Skip to main content

சிந்துவெளி மொகஞ்சதாரோவில் கண்டுபிடிக்கப்பட்ட


சிந்துவெளி நாகரீகமான "மொகஞ்சதாரோ"
என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழர்களின் உயர்ந்த நாகரீகத்தை பறைசாற்றும் "வானிலை வட்டக்கல்"....!
காலம்:5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது.

பதிவில்,சிந்துவெளி மொகஞ்சதாரோவில் கண்டுபிடிக்கப்பட்ட வானிலை வட்டக்கல் மற்றும் அங்குநடைமுறையில் இருந்த தமிழ்பெயர்கள் இன்று கூட வழக்கத்தில் பழமை மாறாது இருப்பது ஆச்சரியம்தான்..தற்போது அந்த இடம் அமைந்திருப்பது இன்றய "பாகிஸ்தான்"நாடு!

சிந்து வெளி நாகரீகத்தை பற்றி படித்தருப்போம்.மொகஞ்சதாரோ என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 5000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்களின் உயர்ந்த நாகரீகத்தை பறை சாற்றும் பல பொருட்கள் அண்மையிலும் கண்டுபிடிக்கப்பட்டன.அதில் ஒன்று ஒரு வட்டக்கல்.சிறுவர் உருட்டும் வண்டியின் சக்கரத்தைப் போன்று ,நடுவில் ஒரு பெரிய துளையுடன் உள்ளது.அதற்கு இரு பக்கங்ளிலும் இரு பள்ளங்கள் உண்டு.

முதலில்,இதை ஆராய்ந்த ஆராச்சியாளர்கள் இதை சிறுவர் விளையாடும் விளையாட்டுப் பொருள் என்று நினைத்து விட்டனர்.பின்புதான தெரிந்தது இதன் மதிப்பு என்ன என்பது...!!பின்பு இதை விபரமாக ஆராய்ந்த ஆய்வாளர்கள் அந்த இரு பள்ளங்களிலும்,இரண்டு குச்சிக்ளை செங்குத்தாக நட்டு சூரியனின் அன்றாட நகர்வுகளை துல்லியமாக கண்டரிந்து  உள்ளனர் நம் முன்னோர்கள்.இதன் மூலம் அறிவியல் இல்லாத அந்தக் காலத்திலேயே உலகில் முதன் முதலில் "வானிலை கோட்பாட்டை"எவ்வாறு அறிந்து நடைமுறையில் பயன்படுத்தனர் என்பது தெரியவரும்.இதைக் கண்டு பிடித்தவர்கள் போலந்து நாட்டைச் சேர்ந்த அகழ்வாராச்சியாளர்கள்..!!

மேலும்,அதில் காணப்பட்ட  5 வரிசையான சிறிய பள்ளங்களிலும் குச்சிகளை நட்டு,ஆண்டின் பருவகாலங்களையும் கண்டறிந்துள்ளனர்."வானியல் பேசும் வட்டக்கற்கள்"இது தற்போது அழைக்கப்படுகிறது....

சிந்து சமவெளி தமிழர்கள் பயன்படுத்திய வட்டக்கற்களே தமிழ் நாட்டிலும் ஞாயிறின்(சூரியன்)அன்றாட ஓட்டத்தை அளக்க பயன்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்வாடைப் புலவர் "நக்கீரர்"கூறும் இருகோல்குறிநிலை என்பது இதுபோன்றதொரு கருவியின் மூலம் கண்டறியப்பட்டது என்பது உண்மையே...

தமிழர்களின் வானிலை கோட்பாடு .....இன்றைய வானவியலின் முன்னோடி என்றால் மிகையாகாது....

வாழ்க தமிழ்...


Popular posts from this blog

சம்பந்தர் கடை ஒரு பெட்டிக் கடையின் கதை!

சம்பந்தர் கடை. ஒரு பெட்டிக்கடை சம்பந்தர் கடையடி என இடத்தின் பெயரானது. ஆக இக்கடைக்கு கரவெட்டியின் பிரபல்யமான மூத்த அரசியல்வாதியான சிவசிதம்பரத்தின் வயதிருக்கும். நூறு ஆண்டுகள். யாழ் குடாநாட்டின் புராதனமான கிராமங்களிலொன்று கரவெட்டி. அக்கிராமத்தின் "நடுச்சென்ரறில்" இருக்கிறது இக்கடை.  இன்று உவர் நீர்க் கிணறுகளும் வயல் நிலங்களும் கொண்ட   ஊரின் இப்பகுதி Real Estate பெறுமதி கூடிய பகுதியல்ல. செம்பாட்டு மண்ணும் நன்னீரும் கொண்ட நெல்லியடிப் பகுதிதான் இன்று விலைகூடிய பகுதி. ஆனால் நூறாண்டுகளுக்கு முதல் நெல் வயல்களும் மாடுகளுக்கான மேய்ச்சல் தரைகளும் கொண்ட  பள்ள நிலங்களான சம்பந்தர் கடையடிப் பகுதிகளே ஊரில் விலைகூடிய பகுதிகளாக இருந்தன. சித்த மணியம் போன்ற கரவெட்டியின் செல்வந்த நிலச்சுவாந்தர்களின்  வீடுகள் இப்பகுதிகளிலேயே இருந்தன.     - ஆசிரியர் குறிப்பு #சம்பந்தர்கடை_என்_நினைவில் By கரவெட்டி ராஜி கரவெட்டி  சம்மந்தர்கடை ஒரு உணர்வு பூர்வமான இடம் தான். கரவெட்டி பிரதேசத்தின் ஷொப்பிங் மால் தான் எங்கள் சம்மந்தர்கடை, அங்கு பெட்டிக்கடையில் இருந்து  பெருங்கடை வரைக்கும் உண்டு இன்று வரை. நாலு றோட்டு

கரவெட்டி கிராமத்தின் வரலாறு!

கரவெட்டி கிராமம் ஆனது வதிரி உடுப்பிட்டி துன்னாலை கரணவாய் என்று பெயர் சொல்லக்கூடிய கிராமங்களை எல்லையாக கொண்டு வடமராட்சியில் ஒரு முக்கிய கிராமம். இந்த கரவெட்டியில் நெல்லியடி, சம்மந்தர் கடையடி, கிளவிதோட்டம், யார்க்கரை, அத்துளு, கட்டைவேலி என்றவாறாக சிறு சிறு கிராமக்குடிகளை கொண்டு விளங்குகிறது. ஊர் வழக்கில் நெல்லியடியை கரவெட்டி என்று சொல்லுவதில்லை. அதை நெல்லியடி என்றே சொல்லிக்கொள்ளுவார்கள். கேவளை, தூவெளி, நுகவில் வயல் பகுதி, சாமியன் அரசடி, கோவில்சந்தை, போன்றவற்றை எல்லை கோடுகளாக கொண்டு அழகிய கிராமமாக விளங்குகிறது இதில் கேவளை சந்தி முந்தி ஒரு முக்கியமான இடமாக இருந்திருக்கின்றது. ஏனென்றால் சாவகச்சேரி ஊடாக முந்தி பஸ் ஓடிய காலத்தில் கனகம்புளியடி, கப்பூது, அந்தணதிடல் ஊடாக இந்த சந்திக்குதான் பஸ் எல்லாம் வந்து போறதாம். அது மட்டும் இல்லாமல் யாழ்ப்பாணம் நகரத்திலிருந்து போற பஸ் கூட புத்தூர் வழியாக வந்து கப்பூது வந்து இந்த சந்தி வந்து தான் பருத்தித்துறை போகும். அப்படியாக இந்த சந்தி ஒரு முக்கியமான ஒரு இடமாக விளங்கியிருந்தது என்றால் மிகையாகாது. அதுமட்டும் இல்லாமல் இந்த சந்தியை  ஆயம் என்றும்  ஆயக்கடவ

என்.. ஊர் கரவெட்டி..
கரவெட்டியான்
 என்பதில்
எனக்குப் பெருமை.

என்.. ஊர் கரவெட்டி..

கரவெட்டியான
என்பதில்
எனக்குப் பெருமை.

கரவு.. எட்டி
என்பதனால்
கரவெட்டி ஆனதாய்
பெரியவர்கள்
சொல்லக் கேள்வி..

கற்றாரும்.. மிக்காரும்
கனிந்திருப்பர்
கோயில் 
மணி ஒலியில்
புள்ளினங்கள் பாட்டிசைக்க
பசுந்தாள் தரவையில்
ஆவினங்கள் நடனமிடும்
அழகு நிறை
ஆடம்பரமில்லா கரவெட்டி..

கலைமகளின்
ஆட்சி இங்கே நடப்பதானால்
தடக்கி விழுந்தாலும்
வாத்தியார்
வீட்டுப் படலையே தஞ்சம்..

இயல் ..இசை.. நாடகம்
எல்லாம்
முளை கொண்ட தமிழுலகு..

இயல் .. இசை ..நாடக
விற்பன்னராய்
முச்சந்தி இலக்கியம் படைத்த
மனோன்மணி நடராசாவும்
எங்கள் ஊர் தானே..

கவியுலகின் மன்னவனாய்
எங்கள் 
மன்னவன் கந்தப்பு 
ஆசானின். நகைச்சுவைக் கவிக்கீடாய்
ஏது முண்டோ..

சிலேடைக் கவியை
சிறப்பாய்த் தந்த
பண்டிதர் வீரகத்தி
எம் ஊரின் சிறப்பன்றோ..
அவர் வழியில்
சிலேடைக் கவி தந்த
கணபதிப்பிள்ளை.. சிவராஜசிங்கம்
ஊருக்கு சேர்த்த
பெருமைதனை
என்ன வென்று சொல்வேன்..

தானே கவி எழுதி
தானே மெட்டமைத்துப் பாடும்
யதார்த்தனை
எப்படி மறப்பது..

இலக்கியத்தமிழையும்
பண்டித தமிழையும்
மேட்டுக் குடியின் ஆங்கிலத்தையும்
எங்கள் ஒழுங்கை வரை
கொண்டு வந்த
பண்டிதர் பொன் கணேசன்
அவ