Skip to main content

உலகையே அச்சுறுத்திக்கொண்டு வரும் *கொரானா வைரஸ்* கிருமியிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள சில வழிமுறைகள்.



1 - தினம் தோறும் மிளகு ரசம் சாப்பாட்டுடன் சேருங்கள் அல்லது ஒரு டம்ளர் அளவாவது குடியுங்கள்
2 - தினமும் காலையில் காலி வயிறாக இருக்கும்போது  5 முதல் 10 மிளகுகள் வரை நன்றாக மென்று தின்று விட்டு வெந்நீர் குடியுங்கள்.
3 - தினமும் காலை மாலை சூரிய உதய நேரம் மற்றும் அஸ்தமன நேரங்களில் வரும் சூரிய கதிர்வீச்சை சரீரத்தில் படும்படி பார்த்துக்கொள்ளுங்கள்
4 - ஆஸ்த்மா முத்திரை தினமும் குறைந்தது பத்து நிமிடங்களாவது  பயிற்சி செய்யுங்கள்.
5 -  பத்து துளசி இலைகள் மற்றும் நான்கு கிராம்பு இரண்டு வெற்றிலை நான்கு மிளகு போன்றவற்றை எல்லாம் இரண்டு டம்ளர் தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளராக வற்றிய உடன் அதனை  நாள் ஒன்றுக்கு இரண்டு வேளை வீதம் தினமும் குடித்து வரலாம்.
6 - மிக முக்கியமாக எந்த சூழலிலும் பயந்து விடக்கூடாது.பயம் வந்து விட்டால் உங்களை யாராலும் காப்பாத்த முடியாது.பயம் இல்லையென்றால் உங்களை எந்த நோயாலும் ஒன்றும் செய்ய முடியாது.
7 - சுடுநீரில் கல் உப்பு போட்டு வாய் கொப்புளித்து வரலாம்.
8 - தினமும் காலையில் வெறும் வயிற்றில் திரிகடுகு சூரணம் தேனில் குழைத்து சாப்பிடுங்கள்.
9 - நேரம் கிடைக்கும் போதெல்லாம் தாளிசாதி சூரணம் எத்தனை வேளை வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

எந்தமாதிரி நோய் வந்தாலும் விரட்டும் அளவிற்கு மருத்துவ முறைகளை இந்த உலகிற்கே அளித்த பாரம்பரியம் நம்முடையது.இந்த உலகில் நம்மால் முடியாதது எதுவுமே இல்லை எனும் அளவிற்கு சாதித்த பரம்பரை நம்முடையது,கொரானா இந்த உலகை வேண்டுமானால் அச்சுறுத்தலாம்.நம்மை அச்சுறுத்த முடியாது.மேலே சொன்ன விதிகளை கடைபிடியுங்கள்.ஆரோக்கியமாக வாழுங்கள்.

Popular posts from this blog

சம்பந்தர் கடை ஒரு பெட்டிக் கடையின் கதை!

சம்பந்தர் கடை. ஒரு பெட்டிக்கடை சம்பந்தர் கடையடி என இடத்தின் பெயரானது. ஆக இக்கடைக்கு கரவெட்டியின் பிரபல்யமான மூத்த அரசியல்வாதியான சிவசிதம்பரத்தின் வயதிருக்கும். நூறு ஆண்டுகள். யாழ் குடாநாட்டின் புராதனமான கிராமங்களிலொன்று கரவெட்டி. அக்கிராமத்தின் "நடுச்சென்ரறில்" இருக்கிறது இக்கடை.  இன்று உவர் நீர்க் கிணறுகளும் வயல் நிலங்களும் கொண்ட   ஊரின் இப்பகுதி Real Estate பெறுமதி கூடிய பகுதியல்ல. செம்பாட்டு மண்ணும் நன்னீரும் கொண்ட நெல்லியடிப் பகுதிதான் இன்று விலைகூடிய பகுதி. ஆனால் நூறாண்டுகளுக்கு முதல் நெல் வயல்களும் மாடுகளுக்கான மேய்ச்சல் தரைகளும் கொண்ட  பள்ள நிலங்களான சம்பந்தர் கடையடிப் பகுதிகளே ஊரில் விலைகூடிய பகுதிகளாக இருந்தன. சித்த மணியம் போன்ற கரவெட்டியின் செல்வந்த நிலச்சுவாந்தர்களின்  வீடுகள் இப்பகுதிகளிலேயே இருந்தன.     - ஆசிரியர் குறிப்பு #சம்பந்தர்கடை_என்_நினைவில் By கரவெட்டி ராஜி கரவெட்டி  சம்மந்தர்கடை ஒரு உணர்வு பூர்வமான இடம் தான். கரவெட்டி பிரதேசத்தின் ஷொப்பிங் மால் தான் எங்கள் சம்மந்தர்கடை, அங்கு பெட்டிக்கடையில் இருந்து  பெருங்கடை வரைக்கும் உண்டு இன்று வரை. நாலு றோட்டு

கரவெட்டி கிராமத்தின் வரலாறு!

கரவெட்டி கிராமம் ஆனது வதிரி உடுப்பிட்டி துன்னாலை கரணவாய் என்று பெயர் சொல்லக்கூடிய கிராமங்களை எல்லையாக கொண்டு வடமராட்சியில் ஒரு முக்கிய கிராமம். இந்த கரவெட்டியில் நெல்லியடி, சம்மந்தர் கடையடி, கிளவிதோட்டம், யார்க்கரை, அத்துளு, கட்டைவேலி என்றவாறாக சிறு சிறு கிராமக்குடிகளை கொண்டு விளங்குகிறது. ஊர் வழக்கில் நெல்லியடியை கரவெட்டி என்று சொல்லுவதில்லை. அதை நெல்லியடி என்றே சொல்லிக்கொள்ளுவார்கள். கேவளை, தூவெளி, நுகவில் வயல் பகுதி, சாமியன் அரசடி, கோவில்சந்தை, போன்றவற்றை எல்லை கோடுகளாக கொண்டு அழகிய கிராமமாக விளங்குகிறது இதில் கேவளை சந்தி முந்தி ஒரு முக்கியமான இடமாக இருந்திருக்கின்றது. ஏனென்றால் சாவகச்சேரி ஊடாக முந்தி பஸ் ஓடிய காலத்தில் கனகம்புளியடி, கப்பூது, அந்தணதிடல் ஊடாக இந்த சந்திக்குதான் பஸ் எல்லாம் வந்து போறதாம். அது மட்டும் இல்லாமல் யாழ்ப்பாணம் நகரத்திலிருந்து போற பஸ் கூட புத்தூர் வழியாக வந்து கப்பூது வந்து இந்த சந்தி வந்து தான் பருத்தித்துறை போகும். அப்படியாக இந்த சந்தி ஒரு முக்கியமான ஒரு இடமாக விளங்கியிருந்தது என்றால் மிகையாகாது. அதுமட்டும் இல்லாமல் இந்த சந்தியை  ஆயம் என்றும்  ஆயக்கடவ

என்.. ஊர் கரவெட்டி..
கரவெட்டியான்
 என்பதில்
எனக்குப் பெருமை.

என்.. ஊர் கரவெட்டி..

கரவெட்டியான
என்பதில்
எனக்குப் பெருமை.

கரவு.. எட்டி
என்பதனால்
கரவெட்டி ஆனதாய்
பெரியவர்கள்
சொல்லக் கேள்வி..

கற்றாரும்.. மிக்காரும்
கனிந்திருப்பர்
கோயில் 
மணி ஒலியில்
புள்ளினங்கள் பாட்டிசைக்க
பசுந்தாள் தரவையில்
ஆவினங்கள் நடனமிடும்
அழகு நிறை
ஆடம்பரமில்லா கரவெட்டி..

கலைமகளின்
ஆட்சி இங்கே நடப்பதானால்
தடக்கி விழுந்தாலும்
வாத்தியார்
வீட்டுப் படலையே தஞ்சம்..

இயல் ..இசை.. நாடகம்
எல்லாம்
முளை கொண்ட தமிழுலகு..

இயல் .. இசை ..நாடக
விற்பன்னராய்
முச்சந்தி இலக்கியம் படைத்த
மனோன்மணி நடராசாவும்
எங்கள் ஊர் தானே..

கவியுலகின் மன்னவனாய்
எங்கள் 
மன்னவன் கந்தப்பு 
ஆசானின். நகைச்சுவைக் கவிக்கீடாய்
ஏது முண்டோ..

சிலேடைக் கவியை
சிறப்பாய்த் தந்த
பண்டிதர் வீரகத்தி
எம் ஊரின் சிறப்பன்றோ..
அவர் வழியில்
சிலேடைக் கவி தந்த
கணபதிப்பிள்ளை.. சிவராஜசிங்கம்
ஊருக்கு சேர்த்த
பெருமைதனை
என்ன வென்று சொல்வேன்..

தானே கவி எழுதி
தானே மெட்டமைத்துப் பாடும்
யதார்த்தனை
எப்படி மறப்பது..

இலக்கியத்தமிழையும்
பண்டித தமிழையும்
மேட்டுக் குடியின் ஆங்கிலத்தையும்
எங்கள் ஒழுங்கை வரை
கொண்டு வந்த
பண்டிதர் பொன் கணேசன்
அவ