Skip to main content

உங்க கை மற்றும் கால் கருப்பா இருக்கா? அத வெள்ளையாக்க இதோ சில டிப்ஸ்



சிலர் அழகாக காணப்பட வேண்டுமென்று முகத்திற்கு மட்டும் அதிகப்படியான பராமரிப்பை மேற்கொள்வார்கள். கைகள் மற்றும் கால்களை கண்டு கொள்ளவேமாட்டார்கள். இதனால் முகம் ஒரு நிறத்திலும், கை மற்றும் கால்கள் ஒரு நிறத்திலும் இருக்கும்.
ஏழே நாட்களில் வெள்ளையாக ஆசையா? இத ட்ரை பண்ணுங்க… இப்படி இருந்தால், அதற்கு பெயர் அழகு இல்லை. எனவே உங்கள் தலை முதல் கால் வரை ஒரே மாதிரியான நிறத்தில் இருக்க வேண்டுமெனில், வெளியே வெயிலில் செல்லும் போது, முகம், கை, கால் போன்றவற்றிற்கு போதிய பராமரிப்புக்களை மேற்கொள்வதோடு, சூரியக்கதிர்கள் சருமத்தை தாக்காதவாறு பாதுகாக்க வேண்டும்.
வெள்ளையான பற்களை பெறுவதற்கான 5 ரகசியங்கள்!!! இங்கு சூரியக்கதிர்களின் அதிகப்படியான தாக்கத்தால் கருப்பான கை மற்றும் கால்களின் நிறத்தை வெள்ளையாக்க சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தவறாமல் பின்பற்றி வந்தால், நிச்சயம் கை மற்றும் கால்களையும் முகத்தின் நிறத்திற்கு பராமரிக்கலாம்.
எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாற்றில் சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து, அதனை கை மற்றும் கால்களில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவி, உலர்ந்த பின் மாய்ஸ்சுரைசர் தடவி வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கை மற்றும் கால்களில் உள்ள கருமையைப் போக்கலாம்.
தயிர்

தயிர் சருமத்தை மென்மையாகவும், குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள உதவும். அதிலும் அந்த தயிருடன் கடலை மாவு, வெள்ளரிக்காய் ஜூஸ் ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் செய்து, கை மற்றும் கால்களில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி செய்தால், கருமைகள் அகலும்.
கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்லிற்கு சருமத்தில் உள்ள கருமை மற்றும் கரும்புள்ளிகளைப் போக்கும் சக்தி உள்ளது. மேலும் இதற்கு சருமத்தை மென்மையாகவும், வறட்சியின்றியும் வைத்துக் கொள்ளும் திறன் உள்ளது. எனவே கற்றாழை ஜெல்லை தினமும் கால்கள் மற்றும் கைகளில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் தவறாமல் செய்து வந்தால், கைகள் மற்றும் கால்கள் கருமையடையாமல் இருக்கும்.
உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை பேஸ்ட் செய்து, அதனை கைகள் மற்றும் கால்களில் தடவி உலர வைத்து கழுவினால், அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மை மற்றும் வைட்டமின் சி, சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும்.
கடலை மாவு
கடலை மாவு சருமத்தில் உள்ள இறந்த செல்களை முற்றிலும் அகற்றிவிடும். எனவே ஒரு பௌலில் 3 டேபிள் ஸ்பூன் கடலை மாவை போட்டு, தயிர் ஊற்றி பேஸ்ட் செய்து, கை மற்றும் கால்களில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும்.
வெள்ளரிக்காய் மற்றும் மஞ்சள் தூள்

வெள்ளரிக்காய் சாற்றில், மஞ்சள் தூள் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால், கை மற்றும் கால்களில் உள்ள கருமை அகலும்.
சந்தனம்
சந்தனப் பொடியைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமம் இளமையுடன் பொலிவாக காட்சியளிக்கும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் சந்தனப் பொடியுடன், 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, ரோஸ் வாட்டர் ஊற்றி பேஸ்ட் செய்து, கை மற்றும் கால்களில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

Popular posts from this blog

சம்பந்தர் கடை ஒரு பெட்டிக் கடையின் கதை!

சம்பந்தர் கடை. ஒரு பெட்டிக்கடை சம்பந்தர் கடையடி என இடத்தின் பெயரானது. ஆக இக்கடைக்கு கரவெட்டியின் பிரபல்யமான மூத்த அரசியல்வாதியான சிவசிதம்பரத்தின் வயதிருக்கும். நூறு ஆண்டுகள். யாழ் குடாநாட்டின் புராதனமான கிராமங்களிலொன்று கரவெட்டி. அக்கிராமத்தின் "நடுச்சென்ரறில்" இருக்கிறது இக்கடை.  இன்று உவர் நீர்க் கிணறுகளும் வயல் நிலங்களும் கொண்ட   ஊரின் இப்பகுதி Real Estate பெறுமதி கூடிய பகுதியல்ல. செம்பாட்டு மண்ணும் நன்னீரும் கொண்ட நெல்லியடிப் பகுதிதான் இன்று விலைகூடிய பகுதி. ஆனால் நூறாண்டுகளுக்கு முதல் நெல் வயல்களும் மாடுகளுக்கான மேய்ச்சல் தரைகளும் கொண்ட  பள்ள நிலங்களான சம்பந்தர் கடையடிப் பகுதிகளே ஊரில் விலைகூடிய பகுதிகளாக இருந்தன. சித்த மணியம் போன்ற கரவெட்டியின் செல்வந்த நிலச்சுவாந்தர்களின்  வீடுகள் இப்பகுதிகளிலேயே இருந்தன.     - ஆசிரியர் குறிப்பு #சம்பந்தர்கடை_என்_நினைவில் By கரவெட்டி ராஜி கரவெட்டி  சம்மந்தர்கடை ஒரு உணர்வு பூர்வமான இடம் தான். கரவெட்டி பிரதேசத்தின் ஷொப்பிங் மால் தான் எங்கள் சம்மந்தர்கடை, அங்கு பெட்டிக்கடையில் இருந்து  பெருங்கடை வரைக்கும் உண்டு இன்று வரை. நாலு றோட்டு

கரவெட்டி கிராமத்தின் வரலாறு!

கரவெட்டி கிராமம் ஆனது வதிரி உடுப்பிட்டி துன்னாலை கரணவாய் என்று பெயர் சொல்லக்கூடிய கிராமங்களை எல்லையாக கொண்டு வடமராட்சியில் ஒரு முக்கிய கிராமம். இந்த கரவெட்டியில் நெல்லியடி, சம்மந்தர் கடையடி, கிளவிதோட்டம், யார்க்கரை, அத்துளு, கட்டைவேலி என்றவாறாக சிறு சிறு கிராமக்குடிகளை கொண்டு விளங்குகிறது. ஊர் வழக்கில் நெல்லியடியை கரவெட்டி என்று சொல்லுவதில்லை. அதை நெல்லியடி என்றே சொல்லிக்கொள்ளுவார்கள். கேவளை, தூவெளி, நுகவில் வயல் பகுதி, சாமியன் அரசடி, கோவில்சந்தை, போன்றவற்றை எல்லை கோடுகளாக கொண்டு அழகிய கிராமமாக விளங்குகிறது இதில் கேவளை சந்தி முந்தி ஒரு முக்கியமான இடமாக இருந்திருக்கின்றது. ஏனென்றால் சாவகச்சேரி ஊடாக முந்தி பஸ் ஓடிய காலத்தில் கனகம்புளியடி, கப்பூது, அந்தணதிடல் ஊடாக இந்த சந்திக்குதான் பஸ் எல்லாம் வந்து போறதாம். அது மட்டும் இல்லாமல் யாழ்ப்பாணம் நகரத்திலிருந்து போற பஸ் கூட புத்தூர் வழியாக வந்து கப்பூது வந்து இந்த சந்தி வந்து தான் பருத்தித்துறை போகும். அப்படியாக இந்த சந்தி ஒரு முக்கியமான ஒரு இடமாக விளங்கியிருந்தது என்றால் மிகையாகாது. அதுமட்டும் இல்லாமல் இந்த சந்தியை  ஆயம் என்றும்  ஆயக்கடவ

என்.. ஊர் கரவெட்டி..
கரவெட்டியான்
 என்பதில்
எனக்குப் பெருமை.

என்.. ஊர் கரவெட்டி..

கரவெட்டியான
என்பதில்
எனக்குப் பெருமை.

கரவு.. எட்டி
என்பதனால்
கரவெட்டி ஆனதாய்
பெரியவர்கள்
சொல்லக் கேள்வி..

கற்றாரும்.. மிக்காரும்
கனிந்திருப்பர்
கோயில் 
மணி ஒலியில்
புள்ளினங்கள் பாட்டிசைக்க
பசுந்தாள் தரவையில்
ஆவினங்கள் நடனமிடும்
அழகு நிறை
ஆடம்பரமில்லா கரவெட்டி..

கலைமகளின்
ஆட்சி இங்கே நடப்பதானால்
தடக்கி விழுந்தாலும்
வாத்தியார்
வீட்டுப் படலையே தஞ்சம்..

இயல் ..இசை.. நாடகம்
எல்லாம்
முளை கொண்ட தமிழுலகு..

இயல் .. இசை ..நாடக
விற்பன்னராய்
முச்சந்தி இலக்கியம் படைத்த
மனோன்மணி நடராசாவும்
எங்கள் ஊர் தானே..

கவியுலகின் மன்னவனாய்
எங்கள் 
மன்னவன் கந்தப்பு 
ஆசானின். நகைச்சுவைக் கவிக்கீடாய்
ஏது முண்டோ..

சிலேடைக் கவியை
சிறப்பாய்த் தந்த
பண்டிதர் வீரகத்தி
எம் ஊரின் சிறப்பன்றோ..
அவர் வழியில்
சிலேடைக் கவி தந்த
கணபதிப்பிள்ளை.. சிவராஜசிங்கம்
ஊருக்கு சேர்த்த
பெருமைதனை
என்ன வென்று சொல்வேன்..

தானே கவி எழுதி
தானே மெட்டமைத்துப் பாடும்
யதார்த்தனை
எப்படி மறப்பது..

இலக்கியத்தமிழையும்
பண்டித தமிழையும்
மேட்டுக் குடியின் ஆங்கிலத்தையும்
எங்கள் ஒழுங்கை வரை
கொண்டு வந்த
பண்டிதர் பொன் கணேசன்
அவ