Skip to main content

யாழ்ப்பாணத்தான் பெருமைகளும், பீத்தல்களும்!!



     பிளாஸ்டிக் வாளியில் வெடிப்பு வந்தால் எறிய மாட்டார்கள். வயரின் உள்ளே இருக்கும் கம்பியால் கவனமாய்த் தையல் போட்டுத் தேயத் தேயப் பாவிப்பார்கள். 

      சொந்தக் காலில் கம்பி கிழித்தால் காயத்தை விரித்துக் கையளவு கோப்பியைக் கொட்டிவிட்டு மறுவேலை பார்ப்பார்கள். 

      கழுத்து வரைக்கும் கடன் இருந்தாலும் மகளின் சாமர்த்தியவீட்டை ஷாருக்கான் படம் போல நடத்துவார்கள். அதே மகள் ரீயோ ஐஸ்கிறீம் கேட்டால் 'காசுக்கு எங்க போறது' என்று கண்ணீரைத் துடைப்பார்கள்.

      கடன் வாங்கியேனும் பிள்ளைக்கு மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுப்பார்கள்
அதே பிள்ளை ஆறு மணி தாண்டி வீட்ட வராட்டி படலையிலயே தவம் கிடப்பார்கள். 

      விஷக்கடிக்கு பரிகாரி மருந்து  கொடுத்தாலும் உயிர்போகும் அவசரத்திலும் புட்டோடு குழைத்துத்தான் சாப்பிடுவார்கள். சொதியால் சேர்த்து குழைக்காத சோற்றை சாவுப் பட்டினியிலும் கையால் தொட மாட்டார்கள்.

      சாதியை நேரடியாகக் கேட்க மாட்டார்கள். ஊர்,தெரு பெயர் கேட்டு உய்த்தறிவார்கள். 

      அன்னம் தண்ணீர் இல்லாவிட்டால் தாங்கிக் கொள்வார்கள். ஞாயிறு ஆட்டிறைச்சி இல்லாவிட்டால் ஆயுளை விடுவார்கள்.

      சொர்க்கத்தில் இருக்கும் கடவுளுக்கே கேட்கும் அளவு கோயிலில் சத்தமாய் பாட்டுப் போடுவார்கள். பரீட்சையில் பிள்ளைக்கு தொன்னூறுக்குக் குறைவாய் புள்ளி வந்தால் தும்புத்தடியைப் பிரிப்பார்கள்.

     தார் உருக்கும் வெயிலில் தேகம் வியர்க்க வந்தாலும் சூடாய் ஒரு கப் பிளேன்ரீதான் கேட்பார்கள். 

     அனகொண்டா பாம்பே அவுக்கென்று கடித்தாலும் மரமஞ்சளைக் குடித்துவிட்டு மறுவேலை பார்ப்பார்கள், மரண தேவனே மடியில் ஏறினாலும் மருத்துவமனை வாசல் ஏறவே மாட்டார்கள். 

     வருடம் முழுவதும் பஞ்சப்பாட்டுப் பாடுவார்கள், நல்லூர் திருவிழாவில் கண்டதுக்கெல்லாம் காசை விட்டெறிவார்கள்.
     
      அரசையே புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்வார்கள்.. அரசவேலை இல்லாவிட்டால் பெண்ணைத் தர மாட்டார்கள்.

Popular posts from this blog

இந்த ஒரு பொருள் சாப்பிட்டு முடிச்சதும் தண்ணீர் குடிக்கக் கூடாது! ஏன் தெரியுமா?

வறுத்த மக்காச் சோளம் அல்லது பூட்டா அற்புதமான சுவையோடு ஆரோக்கியமான சிற்றுண்டி விருப்பமாகவும் இருக்கிறது. இருப்பினும், இதை உண்டவுடன் குடிநீரை உடனடியாக குடிப்பதால் பல்வேறு வகையான வயிற்றுக் கோளாறுகள் ஏற்படுமாம். நீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் இரைப்பைப் பிரச்சினைகள் மற்றும் வயிற்று வலிக்கும் இது வழிவகுக்கும். ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது? தண்ணீருடன் மக்காச் சோளம் அல்லது சோளக்கருது ஒன்றாக உட்கொள்ளும் போது ​பலர் வாய்வு மற்றும் கடுமையான வயிற்று வலி ஏற்படுவதாக புகார் செய்துள்ளனர். சோளக்கருது உண்டவுடன் குடிநீரை குடிப்பதன் மூலம் ஜீரண நொதிகள் இயல்பிலிருந்து பெருமளவு மாற்றமடைகின்றன எனவே செரிமான வேகம் குறைகிறது. சோளக்கருதில் உள்ள சிக்கலான கார்ப்ஸ் , ஸ்டார்ச் மற்றும் தண்ணீரின் நுகர்வு ஆகியவை வயிற்றில் உள்ள வாயுக்களை வெளியேற்றுவதற்கு வழிவகுக்கலாம். இதனால் வாய்வு , அசிடிட்டி மற்றும் கடுமையான வயிற்று வலி உருவாகும் என டாக்டர் அஷுடோஷ் கூறுகிறார். எவ்வளவு நுரம் கழித்து குடிக்கலாம்? சிறந்த நேர இடைவெளி, குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் இருக்க வேண்டும் என்று வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். இது தவிர, எலு...

கரவெட்டி கிராமத்தின் வரலாறு!

கரவெட்டி கிராமம் ஆனது வதிரி உடுப்பிட்டி துன்னாலை கரணவாய் என்று பெயர் சொல்லக்கூடிய கிராமங்களை எல்லையாக கொண்டு வடமராட்சியில் ஒரு முக்கிய கிராமம். இந்த கரவெட்டியில் நெல்லியடி, சம்மந்தர் கடையடி, கிளவிதோட்டம், யார்க்கரை, அத்துளு, கட்டைவேலி என்றவாறாக சிறு சிறு கிராமக்குடிகளை கொண்டு விளங்குகிறது. ஊர் வழக்கில் நெல்லியடியை கரவெட்டி என்று சொல்லுவதில்லை. அதை நெல்லியடி என்றே சொல்லிக்கொள்ளுவார்கள். கேவளை, தூவெளி, நுகவில் வயல் பகுதி, சாமியன் அரசடி, கோவில்சந்தை, போன்றவற்றை எல்லை கோடுகளாக கொண்டு அழகிய கிராமமாக விளங்குகிறது இதில் கேவளை சந்தி முந்தி ஒரு முக்கியமான இடமாக இருந்திருக்கின்றது. ஏனென்றால் சாவகச்சேரி ஊடாக முந்தி பஸ் ஓடிய காலத்தில் கனகம்புளியடி, கப்பூது, அந்தணதிடல் ஊடாக இந்த சந்திக்குதான் பஸ் எல்லாம் வந்து போறதாம். அது மட்டும் இல்லாமல் யாழ்ப்பாணம் நகரத்திலிருந்து போற பஸ் கூட புத்தூர் வழியாக வந்து கப்பூது வந்து இந்த சந்தி வந்து தான் பருத்தித்துறை போகும். அப்படியாக இந்த சந்தி ஒரு முக்கியமான ஒரு இடமாக விளங்கியிருந்தது என்றால் மிகையாகாது. அதுமட்டும் இல்லாமல் இந்த சந்தியை  ஆய...

தொப்பையை குறைக்கும் எளிய உடற்பயிற்சிகள்

தற்காலத்தில் அனைவருக்கும் பெரிய பிரச்சினையாக காணப்படும் தொப்பையை வீட்டிலேயே சில எளிய உடற்பயிற்சிகளை செய்து குறைப்பது எப்படி என பார்ப்போம். plank walks exercise: இரண்டு கைகளையும் நிலத்தில் ஊன்றி, பக்கவாட்டில் உடலை இயக்க வேண்டும். வலது கை, வலது காலை வலதுபக்கமாக சற்று கீழே இறக்கி, ஏற்ற வேண்டும். அதேபோல் இடது கால், இடது கையை இடதுபக்கமாக கீழே இறக்கி, பின் ஏற்ற வேண்டும். இவ்வாறு 20 முறை செய்ய வேண்டும். படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ள வேண்டும். Squats: கால்கள் எந்த அளவிற்கு வலுவாக உள்ளதோ, அந்தளவுக்கு உடலும் வலுவடையும். கைகளை நேரே நீட்டியவாறு, உடலை பாதியளவிற்கு கீழே இறக்கி, பின் மேலே ஏற்ற வேண்டும். சேரில் அமருவதை போல் அமர்ந்து செய்யும் உடற்பயிற்சி இது. இந்த பயிற்சியை செய்யும் போது உங்களின் கால் தொடைகளில் மாற்றம் தெரிவதை உணரலாம். Mountain Climbers: தண்டால் எடுப்பது போன்ற நிலையில் இருக்க வேண்டும். அப்போது மலை ஏறுவது போல் கால்களை ஒவ்வொன்றாக கொண்டு சென்று, பின் பழைய நிலைக்கு வரவேண்டும். தசைகள் எவ்வளவு வேலை செய்கிறதோ, அந்தளவிற்கு உடல் கொழுப்பு கரைக்கப்படும். toe To Bar:...