில் கவனம் குறையும். பரீட்சை ஹாலுக்குள் போனதும் படித்தது மறந்து போகும். சோம்பல் வரும். எட்டு மணிக்குத்தான் எழுந்திருக்க முடியும். தேவையற்ற பழக்க வழக்கங்கள் வந்து சேரும். சனி சிவனைப் பிடித்த கதை சனி பகவான் புதிதாக கர்மகாரகனாக பதவி ஏற்றிருந்த காலம். ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், மன்னன், மக்கள், முனிவர்கள், தேவர்கள், சாமானியர்கள் என்று பேத பாவமில்லாமல், சனிபகவான் அவரவர்கள் கர்மத்துக்கேற்ப அவர்களை துவைத்து (கஷ்டம்) பிழிந்து கொண்டிருந்தார். திடீரென்று ஏற்பட்ட இந்த துன்பத்தை முனிவர்கள், தேவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சனி மீது மிகுந்த கோபம் கொண்டார்கள். இதற்கு என்ன வழி பரி

காப்பான் திரைவிமர்சனம்!

கதைக்களம்  காப்பான் படத்தின் ஆரம்பத்திலேயே நாட்டின் பிரதமர் மோகன்லாலை கொலை செய்ய ஒரு திட்டம் நடக்கின்றது. அதை தொடர்ந்து சூர்யா சில நாசவேலைகளை செய்கிறார். என்ன என்று பார்த்தால் அவை அனைத்தும் சூர்யா மோகன்லாலை காப்பாற்ற செய்யும் வேலை, அவரும் ஒரு ரகசிய உளவாளி என தெரிய வருகிறது. பிறகு பிரதமரின் பாதுகாப்பு பிரிவில் சூர்யா சேர, அதை தொடர்ந்து பிரதமரின் உயிருக்கு பலரும் குறி வைக்கின்றனர். அந்த குறியில் இருந்து சூர்யா மோகன்லாலை காப்பாற்றுகிறாரா? அந்த குறி யார் வைக்கிறார்கள் என்பதே மீதிக்கதை.

About John Deere Tractors

John Deere India Private Limited is a subsidiary of Deere & Company, USA in India. One of the most performing manufacturers, John Deere Tractors date back to 1998 when they rolled their manufacturing unit the famous L&T Group in India. To the date, this very manufacturing company has established itself in the Indian Domain.             With extremely efficient tractors John Deere has been a part of breaking the rock bottom hit of the Tractor Industry. The tractor prices that suit the masses and the tractor specifications rolling along with make this company one of the most liked manufacturers. With a wide range of Tractors, Farm Implements and Harvesters, the company has managed to make the farming standards high.               On manufacturing tractors of HP ranging between 28 to 120 Plus, John Deere has satisfied the Indian Farming needs to a great extent.

tamil melody songs mp3 - list

Yarum illatha thivu onru vendum vendum மகராணி மகராணி மன்மத மகராணி மண்குடிசை தேடிவந்த , சோறு கொண்டு போறபுள்ள இந்த சும்மாடு , அன்பே நீ என்ன கண்ணனோ கள்வனோ ? மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று நூறாண்டுக்கு ஒருமுறை பூக்கின்ற பூவல்லவா நினைத்தது யாரே நீ தானே . மல்லிகையே மல்லிகையே தூதாக போ ! நினைக்காத நேரமில்லை உன்னை ... நினைக்காத .! காதல் ஒவியம் பாடும் காவியம் தேன் சிந்தும் ..! பொன் மாலையில் தமிழ் கீதம் செவ்வந்தி பூவெடுத்தேன் அதில் உன் முகம்