Skip to main content

பெண்ணாய் பிறக்க மாதவம் செய்திட வேண்டும்

                              ‘பெண்கள் நம் நாட்டின் கண்கள்’, ‘பெண்ணாய் பிறக்க மாதவம் செய்திட வேண்டும்’. இந்த முழக்கங்களை நாம் மேடைகளில் கேட்கலாம். ஏன் இந்த முழக்கங்கள்? ஏன் ஆண்களை நாட்டின் கண்கள் என சொல்லவில்லை? ஏன் பெண்ணாய் பிறக்க மாதவம் செய்தல் வேண்டும் என்கிறோம்? இம் முழக்கங்கள் பெண் இழிவானவள், அவள் ஆணுக்கு  அடிமை என்றெண்ணும் சமூகத்தில் இருந்து வந்தவை.
ஆணும் பெண்ணும் சமமாக நடத்தப்படும் இடத்தில் இம்முழக்கங்கள் தேவையே இல்லை.
                   ஒரு வீட்டில் கணவன் வெளியே சென்று பணம் ஈட்டி வருகிறான். மனைவி வீட்டுக்குள் இருந்து வீட்டையும் குழந்தைகளையும் கவனித்துக் கொள்கிறாள். இது வேலைப் பகிர்வுதானே அன்றி பெண் அடிமைத்தனம் இல்லை என்று கூறலாம். கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால் பெண் எவ்வளவு அடிமைபட்டுக்கிடக்கிறாள் என்று தெரியும்.                     
                      கணவனின் வேலை நேரம் அதிகபட்சம் எட்டு மணி நேரம்.பெண்ணின் வேலை நேரம் நாள் முழுவதும் நடுவில் சில நாடகத் தொடர்கள் பார்க்கிறாள். நன்றாக கவனித்தால் பெண்கள் படங்கள் பார்ப்பதை விட தொடர்கள் பார்பதையே விரும்புகின்றனர் என்பது  தெரியும். ஏன் அப்படி?                   தொடர்களில் நல்லவளும்  பெண், கெட்டவளும் பெண்.அதில் ஆண்கள் பொம்மை மாதிரி வந்து போவார்கள். அது அவர்களுக்கு மிகவும் பிடித்து போகிறது. தான் செய்ய முடியாததை, தான் செய்ய நினைப்பதை இன்னொரு பெண் செய்கிறாள்.அவளை தன் பிரதிநிதியாக ஏற்றுக்கொள்கிறாள்.அவளை தாமாகவே பாவிக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் அவர்கள் தொடர்கள் பார்த்து சிரிப்பதும் அழுவதும். அதை ஆண்கள் கேலி செய்கிறார்கள்।இதே ஆண் ஒரு படத்தில் கதாநாயகன் பத்து பேரை அடிக்கையில்,நாயகிக்கு முத்தம் கொடுக்கையில் கைத்தட்டி விசில் அடிக்கிறான். அவன் ஏன் அவ்வாறு செய்கிறான்?தான் செய்ய நினைப்பதை, முடியாததை கதாநாயகன் செய்கையில் அவனை தாமாகவே நினைக்கிறான். அதனால் அவன் கேலி செய்யப்படவில்லை. ஆண் என்பதால் அவனது செய்கை பெரிது படுத்தபடுவதில்லை. இத்தனைக்கும் அவன் பல நூறு பேரின் முன்னால் செய்கிறான். ஆனால் பெண்ணை அப்படி வெளிப்படுத்த இச்சமுகம் விடுவதில்லை. அவள் தனக்கு என விதிக்கப்பட்ட செயல்களையே தன் வீட்டுக்குள் செய்கிறாள். ஆனால் பெண் கேலி செய்யப்படுகிறாள். இதற்கு காரணம்  ஆணாதிக்க மனோபாவமே.                          தொடங்கியதற்கு வருவோம். வெளியில் சென்று வேலை செய்யும் பெரும்பாலான ஆண்களுக்கு இரவு நேரமும் ஞாயிற்றுக்கிழமைகளும் ஓய்வு எடுக்கும் நேரம். ஆனால் பெண்களுக்கு அப்படி ஒரு நேரமோ நாளோ இருப்பது போல் எனக்குத் தெரிவதில்லை. கந்தர்வன் சொல்லுவார்
        “நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை.ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை” என்று.                     அரசாங்கமே விடுமுறை என்று அறிவித்த பொங்கல் தீபாவளி அன்று தான் அவளுக்கு இரட்டிப்பு வேலை.வேலைக்கு செல்லும் பெண்களின் நிலை இன்னும் மோசம். அவர்களின் உடல் உழைப்பு  மிகவும் ஆச்சரியப்படவைக்கிறது. பெண்கள் உடல் அளவில் பலவீனமானவர்கள் என்பதை இது பொய் ஆக்குகிறது. அவர்கள் தங்களுடைய பலத்தை ஆணுக்கு எதிராக திருப்பத்தெரியாமல் இருக்கிறார்கள். அதற்கான பயிற்சி  அளித்தலே இப்போதைய தேவை.                 மேடைகளில் வாரப்பத்திரிக்கைகளில் ஆண்கள் வீட்டு வேலை செய்வது  ஒரு நகைச்சுவையாக பேசப்படுகிறது.ஆண் மனைவியின் துணியை துவைக்கிறான் என்பது இழிவான செயலாக கருதப்படுகிறது. “உண்மைகள் எப்போதும் நகைச்சுவை ஆவதில்லை.” பெண் துணி துவைக்கிறாள் என்றால் சிரிப்பு வருவதில்லை. ஏனெனில் அது உண்மை. இதில் கொடுமை என்னவென்றால் தாங்கள் அடிமைபட்டு வருவதை பெண்களும் உணராமல் அவற்றை ரசிப்பது தான்.                                       ஒரு ஆணை பெண் என்றால் கோபம் வருகிறது. ஆனால் ஒரு பெண்னை ஆண் என்றால் கோபம் கொள்வதில்லை.ஏனென்றால் ஆண் உயர்வானவன் என்று பெண்ணின் மனதிலே பதிக்கப்பட்டு விட்டது. இது மாற குறைந்தபட்சம் 100 ஆண்டுகள் ஆகும்.         இப்போதெல்லாம் பெண்கள் முன்னேறிவிட்டார்கள்.ஆண்களுக்கு நிகராக எல்லா வேலைகளிலும் ஈடுபடுகிறார்கள் என்ற பேச்சு நிலவுகிறது.எல்லா துறைகளிலும் பெண்கள் ஈடுபடுகிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ளக்கூடிய விசயம் தான். ஆனால் ஆண்களுக்கு நிகராக ஈடுபடுகிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ள முடியாது. பைலட்,மெக்கானிக்கல் இன்ஜினியர், டிக்கெட் செக்கர் போன்ற பல வேலைகளிலும் பெண்களை காண்பது அரிது.இன்னமும் நம் நாட்டில் 33% இட ஒதுக்கீடு பெண்களுக்கு அரசியலில் வருவது என்பது எட்டாத கனவாகவே உள்ளது.இத்தனைக்கும் நமது பிரதமரை ஆட்டுவிப்பவர் பெண்தான். ஜனாதிபதி பெண்தான்,சபா நாயகரும் பெண்தான். இப்படி இருக்கையில் ஏன் இடஒதுக்கீடு வரவில்லை?                                    பெண்களுக்கு அவர்கள் அடிமைப் பட்டிருப்பது உணர்த்த வேண்டும்.நம் நாட்டில் குறிப்பாக தென்னிந்திய பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.இதற்கு காரணம் பெண்சிசுக்கொலை.                    பெண்சிசு கொலைக்கு காரணம் பெண் அடிமைத்தனம்.பெண் அடிமைத்தனதுக்கு காரணம் பெண்சிசு கொலை.பல பெண்கள் கொல்லப்படாமல் இருந்திருந்தால் ஆணுக்கு நிகராக அல்லது ஆண்களை விட அதிகமாக பெண்கள் இருந்திருப்பார்கள்.அப்படி இருந்திருந்தால் காரல் மார்க்ஸ் சொன்ன “அளவு மாற்றம் குணம் மாற்றத்தை ஏற்படுத்தும்”என்ற விதியின் கீழ் பெண்கள் தங்களின் அடிமை விலங்குகளை எப்போதோ தூக்கி எரிந்திருப்பார்கள்.
                       ஒரு முதலாளி எப்படி தொழிலாளியை சுரண்டாமல் வாழமுடியாதோ அதே போல் ஒரு ஆண் ஒரு பெண்னைஸ் சுரண்டாமல் வாழவேமுடியாது.இருந்தாலும் நாம் பெண்களின் அடிமை விலங்குகளை தளர்த்த இயன்ற அளவு முயற்சிப்போம்.

Popular posts from this blog

சம்பந்தர் கடை ஒரு பெட்டிக் கடையின் கதை!

சம்பந்தர் கடை. ஒரு பெட்டிக்கடை சம்பந்தர் கடையடி என இடத்தின் பெயரானது. ஆக இக்கடைக்கு கரவெட்டியின் பிரபல்யமான மூத்த அரசியல்வாதியான சிவசிதம்பரத்தின் வயதிருக்கும். நூறு ஆண்டுகள். யாழ் குடாநாட்டின் புராதனமான கிராமங்களிலொன்று கரவெட்டி. அக்கிராமத்தின் "நடுச்சென்ரறில்" இருக்கிறது இக்கடை.  இன்று உவர் நீர்க் கிணறுகளும் வயல் நிலங்களும் கொண்ட   ஊரின் இப்பகுதி Real Estate பெறுமதி கூடிய பகுதியல்ல. செம்பாட்டு மண்ணும் நன்னீரும் கொண்ட நெல்லியடிப் பகுதிதான் இன்று விலைகூடிய பகுதி. ஆனால் நூறாண்டுகளுக்கு முதல் நெல் வயல்களும் மாடுகளுக்கான மேய்ச்சல் தரைகளும் கொண்ட  பள்ள நிலங்களான சம்பந்தர் கடையடிப் பகுதிகளே ஊரில் விலைகூடிய பகுதிகளாக இருந்தன. சித்த மணியம் போன்ற கரவெட்டியின் செல்வந்த நிலச்சுவாந்தர்களின்  வீடுகள் இப்பகுதிகளிலேயே இருந்தன.     - ஆசிரியர் குறிப்பு #சம்பந்தர்கடை_என்_நினைவில் By கரவெட்டி ராஜி கரவெட்டி  சம்மந்தர்கடை ஒரு உணர்வு பூர்வமான இடம் தான். கரவெட்டி பிரதேசத்தின் ஷொப்பிங் மால் தான் எங்கள் சம்மந்தர்கடை, அங்கு பெட்டிக்கடையில் இருந்து  பெருங்கடை வரைக்கும் உண்டு இன்று வரை. நாலு றோட்டு

கரவெட்டி கிராமத்தின் வரலாறு!

கரவெட்டி கிராமம் ஆனது வதிரி உடுப்பிட்டி துன்னாலை கரணவாய் என்று பெயர் சொல்லக்கூடிய கிராமங்களை எல்லையாக கொண்டு வடமராட்சியில் ஒரு முக்கிய கிராமம். இந்த கரவெட்டியில் நெல்லியடி, சம்மந்தர் கடையடி, கிளவிதோட்டம், யார்க்கரை, அத்துளு, கட்டைவேலி என்றவாறாக சிறு சிறு கிராமக்குடிகளை கொண்டு விளங்குகிறது. ஊர் வழக்கில் நெல்லியடியை கரவெட்டி என்று சொல்லுவதில்லை. அதை நெல்லியடி என்றே சொல்லிக்கொள்ளுவார்கள். கேவளை, தூவெளி, நுகவில் வயல் பகுதி, சாமியன் அரசடி, கோவில்சந்தை, போன்றவற்றை எல்லை கோடுகளாக கொண்டு அழகிய கிராமமாக விளங்குகிறது இதில் கேவளை சந்தி முந்தி ஒரு முக்கியமான இடமாக இருந்திருக்கின்றது. ஏனென்றால் சாவகச்சேரி ஊடாக முந்தி பஸ் ஓடிய காலத்தில் கனகம்புளியடி, கப்பூது, அந்தணதிடல் ஊடாக இந்த சந்திக்குதான் பஸ் எல்லாம் வந்து போறதாம். அது மட்டும் இல்லாமல் யாழ்ப்பாணம் நகரத்திலிருந்து போற பஸ் கூட புத்தூர் வழியாக வந்து கப்பூது வந்து இந்த சந்தி வந்து தான் பருத்தித்துறை போகும். அப்படியாக இந்த சந்தி ஒரு முக்கியமான ஒரு இடமாக விளங்கியிருந்தது என்றால் மிகையாகாது. அதுமட்டும் இல்லாமல் இந்த சந்தியை  ஆயம் என்றும்  ஆயக்கடவ

என்.. ஊர் கரவெட்டி..
கரவெட்டியான்
 என்பதில்
எனக்குப் பெருமை.

என்.. ஊர் கரவெட்டி..

கரவெட்டியான
என்பதில்
எனக்குப் பெருமை.

கரவு.. எட்டி
என்பதனால்
கரவெட்டி ஆனதாய்
பெரியவர்கள்
சொல்லக் கேள்வி..

கற்றாரும்.. மிக்காரும்
கனிந்திருப்பர்
கோயில் 
மணி ஒலியில்
புள்ளினங்கள் பாட்டிசைக்க
பசுந்தாள் தரவையில்
ஆவினங்கள் நடனமிடும்
அழகு நிறை
ஆடம்பரமில்லா கரவெட்டி..

கலைமகளின்
ஆட்சி இங்கே நடப்பதானால்
தடக்கி விழுந்தாலும்
வாத்தியார்
வீட்டுப் படலையே தஞ்சம்..

இயல் ..இசை.. நாடகம்
எல்லாம்
முளை கொண்ட தமிழுலகு..

இயல் .. இசை ..நாடக
விற்பன்னராய்
முச்சந்தி இலக்கியம் படைத்த
மனோன்மணி நடராசாவும்
எங்கள் ஊர் தானே..

கவியுலகின் மன்னவனாய்
எங்கள் 
மன்னவன் கந்தப்பு 
ஆசானின். நகைச்சுவைக் கவிக்கீடாய்
ஏது முண்டோ..

சிலேடைக் கவியை
சிறப்பாய்த் தந்த
பண்டிதர் வீரகத்தி
எம் ஊரின் சிறப்பன்றோ..
அவர் வழியில்
சிலேடைக் கவி தந்த
கணபதிப்பிள்ளை.. சிவராஜசிங்கம்
ஊருக்கு சேர்த்த
பெருமைதனை
என்ன வென்று சொல்வேன்..

தானே கவி எழுதி
தானே மெட்டமைத்துப் பாடும்
யதார்த்தனை
எப்படி மறப்பது..

இலக்கியத்தமிழையும்
பண்டித தமிழையும்
மேட்டுக் குடியின் ஆங்கிலத்தையும்
எங்கள் ஒழுங்கை வரை
கொண்டு வந்த
பண்டிதர் பொன் கணேசன்
அவ