Skip to main content

யாழ்ப்பாணத்தான் பெருமைகளும், பீத்தல்களும்!!



     பிளாஸ்டிக் வாளியில் வெடிப்பு வந்தால் எறிய மாட்டார்கள். வயரின் உள்ளே இருக்கும் கம்பியால் கவனமாய்த் தையல் போட்டுத் தேயத் தேயப் பாவிப்பார்கள். 

      சொந்தக் காலில் கம்பி கிழித்தால் காயத்தை விரித்துக் கையளவு கோப்பியைக் கொட்டிவிட்டு மறுவேலை பார்ப்பார்கள். 

      கழுத்து வரைக்கும் கடன் இருந்தாலும் மகளின் சாமர்த்தியவீட்டை ஷாருக்கான் படம் போல நடத்துவார்கள். அதே மகள் ரீயோ ஐஸ்கிறீம் கேட்டால் 'காசுக்கு எங்க போறது' என்று கண்ணீரைத் துடைப்பார்கள்.

      கடன் வாங்கியேனும் பிள்ளைக்கு மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுப்பார்கள்
அதே பிள்ளை ஆறு மணி தாண்டி வீட்ட வராட்டி படலையிலயே தவம் கிடப்பார்கள். 

      விஷக்கடிக்கு பரிகாரி மருந்து  கொடுத்தாலும் உயிர்போகும் அவசரத்திலும் புட்டோடு குழைத்துத்தான் சாப்பிடுவார்கள். சொதியால் சேர்த்து குழைக்காத சோற்றை சாவுப் பட்டினியிலும் கையால் தொட மாட்டார்கள்.

      சாதியை நேரடியாகக் கேட்க மாட்டார்கள். ஊர்,தெரு பெயர் கேட்டு உய்த்தறிவார்கள். 

      அன்னம் தண்ணீர் இல்லாவிட்டால் தாங்கிக் கொள்வார்கள். ஞாயிறு ஆட்டிறைச்சி இல்லாவிட்டால் ஆயுளை விடுவார்கள்.

      சொர்க்கத்தில் இருக்கும் கடவுளுக்கே கேட்கும் அளவு கோயிலில் சத்தமாய் பாட்டுப் போடுவார்கள். பரீட்சையில் பிள்ளைக்கு தொன்னூறுக்குக் குறைவாய் புள்ளி வந்தால் தும்புத்தடியைப் பிரிப்பார்கள்.

     தார் உருக்கும் வெயிலில் தேகம் வியர்க்க வந்தாலும் சூடாய் ஒரு கப் பிளேன்ரீதான் கேட்பார்கள். 

     அனகொண்டா பாம்பே அவுக்கென்று கடித்தாலும் மரமஞ்சளைக் குடித்துவிட்டு மறுவேலை பார்ப்பார்கள், மரண தேவனே மடியில் ஏறினாலும் மருத்துவமனை வாசல் ஏறவே மாட்டார்கள். 

     வருடம் முழுவதும் பஞ்சப்பாட்டுப் பாடுவார்கள், நல்லூர் திருவிழாவில் கண்டதுக்கெல்லாம் காசை விட்டெறிவார்கள்.
     
      அரசையே புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்வார்கள்.. அரசவேலை இல்லாவிட்டால் பெண்ணைத் தர மாட்டார்கள்.

Popular posts from this blog

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய நீல திமிங்கலம்

ஜப்பானில் நீலத்திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. காமக்குரா (( Kamakura)) என்ற இடத்தில் கடலோரப் பகுதியில் கரை ஒதுங்கிய அந்த திமிங்கலம் சுமார் 35 அடி நீளமுள்ளதாகக் காணப்பட்டது. இதையடுத்து திமிங்கலத்தின் எலும்புகளை முழுமையாக எடுத்து அருங்காட்சியகத்தில் வைக்கும் வகையில் திராவகம் மூலம் அதன் சதைப் பகுதியை கரைக்கும் முயற்சியில் ஜப்பான் அரசு ஈடுபட்டுள்ளது. மேலும் திமிங்கலம் இறப்புக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பொதுவாக நீலத் திமிங்கலங்கள் 100 அடி நீளமும் 190 டன் எடை வரையிலும் தன்மை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

காதலனுக்கு நோ சொன்ன பெண்ணிற்கு கிடைத்த தண்டனையை பாருங்கள்...

டெல்லியில் காதலி திடீரென காதலை முறித்துக் கொண்டதால் ஆத்திரமடைந்த காதலன் காதலியை துப்பாக்கியால் சுட்டுள்ளான். டெல்லியை சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார். இந்த பெண்ணும் ஹரிஷ் சர்மா என்ற வாலிபரும் காதலித்து வந்தனர். சமீபத்தில் அந்த பெண் தனது காதலனுடனான உறவை முறித்துக் கொண்டார். பின் அவனுடன் பேசுவதை அறவே நிறுத்தியுள்ளார். ஒன்றும் புரியாத சர்மா, தனது காதலியிடம் பலமுறை பேச முயன்றும் அந்த பெண் சர்மாவை கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சர்மா அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளான். அப்போது அந்த பெண் சர்மாவை வீட்டை விட்டு வெளியே போகும்படி சத்தம் போட்டுள்ளார். கடும் கோபமடைந்த சர்மா தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காதலியை சுட முயன்றுள்ளார். உடனே சுதாரித்துகொண்ட காதலி கதவை மூட முயன்றுள்ளார். இருந்தபோதிலும் அந்த பெண்ணிற்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து அந்த பெண்ணின் உறவினர்கள் போலீஸாரிடம் அளித்த புகாரின் பேரில் போலீஸார் சர்மாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எனக்கு ஓயில் கலப்பில்லாதா நல்ல குடிநீர் ஊரிலிருந்து எடுத்து வா என்று அன்றைக்கு போனா பூதம் இன்னும் வரவே இல்லையாம்

சுன்னாகத்தை சேந்த நபரும்  நீர்வேலிச்சேர்ந்த நபரும்  சாவகச்சேரியை சேர்ந்த நபரும்  ஒன்றாக வடமராட்சிக்கு  சென்று கொண்டிருந்தார்களாம்  இரவு ஒருமணி இருக்கும் வல்லை வெளியில்  ஓர் பூதம் இவர்களை வழி மறித்து  கொன்று தின்னப்போவதாக மிரட்டியது  மூவரும்  கெஞ்சிமன்றாடியும்  பூதம் விடுவதாக இல்லை  நீண்ட நேர தர்க்கத்திற்கு பிறகு பூதம் ஓர் நிபந்தனையை முன்வைத்தது  நீங்கள் உங்கள் ஊரில்  உண்ணக்கூடிய. பதார்த்தத்தை  கேளுங்கள்  என்னால்  தரமுடியாமல்  போ னால்  உங்களை நான் விட்டுவிடுவேன்  நான் கொண்டு வந்தால்  உங்களை  கொல்வேன்  வேறு வழி இன்றி  மூவரும் சம்மதித்தனர்  முதலில்  சவகச்சேரி நபர்கேட்டார்  எனக்கு  நல்ல சுவையுடைய பலாப்பழம் வேண்டு கொண்டுவா என்று உடனே  பூதம்  சாவகச்சேரியில் இருந்து பலாபழத்தை தருவித்தது  அதன் சுவை  நன்றாக இருந்தது  இதைபார்த்த மூவருக்கு நடுக்கம் தொற்றிக்கொண்டது  இரண்டாவதாக. நீர்வேலி  நபர் கேட்டார் நல்ல சுவையுடைய. வாழைபழம் ...