Skip to main content

"அன்பு" இந்த சொல் பற்றி அறியாதவர்கள் அல்லது உணராதவர்கள் யாரும் இந்த பதிவை பார்க்க மாட்டீர்கள் என நம்பி தொடர்கிறேன்!



அன்பு என்றால் என்ன ? 
சட்டென சொல்வீர்கள் "ழவ்" சரி ழவ் என்றால் என்ன ? இப்போது முழிக்கிறீர்களா ? அப்படியென்றால் இதுவரை நீங்கள் இந்த அன்பு என்ற விடயம் பற்றி அவ்வளவாக சிந்தித்ததில்லை 
அல்லது இதுவரை அதைப் பற்றி சிந்திக்க தேவைப்பட்டிருக்காது அப்படித்தானே ?... 

அன்பு என்றால் என்ன ? 
கொஞ்சம் யோசியுங்களேன் ... 
அது தான்... அதே தான் .... கிட்ட வந்துட்டீங்க ... 
இன்னும் கொஞ்சம் ... கம்மான் கம்மான் ... 
மனசில இருக்கு வாய்ல வர மாட்டேங்குது என்கிறீர்களா ? 
கொண்டை வரைக்கும் வருது சொல்ல தெரியல ங்கிறீங்களா ? ... 
அட என்னா போங்க நீங்க .... 

சரி இதை நினைத்துக் கொண்டு இப்போ யோசியுங்கள் ( "care" )கவனிப்பு ... இப்போது யோசியுங்கள் அன்பு என்றால் என்ன ? 

எதோ வர்ர மாதிரி இருக்கு வரல ங்கிறீங்களா ? ... 
அப்போ கூடவே " விட்டுக் கொடுப்பு" இதை சேர்த்துக்கோங்க ...  

அப்பவும் வரவில்லையா ? 
ஆனால் அதை உணர்கிறீர்கள் வார்த்தைகளில் சொல்ல முடியவில்லை அப்படித்தானே ? 
அப்போ அது தான் அன்பு என்கிறீர்களா ? 
எது 
அது 
அதுன்னா ? 
"உணர்கிறேன் சொல்ல முடியல" 
 என்ன குழப்பமா இருக்கா ? 
நல்லா யோசிங்க 
தனிய இருந்து 
நேரம் எடுத்து
யோசியுங்கள் 
எங்க இப்ப சொல்லுங்க அன்பு என்றால் என்ன ?

Popular posts from this blog

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய நீல திமிங்கலம்

ஜப்பானில் நீலத்திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. காமக்குரா (( Kamakura)) என்ற இடத்தில் கடலோரப் பகுதியில் கரை ஒதுங்கிய அந்த திமிங்கலம் சுமார் 35 அடி நீளமுள்ளதாகக் காணப்பட்டது. இதையடுத்து திமிங்கலத்தின் எலும்புகளை முழுமையாக எடுத்து அருங்காட்சியகத்தில் வைக்கும் வகையில் திராவகம் மூலம் அதன் சதைப் பகுதியை கரைக்கும் முயற்சியில் ஜப்பான் அரசு ஈடுபட்டுள்ளது. மேலும் திமிங்கலம் இறப்புக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பொதுவாக நீலத் திமிங்கலங்கள் 100 அடி நீளமும் 190 டன் எடை வரையிலும் தன்மை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

காதலனுக்கு நோ சொன்ன பெண்ணிற்கு கிடைத்த தண்டனையை பாருங்கள்...

டெல்லியில் காதலி திடீரென காதலை முறித்துக் கொண்டதால் ஆத்திரமடைந்த காதலன் காதலியை துப்பாக்கியால் சுட்டுள்ளான். டெல்லியை சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார். இந்த பெண்ணும் ஹரிஷ் சர்மா என்ற வாலிபரும் காதலித்து வந்தனர். சமீபத்தில் அந்த பெண் தனது காதலனுடனான உறவை முறித்துக் கொண்டார். பின் அவனுடன் பேசுவதை அறவே நிறுத்தியுள்ளார். ஒன்றும் புரியாத சர்மா, தனது காதலியிடம் பலமுறை பேச முயன்றும் அந்த பெண் சர்மாவை கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சர்மா அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளான். அப்போது அந்த பெண் சர்மாவை வீட்டை விட்டு வெளியே போகும்படி சத்தம் போட்டுள்ளார். கடும் கோபமடைந்த சர்மா தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காதலியை சுட முயன்றுள்ளார். உடனே சுதாரித்துகொண்ட காதலி கதவை மூட முயன்றுள்ளார். இருந்தபோதிலும் அந்த பெண்ணிற்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து அந்த பெண்ணின் உறவினர்கள் போலீஸாரிடம் அளித்த புகாரின் பேரில் போலீஸார் சர்மாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எனக்கு ஓயில் கலப்பில்லாதா நல்ல குடிநீர் ஊரிலிருந்து எடுத்து வா என்று அன்றைக்கு போனா பூதம் இன்னும் வரவே இல்லையாம்

சுன்னாகத்தை சேந்த நபரும்  நீர்வேலிச்சேர்ந்த நபரும்  சாவகச்சேரியை சேர்ந்த நபரும்  ஒன்றாக வடமராட்சிக்கு  சென்று கொண்டிருந்தார்களாம்  இரவு ஒருமணி இருக்கும் வல்லை வெளியில்  ஓர் பூதம் இவர்களை வழி மறித்து  கொன்று தின்னப்போவதாக மிரட்டியது  மூவரும்  கெஞ்சிமன்றாடியும்  பூதம் விடுவதாக இல்லை  நீண்ட நேர தர்க்கத்திற்கு பிறகு பூதம் ஓர் நிபந்தனையை முன்வைத்தது  நீங்கள் உங்கள் ஊரில்  உண்ணக்கூடிய. பதார்த்தத்தை  கேளுங்கள்  என்னால்  தரமுடியாமல்  போ னால்  உங்களை நான் விட்டுவிடுவேன்  நான் கொண்டு வந்தால்  உங்களை  கொல்வேன்  வேறு வழி இன்றி  மூவரும் சம்மதித்தனர்  முதலில்  சவகச்சேரி நபர்கேட்டார்  எனக்கு  நல்ல சுவையுடைய பலாப்பழம் வேண்டு கொண்டுவா என்று உடனே  பூதம்  சாவகச்சேரியில் இருந்து பலாபழத்தை தருவித்தது  அதன் சுவை  நன்றாக இருந்தது  இதைபார்த்த மூவருக்கு நடுக்கம் தொற்றிக்கொண்டது  இரண்டாவதாக. நீர்வேலி  நபர் கேட்டார் நல்ல சுவையுடைய. வாழைபழம் ...