Skip to main content

அப்பிள் கொம்பனி 2015 போன் விற்பனைக்கு என்று ஒரு முறைமை ஒன்றை அறிமுகம் செய்திருந்தது . அதன் பெயர் “i phone upgrade program. “ அது பற்றி தெரியுமா?


அதன்படி ஒருவர் புது போன் வாங்கனும் என்றால் குறிப்பிட்ட அளவு பணத்தை மட்டும் செலுத்தி (£ 69 ) மிகுதியை 20 மாத தவணைகளாக பிரித்து செலுத்தலாம் . இதற்கு வட்டி இல்ல . 

ஆனால் இந்த முறையில் போன் வாங்குவது என்றால் "apple care " என்கிற சேவையையும் வாங்க வேண்டும் . அதன் பெறுமதி£ 199 . Apple care என்பது ஒரு warrenty . குறிப்பிட்ட காலத்துக்கு techincal சம்பந்தமான பிழைகள் மற்றும் போன் உடைவு என்பவற்றுக்கான உத்தரவாதமாகும் . போன் கீழே விழுந்து உடைந்தால் கூட அவர்கள் திருத்தி தருவார்கள் . முழு காசு கொடுத்து போன் வாங்குற ஆட்களே இந்த சேவை யையும் பணம் செலுத்தி பெற்று கொள்வார்கள் . போன் தொலைந்து போவதற்கு இது பிரயோகமாகாது 

எனவே இதன் படி போன் காசு + apple care காசான 199 உம் கூட்டி முதலில் கட்டும் 69 பவுண்ட்ஸ் ஐ கழிச்சு வாற தொகையை 20 ஆல் பிரித்து வரும் தொகையை ஒவ்வொரு மாதமாக செலுத்தலாம் 

இந்த iphone upgrade program ஐ லண்டனில் barclays வங்கியின் barclays finance partners எனும் நிறுவனம் வழங்குது . வழமையாக கடன் தரும்போது செய்யப்படும் கிரெடிட் செக் செய்யப்பட்டு அந்த கடன் வாழங்குவதற்கு உரிய தகுதி உள்ளதாயின் உடனடியாகவே நீங்கள் போனை வாங்கலாம் . இதற்காக 10 நிமிடங்கள் கூட தேவைப்படாது 

இதன் படி நீங்கள் வாங்கும் போனுக்கான காசை 20 மாதமும் செலுத்தினால் போன் உங்களுக்கு சொந்தமாகும் . அடுத்த புது போன் வரும்போது ( 12 மாதங்களில் ) இதை நீங்கள் கொடுத்து புது போன் க்குரிய iphone upgrade program இல் இணையலாம் . இதற்காக எந்த வித மேலதிக கட்டணங்களும் செலுத்த தேவையில்ல . புது போனின் விலைக்கு ஏற்ற வகையில் மாத காசு மட்டும் மாறு படும். 

ஒவ்வொரு புது போனும் வர வர மாத்தி கொண்டே இருக்கலாம் . ஆனால் எந்த போனும் உங்களுக்கு சொந்தமாகாது . கிட்ட தட்ட புது போனை 12 மாத காலம் வாடகை செலுத்தி பயன்படுதுற மாதிரி தான் 
###

உதாரணமாக 

Iphone 11 pro max இன் விலை - £1299 
Apple care - £ 199 
மொத்தம் = £1498 

இதில் முதலாவதாக £69  செலுத்தனும் . மிச்சம் £1429

இந்தத்தொகை 20 மாதங்களுக்கு கட்ட வேண்டும் 

ஆகவே ஒரு மாதத்துக்கு 71 .45 கட்டினால் சரி 

####

இந்த முறையிலேயே நான் போன் வாங்குறனான் . 
என்னிடம் இருக்கும் போன் கொடுத்து ஒவ்வொரு முறையும் புது போன் வர புது போன் வாங்குவேன் 

அவ்வளவு தான் . கடைசியில் என்னிடம் போன் இருக்காது .

எனவே பழைய போனை தாங்கோ அண்ணா என்று கொண்டு in box பக்கம் யாரும் வராதெங்கோடா / டி 

நன்றி
சிவரதன் வயிரவநாதன் முகநூல் இருந்த பதிவு 

Popular posts from this blog

இந்த ஒரு பொருள் சாப்பிட்டு முடிச்சதும் தண்ணீர் குடிக்கக் கூடாது! ஏன் தெரியுமா?

வறுத்த மக்காச் சோளம் அல்லது பூட்டா அற்புதமான சுவையோடு ஆரோக்கியமான சிற்றுண்டி விருப்பமாகவும் இருக்கிறது. இருப்பினும், இதை உண்டவுடன் குடிநீரை உடனடியாக குடிப்பதால் பல்வேறு வகையான வயிற்றுக் கோளாறுகள் ஏற்படுமாம். நீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் இரைப்பைப் பிரச்சினைகள் மற்றும் வயிற்று வலிக்கும் இது வழிவகுக்கும். ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது? தண்ணீருடன் மக்காச் சோளம் அல்லது சோளக்கருது ஒன்றாக உட்கொள்ளும் போது ​பலர் வாய்வு மற்றும் கடுமையான வயிற்று வலி ஏற்படுவதாக புகார் செய்துள்ளனர். சோளக்கருது உண்டவுடன் குடிநீரை குடிப்பதன் மூலம் ஜீரண நொதிகள் இயல்பிலிருந்து பெருமளவு மாற்றமடைகின்றன எனவே செரிமான வேகம் குறைகிறது. சோளக்கருதில் உள்ள சிக்கலான கார்ப்ஸ் , ஸ்டார்ச் மற்றும் தண்ணீரின் நுகர்வு ஆகியவை வயிற்றில் உள்ள வாயுக்களை வெளியேற்றுவதற்கு வழிவகுக்கலாம். இதனால் வாய்வு , அசிடிட்டி மற்றும் கடுமையான வயிற்று வலி உருவாகும் என டாக்டர் அஷுடோஷ் கூறுகிறார். எவ்வளவு நுரம் கழித்து குடிக்கலாம்? சிறந்த நேர இடைவெளி, குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் இருக்க வேண்டும் என்று வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். இது தவிர, எலு...

கரவெட்டி கிராமத்தின் வரலாறு!

கரவெட்டி கிராமம் ஆனது வதிரி உடுப்பிட்டி துன்னாலை கரணவாய் என்று பெயர் சொல்லக்கூடிய கிராமங்களை எல்லையாக கொண்டு வடமராட்சியில் ஒரு முக்கிய கிராமம். இந்த கரவெட்டியில் நெல்லியடி, சம்மந்தர் கடையடி, கிளவிதோட்டம், யார்க்கரை, அத்துளு, கட்டைவேலி என்றவாறாக சிறு சிறு கிராமக்குடிகளை கொண்டு விளங்குகிறது. ஊர் வழக்கில் நெல்லியடியை கரவெட்டி என்று சொல்லுவதில்லை. அதை நெல்லியடி என்றே சொல்லிக்கொள்ளுவார்கள். கேவளை, தூவெளி, நுகவில் வயல் பகுதி, சாமியன் அரசடி, கோவில்சந்தை, போன்றவற்றை எல்லை கோடுகளாக கொண்டு அழகிய கிராமமாக விளங்குகிறது இதில் கேவளை சந்தி முந்தி ஒரு முக்கியமான இடமாக இருந்திருக்கின்றது. ஏனென்றால் சாவகச்சேரி ஊடாக முந்தி பஸ் ஓடிய காலத்தில் கனகம்புளியடி, கப்பூது, அந்தணதிடல் ஊடாக இந்த சந்திக்குதான் பஸ் எல்லாம் வந்து போறதாம். அது மட்டும் இல்லாமல் யாழ்ப்பாணம் நகரத்திலிருந்து போற பஸ் கூட புத்தூர் வழியாக வந்து கப்பூது வந்து இந்த சந்தி வந்து தான் பருத்தித்துறை போகும். அப்படியாக இந்த சந்தி ஒரு முக்கியமான ஒரு இடமாக விளங்கியிருந்தது என்றால் மிகையாகாது. அதுமட்டும் இல்லாமல் இந்த சந்தியை  ஆய...

தொப்பையை குறைக்கும் எளிய உடற்பயிற்சிகள்

தற்காலத்தில் அனைவருக்கும் பெரிய பிரச்சினையாக காணப்படும் தொப்பையை வீட்டிலேயே சில எளிய உடற்பயிற்சிகளை செய்து குறைப்பது எப்படி என பார்ப்போம். plank walks exercise: இரண்டு கைகளையும் நிலத்தில் ஊன்றி, பக்கவாட்டில் உடலை இயக்க வேண்டும். வலது கை, வலது காலை வலதுபக்கமாக சற்று கீழே இறக்கி, ஏற்ற வேண்டும். அதேபோல் இடது கால், இடது கையை இடதுபக்கமாக கீழே இறக்கி, பின் ஏற்ற வேண்டும். இவ்வாறு 20 முறை செய்ய வேண்டும். படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ள வேண்டும். Squats: கால்கள் எந்த அளவிற்கு வலுவாக உள்ளதோ, அந்தளவுக்கு உடலும் வலுவடையும். கைகளை நேரே நீட்டியவாறு, உடலை பாதியளவிற்கு கீழே இறக்கி, பின் மேலே ஏற்ற வேண்டும். சேரில் அமருவதை போல் அமர்ந்து செய்யும் உடற்பயிற்சி இது. இந்த பயிற்சியை செய்யும் போது உங்களின் கால் தொடைகளில் மாற்றம் தெரிவதை உணரலாம். Mountain Climbers: தண்டால் எடுப்பது போன்ற நிலையில் இருக்க வேண்டும். அப்போது மலை ஏறுவது போல் கால்களை ஒவ்வொன்றாக கொண்டு சென்று, பின் பழைய நிலைக்கு வரவேண்டும். தசைகள் எவ்வளவு வேலை செய்கிறதோ, அந்தளவிற்கு உடல் கொழுப்பு கரைக்கப்படும். toe To Bar:...