Skip to main content

கரவெட்டியில் சர்வதேசத் தரத்தில் உணவகங்கள்! பாராட்டத் தெரியாத ஆளுநர் அலுவலகம்!



கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 உணவகங்ள் 'ஏ' தரத்தில் இயங்குவதுடன் அனைத்து உணவங்களும் தொடர்ச்சியான கண்காணிப்பில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த வருடத்தில் மட்டும் உணவகங்களுக்கு எதிராக 42க்கு மேற்பட்ட வழக்குகள் பருத்தித்துறை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அண்மையில் சில உணவகங்களை மட்டும் தரிசித்த ஆளுநர் அலுவலகத்தைச் சார்ந்த சில பயிலுநர்கள் ஏற்கனவே பொதுச் சுகாதார பரிசோதகர்களால் திருத்த வேலைகளுக்காக கால அவகாசம் வழங்கப்பட்ட சில உணவகங்களில் மட்டும் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வேறு பிரதேசங்களில்  எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும் இணைத்து ஊடகங்களில் வெளியிட்டதுடன் மிகவும் நல்ல நிலையில் இயங்கி வரும் தரமான உணவகங்களைத் தரிசித்த போதிலும் அதனது படங்களை வேண்டுமென்றே இருட்டடிப்புச் செய்துள்ளார்கள். 

அண்மையில் நடைபெற்ற ஜி.எம்.பி எனப்படும் சர்வதேச தரச்சான்றிதழ் விழாவில் கரவெட்டியைச் சார்ந்த 3 உணவங்கள் தெரிவு செய்யப்பட்டு அதனது தரங்கள் உறுதி செய்யப்பட்டு விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டன. இதற்காக அப்பகுதியினைச் சேர்ந்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பல வருடங்களாக அரும்பாடு பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர வெகு விரைவில் அனைத்து உணவங்களுக்குமான தரக் கணிப்பீடு கணணி மயப்படுத்தப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது. 
ஆளணிக்குறைபாடு உட்பட பல்வேறு பட்ட நெருக்கடிகளுக்கு மத்தியில் பணியாற்றும் பணியாளரர்களுக்கும் மிகுந்த சிரமங்களின் மத்தியில் தமது தரத்தினைத் தக்கவைத்துக் கொள்ளும் உணவக உரிமையாளர்களுக்கும் ஆளுநர் அலுவலகத்தின் இவ்வாறான செயற்பாடுகள் மிகுந்த மனச் சோர்வினை ஏற்படுத்தியிருக்கின்றன. பொது மக்களின் பார்வைக்காக சில புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.








Popular posts from this blog

சம்பந்தர் கடை ஒரு பெட்டிக் கடையின் கதை!

சம்பந்தர் கடை. ஒரு பெட்டிக்கடை சம்பந்தர் கடையடி என இடத்தின் பெயரானது. ஆக இக்கடைக்கு கரவெட்டியின் பிரபல்யமான மூத்த அரசியல்வாதியான சிவசிதம்பரத்தின் வயதிருக்கும். நூறு ஆண்டுகள். யாழ் குடாநாட்டின் புராதனமான கிராமங்களிலொன்று கரவெட்டி. அக்கிராமத்தின் "நடுச்சென்ரறில்" இருக்கிறது இக்கடை.  இன்று உவர் நீர்க் கிணறுகளும் வயல் நிலங்களும் கொண்ட   ஊரின் இப்பகுதி Real Estate பெறுமதி கூடிய பகுதியல்ல. செம்பாட்டு மண்ணும் நன்னீரும் கொண்ட நெல்லியடிப் பகுதிதான் இன்று விலைகூடிய பகுதி. ஆனால் நூறாண்டுகளுக்கு முதல் நெல் வயல்களும் மாடுகளுக்கான மேய்ச்சல் தரைகளும் கொண்ட  பள்ள நிலங்களான சம்பந்தர் கடையடிப் பகுதிகளே ஊரில் விலைகூடிய பகுதிகளாக இருந்தன. சித்த மணியம் போன்ற கரவெட்டியின் செல்வந்த நிலச்சுவாந்தர்களின்  வீடுகள் இப்பகுதிகளிலேயே இருந்தன.     - ஆசிரியர் குறிப்பு #சம்பந்தர்கடை_என்_நினைவில் By கரவெட்டி ராஜி கரவெட்டி  சம்மந்தர்கடை ஒரு உணர்வு பூர்வமான இடம் தான். கரவெட்டி பிரதேசத்தின் ஷொப்பிங் மால் தான் எங்கள் சம்மந்தர்கடை, அங்கு பெட்டிக்கடையில் இருந்து  பெருங்கடை வரைக்கும் உண்டு இன்று வரை. நாலு றோட்டு

கரவெட்டி கிராமத்தின் வரலாறு!

கரவெட்டி கிராமம் ஆனது வதிரி உடுப்பிட்டி துன்னாலை கரணவாய் என்று பெயர் சொல்லக்கூடிய கிராமங்களை எல்லையாக கொண்டு வடமராட்சியில் ஒரு முக்கிய கிராமம். இந்த கரவெட்டியில் நெல்லியடி, சம்மந்தர் கடையடி, கிளவிதோட்டம், யார்க்கரை, அத்துளு, கட்டைவேலி என்றவாறாக சிறு சிறு கிராமக்குடிகளை கொண்டு விளங்குகிறது. ஊர் வழக்கில் நெல்லியடியை கரவெட்டி என்று சொல்லுவதில்லை. அதை நெல்லியடி என்றே சொல்லிக்கொள்ளுவார்கள். கேவளை, தூவெளி, நுகவில் வயல் பகுதி, சாமியன் அரசடி, கோவில்சந்தை, போன்றவற்றை எல்லை கோடுகளாக கொண்டு அழகிய கிராமமாக விளங்குகிறது இதில் கேவளை சந்தி முந்தி ஒரு முக்கியமான இடமாக இருந்திருக்கின்றது. ஏனென்றால் சாவகச்சேரி ஊடாக முந்தி பஸ் ஓடிய காலத்தில் கனகம்புளியடி, கப்பூது, அந்தணதிடல் ஊடாக இந்த சந்திக்குதான் பஸ் எல்லாம் வந்து போறதாம். அது மட்டும் இல்லாமல் யாழ்ப்பாணம் நகரத்திலிருந்து போற பஸ் கூட புத்தூர் வழியாக வந்து கப்பூது வந்து இந்த சந்தி வந்து தான் பருத்தித்துறை போகும். அப்படியாக இந்த சந்தி ஒரு முக்கியமான ஒரு இடமாக விளங்கியிருந்தது என்றால் மிகையாகாது. அதுமட்டும் இல்லாமல் இந்த சந்தியை  ஆயம் என்றும்  ஆயக்கடவ

என்.. ஊர் கரவெட்டி..
கரவெட்டியான்
 என்பதில்
எனக்குப் பெருமை.

என்.. ஊர் கரவெட்டி..

கரவெட்டியான
என்பதில்
எனக்குப் பெருமை.

கரவு.. எட்டி
என்பதனால்
கரவெட்டி ஆனதாய்
பெரியவர்கள்
சொல்லக் கேள்வி..

கற்றாரும்.. மிக்காரும்
கனிந்திருப்பர்
கோயில் 
மணி ஒலியில்
புள்ளினங்கள் பாட்டிசைக்க
பசுந்தாள் தரவையில்
ஆவினங்கள் நடனமிடும்
அழகு நிறை
ஆடம்பரமில்லா கரவெட்டி..

கலைமகளின்
ஆட்சி இங்கே நடப்பதானால்
தடக்கி விழுந்தாலும்
வாத்தியார்
வீட்டுப் படலையே தஞ்சம்..

இயல் ..இசை.. நாடகம்
எல்லாம்
முளை கொண்ட தமிழுலகு..

இயல் .. இசை ..நாடக
விற்பன்னராய்
முச்சந்தி இலக்கியம் படைத்த
மனோன்மணி நடராசாவும்
எங்கள் ஊர் தானே..

கவியுலகின் மன்னவனாய்
எங்கள் 
மன்னவன் கந்தப்பு 
ஆசானின். நகைச்சுவைக் கவிக்கீடாய்
ஏது முண்டோ..

சிலேடைக் கவியை
சிறப்பாய்த் தந்த
பண்டிதர் வீரகத்தி
எம் ஊரின் சிறப்பன்றோ..
அவர் வழியில்
சிலேடைக் கவி தந்த
கணபதிப்பிள்ளை.. சிவராஜசிங்கம்
ஊருக்கு சேர்த்த
பெருமைதனை
என்ன வென்று சொல்வேன்..

தானே கவி எழுதி
தானே மெட்டமைத்துப் பாடும்
யதார்த்தனை
எப்படி மறப்பது..

இலக்கியத்தமிழையும்
பண்டித தமிழையும்
மேட்டுக் குடியின் ஆங்கிலத்தையும்
எங்கள் ஒழுங்கை வரை
கொண்டு வந்த
பண்டிதர் பொன் கணேசன்
அவ