Skip to main content

பெண்ணாய் பிறக்க மாதவம் செய்திட வேண்டும்

                              ‘பெண்கள் நம் நாட்டின் கண்கள்’, ‘பெண்ணாய் பிறக்க மாதவம் செய்திட வேண்டும்’. இந்த முழக்கங்களை நாம் மேடைகளில் கேட்கலாம். ஏன் இந்த முழக்கங்கள்? ஏன் ஆண்களை நாட்டின் கண்கள் என சொல்லவில்லை? ஏன் பெண்ணாய் பிறக்க மாதவம் செய்தல் வேண்டும் என்கிறோம்? இம் முழக்கங்கள் பெண் இழிவானவள், அவள் ஆணுக்கு  அடிமை என்றெண்ணும் சமூகத்தில் இருந்து வந்தவை.
ஆணும் பெண்ணும் சமமாக நடத்தப்படும் இடத்தில் இம்முழக்கங்கள் தேவையே இல்லை.
                   ஒரு வீட்டில் கணவன் வெளியே சென்று பணம் ஈட்டி வருகிறான். மனைவி வீட்டுக்குள் இருந்து வீட்டையும் குழந்தைகளையும் கவனித்துக் கொள்கிறாள். இது வேலைப் பகிர்வுதானே அன்றி பெண் அடிமைத்தனம் இல்லை என்று கூறலாம். கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால் பெண் எவ்வளவு அடிமைபட்டுக்கிடக்கிறாள் என்று தெரியும்.                     
                      கணவனின் வேலை நேரம் அதிகபட்சம் எட்டு மணி நேரம்.பெண்ணின் வேலை நேரம் நாள் முழுவதும் நடுவில் சில நாடகத் தொடர்கள் பார்க்கிறாள். நன்றாக கவனித்தால் பெண்கள் படங்கள் பார்ப்பதை விட தொடர்கள் பார்பதையே விரும்புகின்றனர் என்பது  தெரியும். ஏன் அப்படி?                   தொடர்களில் நல்லவளும்  பெண், கெட்டவளும் பெண்.அதில் ஆண்கள் பொம்மை மாதிரி வந்து போவார்கள். அது அவர்களுக்கு மிகவும் பிடித்து போகிறது. தான் செய்ய முடியாததை, தான் செய்ய நினைப்பதை இன்னொரு பெண் செய்கிறாள்.அவளை தன் பிரதிநிதியாக ஏற்றுக்கொள்கிறாள்.அவளை தாமாகவே பாவிக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் அவர்கள் தொடர்கள் பார்த்து சிரிப்பதும் அழுவதும். அதை ஆண்கள் கேலி செய்கிறார்கள்।இதே ஆண் ஒரு படத்தில் கதாநாயகன் பத்து பேரை அடிக்கையில்,நாயகிக்கு முத்தம் கொடுக்கையில் கைத்தட்டி விசில் அடிக்கிறான். அவன் ஏன் அவ்வாறு செய்கிறான்?தான் செய்ய நினைப்பதை, முடியாததை கதாநாயகன் செய்கையில் அவனை தாமாகவே நினைக்கிறான். அதனால் அவன் கேலி செய்யப்படவில்லை. ஆண் என்பதால் அவனது செய்கை பெரிது படுத்தபடுவதில்லை. இத்தனைக்கும் அவன் பல நூறு பேரின் முன்னால் செய்கிறான். ஆனால் பெண்ணை அப்படி வெளிப்படுத்த இச்சமுகம் விடுவதில்லை. அவள் தனக்கு என விதிக்கப்பட்ட செயல்களையே தன் வீட்டுக்குள் செய்கிறாள். ஆனால் பெண் கேலி செய்யப்படுகிறாள். இதற்கு காரணம்  ஆணாதிக்க மனோபாவமே.                          தொடங்கியதற்கு வருவோம். வெளியில் சென்று வேலை செய்யும் பெரும்பாலான ஆண்களுக்கு இரவு நேரமும் ஞாயிற்றுக்கிழமைகளும் ஓய்வு எடுக்கும் நேரம். ஆனால் பெண்களுக்கு அப்படி ஒரு நேரமோ நாளோ இருப்பது போல் எனக்குத் தெரிவதில்லை. கந்தர்வன் சொல்லுவார்
        “நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை.ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை” என்று.                     அரசாங்கமே விடுமுறை என்று அறிவித்த பொங்கல் தீபாவளி அன்று தான் அவளுக்கு இரட்டிப்பு வேலை.வேலைக்கு செல்லும் பெண்களின் நிலை இன்னும் மோசம். அவர்களின் உடல் உழைப்பு  மிகவும் ஆச்சரியப்படவைக்கிறது. பெண்கள் உடல் அளவில் பலவீனமானவர்கள் என்பதை இது பொய் ஆக்குகிறது. அவர்கள் தங்களுடைய பலத்தை ஆணுக்கு எதிராக திருப்பத்தெரியாமல் இருக்கிறார்கள். அதற்கான பயிற்சி  அளித்தலே இப்போதைய தேவை.                 மேடைகளில் வாரப்பத்திரிக்கைகளில் ஆண்கள் வீட்டு வேலை செய்வது  ஒரு நகைச்சுவையாக பேசப்படுகிறது.ஆண் மனைவியின் துணியை துவைக்கிறான் என்பது இழிவான செயலாக கருதப்படுகிறது. “உண்மைகள் எப்போதும் நகைச்சுவை ஆவதில்லை.” பெண் துணி துவைக்கிறாள் என்றால் சிரிப்பு வருவதில்லை. ஏனெனில் அது உண்மை. இதில் கொடுமை என்னவென்றால் தாங்கள் அடிமைபட்டு வருவதை பெண்களும் உணராமல் அவற்றை ரசிப்பது தான்.                                       ஒரு ஆணை பெண் என்றால் கோபம் வருகிறது. ஆனால் ஒரு பெண்னை ஆண் என்றால் கோபம் கொள்வதில்லை.ஏனென்றால் ஆண் உயர்வானவன் என்று பெண்ணின் மனதிலே பதிக்கப்பட்டு விட்டது. இது மாற குறைந்தபட்சம் 100 ஆண்டுகள் ஆகும்.         இப்போதெல்லாம் பெண்கள் முன்னேறிவிட்டார்கள்.ஆண்களுக்கு நிகராக எல்லா வேலைகளிலும் ஈடுபடுகிறார்கள் என்ற பேச்சு நிலவுகிறது.எல்லா துறைகளிலும் பெண்கள் ஈடுபடுகிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ளக்கூடிய விசயம் தான். ஆனால் ஆண்களுக்கு நிகராக ஈடுபடுகிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ள முடியாது. பைலட்,மெக்கானிக்கல் இன்ஜினியர், டிக்கெட் செக்கர் போன்ற பல வேலைகளிலும் பெண்களை காண்பது அரிது.இன்னமும் நம் நாட்டில் 33% இட ஒதுக்கீடு பெண்களுக்கு அரசியலில் வருவது என்பது எட்டாத கனவாகவே உள்ளது.இத்தனைக்கும் நமது பிரதமரை ஆட்டுவிப்பவர் பெண்தான். ஜனாதிபதி பெண்தான்,சபா நாயகரும் பெண்தான். இப்படி இருக்கையில் ஏன் இடஒதுக்கீடு வரவில்லை?                                    பெண்களுக்கு அவர்கள் அடிமைப் பட்டிருப்பது உணர்த்த வேண்டும்.நம் நாட்டில் குறிப்பாக தென்னிந்திய பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.இதற்கு காரணம் பெண்சிசுக்கொலை.                    பெண்சிசு கொலைக்கு காரணம் பெண் அடிமைத்தனம்.பெண் அடிமைத்தனதுக்கு காரணம் பெண்சிசு கொலை.பல பெண்கள் கொல்லப்படாமல் இருந்திருந்தால் ஆணுக்கு நிகராக அல்லது ஆண்களை விட அதிகமாக பெண்கள் இருந்திருப்பார்கள்.அப்படி இருந்திருந்தால் காரல் மார்க்ஸ் சொன்ன “அளவு மாற்றம் குணம் மாற்றத்தை ஏற்படுத்தும்”என்ற விதியின் கீழ் பெண்கள் தங்களின் அடிமை விலங்குகளை எப்போதோ தூக்கி எரிந்திருப்பார்கள்.
                       ஒரு முதலாளி எப்படி தொழிலாளியை சுரண்டாமல் வாழமுடியாதோ அதே போல் ஒரு ஆண் ஒரு பெண்னைஸ் சுரண்டாமல் வாழவேமுடியாது.இருந்தாலும் நாம் பெண்களின் அடிமை விலங்குகளை தளர்த்த இயன்ற அளவு முயற்சிப்போம்.

Popular posts from this blog

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய நீல திமிங்கலம்

ஜப்பானில் நீலத்திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. காமக்குரா (( Kamakura)) என்ற இடத்தில் கடலோரப் பகுதியில் கரை ஒதுங்கிய அந்த திமிங்கலம் சுமார் 35 அடி நீளமுள்ளதாகக் காணப்பட்டது. இதையடுத்து திமிங்கலத்தின் எலும்புகளை முழுமையாக எடுத்து அருங்காட்சியகத்தில் வைக்கும் வகையில் திராவகம் மூலம் அதன் சதைப் பகுதியை கரைக்கும் முயற்சியில் ஜப்பான் அரசு ஈடுபட்டுள்ளது. மேலும் திமிங்கலம் இறப்புக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பொதுவாக நீலத் திமிங்கலங்கள் 100 அடி நீளமும் 190 டன் எடை வரையிலும் தன்மை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

தொப்பையை குறைக்கும் எளிய உடற்பயிற்சிகள்

தற்காலத்தில் அனைவருக்கும் பெரிய பிரச்சினையாக காணப்படும் தொப்பையை வீட்டிலேயே சில எளிய உடற்பயிற்சிகளை செய்து குறைப்பது எப்படி என பார்ப்போம். plank walks exercise: இரண்டு கைகளையும் நிலத்தில் ஊன்றி, பக்கவாட்டில் உடலை இயக்க வேண்டும். வலது கை, வலது காலை வலதுபக்கமாக சற்று கீழே இறக்கி, ஏற்ற வேண்டும். அதேபோல் இடது கால், இடது கையை இடதுபக்கமாக கீழே இறக்கி, பின் ஏற்ற வேண்டும். இவ்வாறு 20 முறை செய்ய வேண்டும். படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ள வேண்டும். Squats: கால்கள் எந்த அளவிற்கு வலுவாக உள்ளதோ, அந்தளவுக்கு உடலும் வலுவடையும். கைகளை நேரே நீட்டியவாறு, உடலை பாதியளவிற்கு கீழே இறக்கி, பின் மேலே ஏற்ற வேண்டும். சேரில் அமருவதை போல் அமர்ந்து செய்யும் உடற்பயிற்சி இது. இந்த பயிற்சியை செய்யும் போது உங்களின் கால் தொடைகளில் மாற்றம் தெரிவதை உணரலாம். Mountain Climbers: தண்டால் எடுப்பது போன்ற நிலையில் இருக்க வேண்டும். அப்போது மலை ஏறுவது போல் கால்களை ஒவ்வொன்றாக கொண்டு சென்று, பின் பழைய நிலைக்கு வரவேண்டும். தசைகள் எவ்வளவு வேலை செய்கிறதோ, அந்தளவிற்கு உடல் கொழுப்பு கரைக்கப்படும். toe To Bar:...

ஷம்போக்கு பதிலா இதை தேய்ச்சாலே முடி தாறுமாறா வளருமாம்! பெண்களே உஷார்

எல்லாருக்கும் கடலை மாவு என்றாலே முகம் பளபளக்கும் சருமத்திற்கும் தான் என்று தெரியும். ஆனால் இந்த கடலை மாவை கொண்டு தலைமுடி வளர்ச்சியை தூண்டலாம். பயன்கள் சரும அழகைப் போலவே தலைமுடி பராமரிப்பிலும் கடலைமாவு பல்வேறு வகைகளில் நமக்குப் பயன்படுகிறது. பண்டைய காலத்தில் இருந்து கடலை மாவு அழகு பராமரிப்புக்கு என்றே பயன்பட்டு வருகிறது. இதிலுள்ள போஷாக்குகள் உங்கள் கூந்தலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. வலிமையான மற்றும் அடர்த்தியான பொலிவான கூந்தலை பரிசாக அளிக்கிறது. முடி வளர்ச்சி முடி உதிர்தலை தடுத்தல் கூந்தலை சுத்தமாக்குதல் கூந்தல் வறட்சியை போக்குதல் கூந்தலிலுள்ள சிக்கலை போக்குதல் இயற்கையான கண்டிஷனர் பொடுகை தவிர்த்தல் பொலிவான மற்றும் நீண்ட கூந்தலை அளித்தல் கூந்தல் நுனிப்பிளவை தடுத்தல் ஆகிய பிரச்சினைகளுக்கு கடலை மாவு மூலம் உங்களுக்குத் தீர்வு கிடைக்கும்.