Skip to main content

வெளிநாட்டு மாப்பிளைகளால் மனம் உடைந்த உள் நாட்டு மாப்பிளைகள்.[முற்றும் வாசிக்கவும்]



                வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்ய காதலி முடிவெடுத்ததால் பட்டதாரி மாணவன் ஒருவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்திருக்கிறான்.

இன்னும் யாரும் இந்தப் பிரச்சனையை பெரியளவில் பேசத் தொடங்கவில்லை. வெளிநாட்டு மாப்பிள்ளைகள் ஈழத்தில் வாழும் இளைஞர்களுக்கு ஒரு பிரச்சனையாக மாறி வருகிறார்கள்.

விரைவில் யாராவது ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு அடி விழும் என்று எதிர்பார்க்கிறேன்.
நான் தாயகத்திற்கு சென்ற பொழுது உறவுக்கார இளைஞன் ஒருவன் கேட்டான்…

‘நாங்கள் காதலிக்கின்ற பெண்களை வெளிநாட்டில் இருந்து வந்து தூக்கிக் கொண்டு போகின்றார்கள்! இது நியாயமா?’
நான் சிரித்துக் கொண்டே பதில் சொன்னேன்..

‘தம்பி…. திரைப்படங்களில்தான் நீங்கள் ஹீரோ, வெளிநாட்டு மாப்பிள்ளை கடைசியில் வந்து தியாகம் செய்து விட்டு போவான், அல்லது அடிவாங்கி ஓடுவான், ஆனால் உண்மையான வாழ்க்கையில் நாங்கள்தான் ஹீரோ, கடைசிக் கட்டத்தில் வந்து நீங்கள் காதலிக்கும் பெண்களை தூக்கிக் கொண்டு போய் விடுவோம்’

என் எகத்தாளத்தை அவன் ரசிக்கவில்லை. தலையைக் குனிந்து கொண்டு சோகமாக நின்றான்.

அங்கே இருக்கின்ற பெரும்பாலான பெண்களுக்கு சிறுவயதிலேயே வெளிநாட்டுக் கனவு வளர்க்கப்படுகிறது. தன்னுடைய எதிர்காலத்தை வெளிநாட்டில் கற்பனை செய்தபடிதான் அவர்கள் வளர்கின்றார்கள்.

இடையில் காதல் என்பது ஏற்பட்டாலும், அதற்காக அவர்கள் தங்கள் கனவினை விடத் தயாராக இல்லை. இதில் அந்தப் பெண்களை தவறு சொல்லவும் நான் விரும்பவில்லை.

ஈழத்தில் வாழும் இளைஞர்கள் பெண்களிடம் ‘உனக்கு வெளிநாடு செல்லும் ஆசை இருக்கிறதா?’ என்று கேட்டு உறுதிப்படுத்தி விட்டு காதலிக்க தொடங்குவது நல்லது.

இதையும் மீறி ஏமாந்து போனாலும் கூட அதற்காக உயிரை விடுவதும், அந்தப் பெண்ணைப் பற்றி இணையத்தில் போட்டு அவமானப்படுத்துவது எல்லாமே கடைந்தெடுத்த முட்டாள்தனம்.

வாழ்ந்து பாருங்கள்! வாழ்க்கையில் ஆயிரம் காதல்கள் வந்து போவதை உணர்வீர்கள்!

நன்றி: வி. சபேசன்-
                                  உள் நாட்டில் நம்ம பசங்க கசக்கி புளிந்ததை தான் வெளிநாட்டு மாப்பிளைகள் புதுசு என்டு நினைத்து தூக்கிட்டு போறாங்க,
            எனக்கு வெளிநாட்டு மாப்பிளை என்டலே மனதில் பாவம் என்னும் நினைப்புடன் நக்கல் சிரிப்பு தான் வரும் சகோதரன் வி.சபேஸ் அவர்களே.
                           என்ன நான் சொல்லுறது சரி தானே உள் நாட்டு மாப்பிளைகளே??????????????
                                    நன்றி 

Popular posts from this blog

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய நீல திமிங்கலம்

ஜப்பானில் நீலத்திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. காமக்குரா (( Kamakura)) என்ற இடத்தில் கடலோரப் பகுதியில் கரை ஒதுங்கிய அந்த திமிங்கலம் சுமார் 35 அடி நீளமுள்ளதாகக் காணப்பட்டது. இதையடுத்து திமிங்கலத்தின் எலும்புகளை முழுமையாக எடுத்து அருங்காட்சியகத்தில் வைக்கும் வகையில் திராவகம் மூலம் அதன் சதைப் பகுதியை கரைக்கும் முயற்சியில் ஜப்பான் அரசு ஈடுபட்டுள்ளது. மேலும் திமிங்கலம் இறப்புக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பொதுவாக நீலத் திமிங்கலங்கள் 100 அடி நீளமும் 190 டன் எடை வரையிலும் தன்மை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

காதலனுக்கு நோ சொன்ன பெண்ணிற்கு கிடைத்த தண்டனையை பாருங்கள்...

டெல்லியில் காதலி திடீரென காதலை முறித்துக் கொண்டதால் ஆத்திரமடைந்த காதலன் காதலியை துப்பாக்கியால் சுட்டுள்ளான். டெல்லியை சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார். இந்த பெண்ணும் ஹரிஷ் சர்மா என்ற வாலிபரும் காதலித்து வந்தனர். சமீபத்தில் அந்த பெண் தனது காதலனுடனான உறவை முறித்துக் கொண்டார். பின் அவனுடன் பேசுவதை அறவே நிறுத்தியுள்ளார். ஒன்றும் புரியாத சர்மா, தனது காதலியிடம் பலமுறை பேச முயன்றும் அந்த பெண் சர்மாவை கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சர்மா அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளான். அப்போது அந்த பெண் சர்மாவை வீட்டை விட்டு வெளியே போகும்படி சத்தம் போட்டுள்ளார். கடும் கோபமடைந்த சர்மா தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காதலியை சுட முயன்றுள்ளார். உடனே சுதாரித்துகொண்ட காதலி கதவை மூட முயன்றுள்ளார். இருந்தபோதிலும் அந்த பெண்ணிற்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து அந்த பெண்ணின் உறவினர்கள் போலீஸாரிடம் அளித்த புகாரின் பேரில் போலீஸார் சர்மாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எனக்கு ஓயில் கலப்பில்லாதா நல்ல குடிநீர் ஊரிலிருந்து எடுத்து வா என்று அன்றைக்கு போனா பூதம் இன்னும் வரவே இல்லையாம்

சுன்னாகத்தை சேந்த நபரும்  நீர்வேலிச்சேர்ந்த நபரும்  சாவகச்சேரியை சேர்ந்த நபரும்  ஒன்றாக வடமராட்சிக்கு  சென்று கொண்டிருந்தார்களாம்  இரவு ஒருமணி இருக்கும் வல்லை வெளியில்  ஓர் பூதம் இவர்களை வழி மறித்து  கொன்று தின்னப்போவதாக மிரட்டியது  மூவரும்  கெஞ்சிமன்றாடியும்  பூதம் விடுவதாக இல்லை  நீண்ட நேர தர்க்கத்திற்கு பிறகு பூதம் ஓர் நிபந்தனையை முன்வைத்தது  நீங்கள் உங்கள் ஊரில்  உண்ணக்கூடிய. பதார்த்தத்தை  கேளுங்கள்  என்னால்  தரமுடியாமல்  போ னால்  உங்களை நான் விட்டுவிடுவேன்  நான் கொண்டு வந்தால்  உங்களை  கொல்வேன்  வேறு வழி இன்றி  மூவரும் சம்மதித்தனர்  முதலில்  சவகச்சேரி நபர்கேட்டார்  எனக்கு  நல்ல சுவையுடைய பலாப்பழம் வேண்டு கொண்டுவா என்று உடனே  பூதம்  சாவகச்சேரியில் இருந்து பலாபழத்தை தருவித்தது  அதன் சுவை  நன்றாக இருந்தது  இதைபார்த்த மூவருக்கு நடுக்கம் தொற்றிக்கொண்டது  இரண்டாவதாக. நீர்வேலி  நபர் கேட்டார் நல்ல சுவையுடைய. வாழைபழம் ...