Skip to main content

அப்பிள் கொம்பனி 2015 போன் விற்பனைக்கு என்று ஒரு முறைமை ஒன்றை அறிமுகம் செய்திருந்தது . அதன் பெயர் “i phone upgrade program. “ அது பற்றி தெரியுமா?


அதன்படி ஒருவர் புது போன் வாங்கனும் என்றால் குறிப்பிட்ட அளவு பணத்தை மட்டும் செலுத்தி (£ 69 ) மிகுதியை 20 மாத தவணைகளாக பிரித்து செலுத்தலாம் . இதற்கு வட்டி இல்ல . 

ஆனால் இந்த முறையில் போன் வாங்குவது என்றால் "apple care " என்கிற சேவையையும் வாங்க வேண்டும் . அதன் பெறுமதி£ 199 . Apple care என்பது ஒரு warrenty . குறிப்பிட்ட காலத்துக்கு techincal சம்பந்தமான பிழைகள் மற்றும் போன் உடைவு என்பவற்றுக்கான உத்தரவாதமாகும் . போன் கீழே விழுந்து உடைந்தால் கூட அவர்கள் திருத்தி தருவார்கள் . முழு காசு கொடுத்து போன் வாங்குற ஆட்களே இந்த சேவை யையும் பணம் செலுத்தி பெற்று கொள்வார்கள் . போன் தொலைந்து போவதற்கு இது பிரயோகமாகாது 

எனவே இதன் படி போன் காசு + apple care காசான 199 உம் கூட்டி முதலில் கட்டும் 69 பவுண்ட்ஸ் ஐ கழிச்சு வாற தொகையை 20 ஆல் பிரித்து வரும் தொகையை ஒவ்வொரு மாதமாக செலுத்தலாம் 

இந்த iphone upgrade program ஐ லண்டனில் barclays வங்கியின் barclays finance partners எனும் நிறுவனம் வழங்குது . வழமையாக கடன் தரும்போது செய்யப்படும் கிரெடிட் செக் செய்யப்பட்டு அந்த கடன் வாழங்குவதற்கு உரிய தகுதி உள்ளதாயின் உடனடியாகவே நீங்கள் போனை வாங்கலாம் . இதற்காக 10 நிமிடங்கள் கூட தேவைப்படாது 

இதன் படி நீங்கள் வாங்கும் போனுக்கான காசை 20 மாதமும் செலுத்தினால் போன் உங்களுக்கு சொந்தமாகும் . அடுத்த புது போன் வரும்போது ( 12 மாதங்களில் ) இதை நீங்கள் கொடுத்து புது போன் க்குரிய iphone upgrade program இல் இணையலாம் . இதற்காக எந்த வித மேலதிக கட்டணங்களும் செலுத்த தேவையில்ல . புது போனின் விலைக்கு ஏற்ற வகையில் மாத காசு மட்டும் மாறு படும். 

ஒவ்வொரு புது போனும் வர வர மாத்தி கொண்டே இருக்கலாம் . ஆனால் எந்த போனும் உங்களுக்கு சொந்தமாகாது . கிட்ட தட்ட புது போனை 12 மாத காலம் வாடகை செலுத்தி பயன்படுதுற மாதிரி தான் 
###

உதாரணமாக 

Iphone 11 pro max இன் விலை - £1299 
Apple care - £ 199 
மொத்தம் = £1498 

இதில் முதலாவதாக £69  செலுத்தனும் . மிச்சம் £1429

இந்தத்தொகை 20 மாதங்களுக்கு கட்ட வேண்டும் 

ஆகவே ஒரு மாதத்துக்கு 71 .45 கட்டினால் சரி 

####

இந்த முறையிலேயே நான் போன் வாங்குறனான் . 
என்னிடம் இருக்கும் போன் கொடுத்து ஒவ்வொரு முறையும் புது போன் வர புது போன் வாங்குவேன் 

அவ்வளவு தான் . கடைசியில் என்னிடம் போன் இருக்காது .

எனவே பழைய போனை தாங்கோ அண்ணா என்று கொண்டு in box பக்கம் யாரும் வராதெங்கோடா / டி 

நன்றி
சிவரதன் வயிரவநாதன் முகநூல் இருந்த பதிவு 

Popular posts from this blog

சம்பந்தர் கடை ஒரு பெட்டிக் கடையின் கதை!

சம்பந்தர் கடை. ஒரு பெட்டிக்கடை சம்பந்தர் கடையடி என இடத்தின் பெயரானது. ஆக இக்கடைக்கு கரவெட்டியின் பிரபல்யமான மூத்த அரசியல்வாதியான சிவசிதம்பரத்தின் வயதிருக்கும். நூறு ஆண்டுகள். யாழ் குடாநாட்டின் புராதனமான கிராமங்களிலொன்று கரவெட்டி. அக்கிராமத்தின் "நடுச்சென்ரறில்" இருக்கிறது இக்கடை.  இன்று உவர் நீர்க் கிணறுகளும் வயல் நிலங்களும் கொண்ட   ஊரின் இப்பகுதி Real Estate பெறுமதி கூடிய பகுதியல்ல. செம்பாட்டு மண்ணும் நன்னீரும் கொண்ட நெல்லியடிப் பகுதிதான் இன்று விலைகூடிய பகுதி. ஆனால் நூறாண்டுகளுக்கு முதல் நெல் வயல்களும் மாடுகளுக்கான மேய்ச்சல் தரைகளும் கொண்ட  பள்ள நிலங்களான சம்பந்தர் கடையடிப் பகுதிகளே ஊரில் விலைகூடிய பகுதிகளாக இருந்தன. சித்த மணியம் போன்ற கரவெட்டியின் செல்வந்த நிலச்சுவாந்தர்களின்  வீடுகள் இப்பகுதிகளிலேயே இருந்தன.     - ஆசிரியர் குறிப்பு #சம்பந்தர்கடை_என்_நினைவில் By கரவெட்டி ராஜி கரவெட்டி  சம்மந்தர்கடை ஒரு உணர்வு பூர்வமான இடம் தான். கரவெட்டி பிரதேசத்தின் ஷொப்பிங் மால் தான் எங்கள் சம்மந்தர்கடை, அங்கு பெட்டிக்கடையில் இருந்து  பெருங்கடை வரைக்கும் உண்டு இன்று வரை. நாலு றோட்டு

கரவெட்டி கிராமத்தின் வரலாறு!

கரவெட்டி கிராமம் ஆனது வதிரி உடுப்பிட்டி துன்னாலை கரணவாய் என்று பெயர் சொல்லக்கூடிய கிராமங்களை எல்லையாக கொண்டு வடமராட்சியில் ஒரு முக்கிய கிராமம். இந்த கரவெட்டியில் நெல்லியடி, சம்மந்தர் கடையடி, கிளவிதோட்டம், யார்க்கரை, அத்துளு, கட்டைவேலி என்றவாறாக சிறு சிறு கிராமக்குடிகளை கொண்டு விளங்குகிறது. ஊர் வழக்கில் நெல்லியடியை கரவெட்டி என்று சொல்லுவதில்லை. அதை நெல்லியடி என்றே சொல்லிக்கொள்ளுவார்கள். கேவளை, தூவெளி, நுகவில் வயல் பகுதி, சாமியன் அரசடி, கோவில்சந்தை, போன்றவற்றை எல்லை கோடுகளாக கொண்டு அழகிய கிராமமாக விளங்குகிறது இதில் கேவளை சந்தி முந்தி ஒரு முக்கியமான இடமாக இருந்திருக்கின்றது. ஏனென்றால் சாவகச்சேரி ஊடாக முந்தி பஸ் ஓடிய காலத்தில் கனகம்புளியடி, கப்பூது, அந்தணதிடல் ஊடாக இந்த சந்திக்குதான் பஸ் எல்லாம் வந்து போறதாம். அது மட்டும் இல்லாமல் யாழ்ப்பாணம் நகரத்திலிருந்து போற பஸ் கூட புத்தூர் வழியாக வந்து கப்பூது வந்து இந்த சந்தி வந்து தான் பருத்தித்துறை போகும். அப்படியாக இந்த சந்தி ஒரு முக்கியமான ஒரு இடமாக விளங்கியிருந்தது என்றால் மிகையாகாது. அதுமட்டும் இல்லாமல் இந்த சந்தியை  ஆயம் என்றும்  ஆயக்கடவ

என்.. ஊர் கரவெட்டி..
கரவெட்டியான்
 என்பதில்
எனக்குப் பெருமை.

என்.. ஊர் கரவெட்டி..

கரவெட்டியான
என்பதில்
எனக்குப் பெருமை.

கரவு.. எட்டி
என்பதனால்
கரவெட்டி ஆனதாய்
பெரியவர்கள்
சொல்லக் கேள்வி..

கற்றாரும்.. மிக்காரும்
கனிந்திருப்பர்
கோயில் 
மணி ஒலியில்
புள்ளினங்கள் பாட்டிசைக்க
பசுந்தாள் தரவையில்
ஆவினங்கள் நடனமிடும்
அழகு நிறை
ஆடம்பரமில்லா கரவெட்டி..

கலைமகளின்
ஆட்சி இங்கே நடப்பதானால்
தடக்கி விழுந்தாலும்
வாத்தியார்
வீட்டுப் படலையே தஞ்சம்..

இயல் ..இசை.. நாடகம்
எல்லாம்
முளை கொண்ட தமிழுலகு..

இயல் .. இசை ..நாடக
விற்பன்னராய்
முச்சந்தி இலக்கியம் படைத்த
மனோன்மணி நடராசாவும்
எங்கள் ஊர் தானே..

கவியுலகின் மன்னவனாய்
எங்கள் 
மன்னவன் கந்தப்பு 
ஆசானின். நகைச்சுவைக் கவிக்கீடாய்
ஏது முண்டோ..

சிலேடைக் கவியை
சிறப்பாய்த் தந்த
பண்டிதர் வீரகத்தி
எம் ஊரின் சிறப்பன்றோ..
அவர் வழியில்
சிலேடைக் கவி தந்த
கணபதிப்பிள்ளை.. சிவராஜசிங்கம்
ஊருக்கு சேர்த்த
பெருமைதனை
என்ன வென்று சொல்வேன்..

தானே கவி எழுதி
தானே மெட்டமைத்துப் பாடும்
யதார்த்தனை
எப்படி மறப்பது..

இலக்கியத்தமிழையும்
பண்டித தமிழையும்
மேட்டுக் குடியின் ஆங்கிலத்தையும்
எங்கள் ஒழுங்கை வரை
கொண்டு வந்த
பண்டிதர் பொன் கணேசன்
அவ