Skip to main content

வெளிநாட்டு மாப்பிளைகளால் மனம் உடைந்த உள் நாட்டு மாப்பிளைகள்.[முற்றும் வாசிக்கவும்]



                வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்ய காதலி முடிவெடுத்ததால் பட்டதாரி மாணவன் ஒருவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்திருக்கிறான்.

இன்னும் யாரும் இந்தப் பிரச்சனையை பெரியளவில் பேசத் தொடங்கவில்லை. வெளிநாட்டு மாப்பிள்ளைகள் ஈழத்தில் வாழும் இளைஞர்களுக்கு ஒரு பிரச்சனையாக மாறி வருகிறார்கள்.

விரைவில் யாராவது ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு அடி விழும் என்று எதிர்பார்க்கிறேன்.
நான் தாயகத்திற்கு சென்ற பொழுது உறவுக்கார இளைஞன் ஒருவன் கேட்டான்…

‘நாங்கள் காதலிக்கின்ற பெண்களை வெளிநாட்டில் இருந்து வந்து தூக்கிக் கொண்டு போகின்றார்கள்! இது நியாயமா?’
நான் சிரித்துக் கொண்டே பதில் சொன்னேன்..

‘தம்பி…. திரைப்படங்களில்தான் நீங்கள் ஹீரோ, வெளிநாட்டு மாப்பிள்ளை கடைசியில் வந்து தியாகம் செய்து விட்டு போவான், அல்லது அடிவாங்கி ஓடுவான், ஆனால் உண்மையான வாழ்க்கையில் நாங்கள்தான் ஹீரோ, கடைசிக் கட்டத்தில் வந்து நீங்கள் காதலிக்கும் பெண்களை தூக்கிக் கொண்டு போய் விடுவோம்’

என் எகத்தாளத்தை அவன் ரசிக்கவில்லை. தலையைக் குனிந்து கொண்டு சோகமாக நின்றான்.

அங்கே இருக்கின்ற பெரும்பாலான பெண்களுக்கு சிறுவயதிலேயே வெளிநாட்டுக் கனவு வளர்க்கப்படுகிறது. தன்னுடைய எதிர்காலத்தை வெளிநாட்டில் கற்பனை செய்தபடிதான் அவர்கள் வளர்கின்றார்கள்.

இடையில் காதல் என்பது ஏற்பட்டாலும், அதற்காக அவர்கள் தங்கள் கனவினை விடத் தயாராக இல்லை. இதில் அந்தப் பெண்களை தவறு சொல்லவும் நான் விரும்பவில்லை.

ஈழத்தில் வாழும் இளைஞர்கள் பெண்களிடம் ‘உனக்கு வெளிநாடு செல்லும் ஆசை இருக்கிறதா?’ என்று கேட்டு உறுதிப்படுத்தி விட்டு காதலிக்க தொடங்குவது நல்லது.

இதையும் மீறி ஏமாந்து போனாலும் கூட அதற்காக உயிரை விடுவதும், அந்தப் பெண்ணைப் பற்றி இணையத்தில் போட்டு அவமானப்படுத்துவது எல்லாமே கடைந்தெடுத்த முட்டாள்தனம்.

வாழ்ந்து பாருங்கள்! வாழ்க்கையில் ஆயிரம் காதல்கள் வந்து போவதை உணர்வீர்கள்!

நன்றி: வி. சபேசன்-
                                  உள் நாட்டில் நம்ம பசங்க கசக்கி புளிந்ததை தான் வெளிநாட்டு மாப்பிளைகள் புதுசு என்டு நினைத்து தூக்கிட்டு போறாங்க,
            எனக்கு வெளிநாட்டு மாப்பிளை என்டலே மனதில் பாவம் என்னும் நினைப்புடன் நக்கல் சிரிப்பு தான் வரும் சகோதரன் வி.சபேஸ் அவர்களே.
                           என்ன நான் சொல்லுறது சரி தானே உள் நாட்டு மாப்பிளைகளே??????????????
                                    நன்றி 

Popular posts from this blog

சம்பந்தர் கடை ஒரு பெட்டிக் கடையின் கதை!

சம்பந்தர் கடை. ஒரு பெட்டிக்கடை சம்பந்தர் கடையடி என இடத்தின் பெயரானது. ஆக இக்கடைக்கு கரவெட்டியின் பிரபல்யமான மூத்த அரசியல்வாதியான சிவசிதம்பரத்தின் வயதிருக்கும். நூறு ஆண்டுகள். யாழ் குடாநாட்டின் புராதனமான கிராமங்களிலொன்று கரவெட்டி. அக்கிராமத்தின் "நடுச்சென்ரறில்" இருக்கிறது இக்கடை.  இன்று உவர் நீர்க் கிணறுகளும் வயல் நிலங்களும் கொண்ட   ஊரின் இப்பகுதி Real Estate பெறுமதி கூடிய பகுதியல்ல. செம்பாட்டு மண்ணும் நன்னீரும் கொண்ட நெல்லியடிப் பகுதிதான் இன்று விலைகூடிய பகுதி. ஆனால் நூறாண்டுகளுக்கு முதல் நெல் வயல்களும் மாடுகளுக்கான மேய்ச்சல் தரைகளும் கொண்ட  பள்ள நிலங்களான சம்பந்தர் கடையடிப் பகுதிகளே ஊரில் விலைகூடிய பகுதிகளாக இருந்தன. சித்த மணியம் போன்ற கரவெட்டியின் செல்வந்த நிலச்சுவாந்தர்களின்  வீடுகள் இப்பகுதிகளிலேயே இருந்தன.     - ஆசிரியர் குறிப்பு #சம்பந்தர்கடை_என்_நினைவில் By கரவெட்டி ராஜி கரவெட்டி  சம்மந்தர்கடை ஒரு உணர்வு பூர்வமான இடம் தான். கரவெட்டி பிரதேசத்தின் ஷொப்பிங் மால் தான் எங்கள் சம்மந்தர்கடை, அங்கு பெட்டிக்கடையில் இருந்து  பெருங்கடை வரைக்கும் உண்டு இன்று வரை. நாலு றோட்டு

கரவெட்டி கிராமத்தின் வரலாறு!

கரவெட்டி கிராமம் ஆனது வதிரி உடுப்பிட்டி துன்னாலை கரணவாய் என்று பெயர் சொல்லக்கூடிய கிராமங்களை எல்லையாக கொண்டு வடமராட்சியில் ஒரு முக்கிய கிராமம். இந்த கரவெட்டியில் நெல்லியடி, சம்மந்தர் கடையடி, கிளவிதோட்டம், யார்க்கரை, அத்துளு, கட்டைவேலி என்றவாறாக சிறு சிறு கிராமக்குடிகளை கொண்டு விளங்குகிறது. ஊர் வழக்கில் நெல்லியடியை கரவெட்டி என்று சொல்லுவதில்லை. அதை நெல்லியடி என்றே சொல்லிக்கொள்ளுவார்கள். கேவளை, தூவெளி, நுகவில் வயல் பகுதி, சாமியன் அரசடி, கோவில்சந்தை, போன்றவற்றை எல்லை கோடுகளாக கொண்டு அழகிய கிராமமாக விளங்குகிறது இதில் கேவளை சந்தி முந்தி ஒரு முக்கியமான இடமாக இருந்திருக்கின்றது. ஏனென்றால் சாவகச்சேரி ஊடாக முந்தி பஸ் ஓடிய காலத்தில் கனகம்புளியடி, கப்பூது, அந்தணதிடல் ஊடாக இந்த சந்திக்குதான் பஸ் எல்லாம் வந்து போறதாம். அது மட்டும் இல்லாமல் யாழ்ப்பாணம் நகரத்திலிருந்து போற பஸ் கூட புத்தூர் வழியாக வந்து கப்பூது வந்து இந்த சந்தி வந்து தான் பருத்தித்துறை போகும். அப்படியாக இந்த சந்தி ஒரு முக்கியமான ஒரு இடமாக விளங்கியிருந்தது என்றால் மிகையாகாது. அதுமட்டும் இல்லாமல் இந்த சந்தியை  ஆயம் என்றும்  ஆயக்கடவ

என்.. ஊர் கரவெட்டி..
கரவெட்டியான்
 என்பதில்
எனக்குப் பெருமை.

என்.. ஊர் கரவெட்டி..

கரவெட்டியான
என்பதில்
எனக்குப் பெருமை.

கரவு.. எட்டி
என்பதனால்
கரவெட்டி ஆனதாய்
பெரியவர்கள்
சொல்லக் கேள்வி..

கற்றாரும்.. மிக்காரும்
கனிந்திருப்பர்
கோயில் 
மணி ஒலியில்
புள்ளினங்கள் பாட்டிசைக்க
பசுந்தாள் தரவையில்
ஆவினங்கள் நடனமிடும்
அழகு நிறை
ஆடம்பரமில்லா கரவெட்டி..

கலைமகளின்
ஆட்சி இங்கே நடப்பதானால்
தடக்கி விழுந்தாலும்
வாத்தியார்
வீட்டுப் படலையே தஞ்சம்..

இயல் ..இசை.. நாடகம்
எல்லாம்
முளை கொண்ட தமிழுலகு..

இயல் .. இசை ..நாடக
விற்பன்னராய்
முச்சந்தி இலக்கியம் படைத்த
மனோன்மணி நடராசாவும்
எங்கள் ஊர் தானே..

கவியுலகின் மன்னவனாய்
எங்கள் 
மன்னவன் கந்தப்பு 
ஆசானின். நகைச்சுவைக் கவிக்கீடாய்
ஏது முண்டோ..

சிலேடைக் கவியை
சிறப்பாய்த் தந்த
பண்டிதர் வீரகத்தி
எம் ஊரின் சிறப்பன்றோ..
அவர் வழியில்
சிலேடைக் கவி தந்த
கணபதிப்பிள்ளை.. சிவராஜசிங்கம்
ஊருக்கு சேர்த்த
பெருமைதனை
என்ன வென்று சொல்வேன்..

தானே கவி எழுதி
தானே மெட்டமைத்துப் பாடும்
யதார்த்தனை
எப்படி மறப்பது..

இலக்கியத்தமிழையும்
பண்டித தமிழையும்
மேட்டுக் குடியின் ஆங்கிலத்தையும்
எங்கள் ஒழுங்கை வரை
கொண்டு வந்த
பண்டிதர் பொன் கணேசன்
அவ