Skip to main content

உங்கள் ஜாதகம் இப்படி இருந்தால்.... உங்களுக்கு தான் அந்த சிம்மாசன யோகம் உண்டு!

ஜோதிடக் கலை என்பது ஒரு மிகப்பெரும் சமுத்திரத்தை போன்றது. அதிலிருக்கும் எல்லாவற்றையும் கற்று பண்டிதனாக ஒரு மனிதனின் வாழ்நாள் போதாது. இந்த ஜோதிடத்தில் ஒரு மனிதன் பிறக்கும் போது அன்றைய நாள், நட்சத்திரம், திதி போன்ற பலவற்றை கணக்கிட்டு எழுதப்படுவது ஜாதகம் எனப்படும். அந்த ஜாதகத்தை ஆராய்ந்தோமேயானால் ஒரு சிலருக்கு சில கிரகங்கள் மூலமாக யோகம் ஏற்படுவதை அறியலாம். அப்படி மிகவும் அரிதாக ஒரு சிலருக்கு மட்டுமே ஏற்படக்கூடிய சிம்மாசன யோகத்தை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்திற்குரிய அதிபதி 10 ஆம் வீட்டில் இருக்க, 10 ஆம் வீட்டிற்குரிய அதிபதி லக்ன வீட்டில் இருந்தால், இந்த “சிம்ஹாசன” யோகம் ஏற்படுகிறது. உதாரணமாக உங்களின் லக்னம் ரிஷபம் என வைத்து கொள்வோம். ரிஷபத்திற்கு அதிபதி சுக்ரன். ரிஷபத்திற்கு 10 ஆம் வீடாக வருவது கும்பம் (ரிஷபத்தில் இருந்து 10 வது ராசி) இதன் அதிபதி சனிபகவான் ஆவார்.
இப்போது சனிபகவான் ரிஷப லக்கினதிலில் இருந்து, சுக்கிரன் 10 ஆம் வீடான கும்ப ராசியிலிருக்க சிம்மாசன யோகம் ஏற்படுகிறது.
சிம்மாசன யோகத்தில் பிறந்தவர்கள் நல்ல கம்பீரமான உடலமைப்பையும், முகத்தோற்றத்தையும் கொண்டிருப்பார்கள். பெரும்பாலும் செல்வந்தர்கள் மற்றும் அரச குடும்பத்தில் பிறந்தவர்கள் இத்தகைய யோகத்தை கொண்டிருப்பார்கள். கலா ரசிகர்களாக இருப்பார்கள். அதே நேரத்தில் உடல் பலத்தை காட்டக்கூடிய வீரக்கலைகளிலும் தேர்ச்சி பெற்றிருப்பார்கள். நீதி நேர்மை போன்ற குணங்களை அதிகம் கொண்டிருப்பார்கள். எந்த ஒரு பிரச்சனைக்கும் அதை சரியான வகையில் ஆய்ந்து எல்லோருக்கும் பொதுவான ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்ப்பை அளிப்பார்கள். கலைத்துறைகளில் இவர்கள் ஈடுபட்டால் மக்களை அதிகளவு ஈர்க்கக்கூடிய திறனை கொண்டவர்களாக இருப்பார்கள். பல வகையான சுகங்களை அனுபவிப்பார்கள்.
அதே நேரத்தில் தன் நாட்டிற்காகவும் தான் நேசிக்கும் மக்களுக்காகவும் அத்தகைய சுகபோகங்களை தியாகம் செய்வர். இந்த ஜாதகர்களுக்கு அவர்களின் ஜாதகத்தில் 10 ஆவது இடத்தில் குரு, செவ்வாய், சுக்கிரன், போன்ற கிரகங்கள் இருந்தால், அவருக்கு நாட்டை ஆளக்கூடிய பிரதமர், ஜனாதிபதி போன்ற பதவிகளை அடையும் யோகம் நிச்சயம் உண்டு. இத்தகைய உயர்பதவிகளை அடையவில்லை என்றாலும் கூட ஒரு சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினராகவாவது இருக்க கூடும். அரச பரம்பரையில் பிறந்த எவருக்கேனும் இந்த சிம்மாசன யோகம் அவர்களின் ஜாதகத்தில் இருக்கும் பட்சத்தில், அடுத்த அரசராக முடிசூட்டிக்கொள்ளும் வாய்ப்புகள் இவர்களுக்கு அதிகம். இவர்கள் இறுதி காலம் வரை வசதியான வாழ்க்கையை வாழ்வார்கள்.

Popular posts from this blog

இந்த ஒரு பொருள் சாப்பிட்டு முடிச்சதும் தண்ணீர் குடிக்கக் கூடாது! ஏன் தெரியுமா?

வறுத்த மக்காச் சோளம் அல்லது பூட்டா அற்புதமான சுவையோடு ஆரோக்கியமான சிற்றுண்டி விருப்பமாகவும் இருக்கிறது. இருப்பினும், இதை உண்டவுடன் குடிநீரை உடனடியாக குடிப்பதால் பல்வேறு வகையான வயிற்றுக் கோளாறுகள் ஏற்படுமாம். நீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் இரைப்பைப் பிரச்சினைகள் மற்றும் வயிற்று வலிக்கும் இது வழிவகுக்கும். ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது? தண்ணீருடன் மக்காச் சோளம் அல்லது சோளக்கருது ஒன்றாக உட்கொள்ளும் போது ​பலர் வாய்வு மற்றும் கடுமையான வயிற்று வலி ஏற்படுவதாக புகார் செய்துள்ளனர். சோளக்கருது உண்டவுடன் குடிநீரை குடிப்பதன் மூலம் ஜீரண நொதிகள் இயல்பிலிருந்து பெருமளவு மாற்றமடைகின்றன எனவே செரிமான வேகம் குறைகிறது. சோளக்கருதில் உள்ள சிக்கலான கார்ப்ஸ் , ஸ்டார்ச் மற்றும் தண்ணீரின் நுகர்வு ஆகியவை வயிற்றில் உள்ள வாயுக்களை வெளியேற்றுவதற்கு வழிவகுக்கலாம். இதனால் வாய்வு , அசிடிட்டி மற்றும் கடுமையான வயிற்று வலி உருவாகும் என டாக்டர் அஷுடோஷ் கூறுகிறார். எவ்வளவு நுரம் கழித்து குடிக்கலாம்? சிறந்த நேர இடைவெளி, குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் இருக்க வேண்டும் என்று வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். இது தவிர, எலு...

சம்பந்தர் கடை ஒரு பெட்டிக் கடையின் கதை!

சம்பந்தர் கடை. ஒரு பெட்டிக்கடை சம்பந்தர் கடையடி என இடத்தின் பெயரானது. ஆக இக்கடைக்கு கரவெட்டியின் பிரபல்யமான மூத்த அரசியல்வாதியான சிவசிதம்பரத்தின் வயதிருக்கும். நூறு ஆண்டுகள். யாழ் குடாநாட்டின் புராதனமான கிராமங்களிலொன்று கரவெட்டி. அக்கிராமத்தின் "நடுச்சென்ரறில்" இருக்கிறது இக்கடை.  இன்று உவர் நீர்க் கிணறுகளும் வயல் நிலங்களும் கொண்ட   ஊரின் இப்பகுதி Real Estate பெறுமதி கூடிய பகுதியல்ல. செம்பாட்டு மண்ணும் நன்னீரும் கொண்ட நெல்லியடிப் பகுதிதான் இன்று விலைகூடிய பகுதி. ஆனால் நூறாண்டுகளுக்கு முதல் நெல் வயல்களும் மாடுகளுக்கான மேய்ச்சல் தரைகளும் கொண்ட  பள்ள நிலங்களான சம்பந்தர் கடையடிப் பகுதிகளே ஊரில் விலைகூடிய பகுதிகளாக இருந்தன. சித்த மணியம் போன்ற கரவெட்டியின் செல்வந்த நிலச்சுவாந்தர்களின்  வீடுகள் இப்பகுதிகளிலேயே இருந்தன.     - ஆசிரியர் குறிப்பு #சம்பந்தர்கடை_என்_நினைவில் By கரவெட்டி ராஜி கரவெட்டி  சம்மந்தர்கடை ஒரு உணர்வு பூர்வமான இடம் தான். கரவெட்டி பிரதேசத்தின் ஷொப்பிங் மால் தான் எங்கள் சம்மந்தர்கடை, அங்கு பெட்டிக்கடையில் இருந்து  பெருங்கடை வரைக்கும்...

கரவெட்டி கிராமத்தின் வரலாறு!

கரவெட்டி கிராமம் ஆனது வதிரி உடுப்பிட்டி துன்னாலை கரணவாய் என்று பெயர் சொல்லக்கூடிய கிராமங்களை எல்லையாக கொண்டு வடமராட்சியில் ஒரு முக்கிய கிராமம். இந்த கரவெட்டியில் நெல்லியடி, சம்மந்தர் கடையடி, கிளவிதோட்டம், யார்க்கரை, அத்துளு, கட்டைவேலி என்றவாறாக சிறு சிறு கிராமக்குடிகளை கொண்டு விளங்குகிறது. ஊர் வழக்கில் நெல்லியடியை கரவெட்டி என்று சொல்லுவதில்லை. அதை நெல்லியடி என்றே சொல்லிக்கொள்ளுவார்கள். கேவளை, தூவெளி, நுகவில் வயல் பகுதி, சாமியன் அரசடி, கோவில்சந்தை, போன்றவற்றை எல்லை கோடுகளாக கொண்டு அழகிய கிராமமாக விளங்குகிறது இதில் கேவளை சந்தி முந்தி ஒரு முக்கியமான இடமாக இருந்திருக்கின்றது. ஏனென்றால் சாவகச்சேரி ஊடாக முந்தி பஸ் ஓடிய காலத்தில் கனகம்புளியடி, கப்பூது, அந்தணதிடல் ஊடாக இந்த சந்திக்குதான் பஸ் எல்லாம் வந்து போறதாம். அது மட்டும் இல்லாமல் யாழ்ப்பாணம் நகரத்திலிருந்து போற பஸ் கூட புத்தூர் வழியாக வந்து கப்பூது வந்து இந்த சந்தி வந்து தான் பருத்தித்துறை போகும். அப்படியாக இந்த சந்தி ஒரு முக்கியமான ஒரு இடமாக விளங்கியிருந்தது என்றால் மிகையாகாது. அதுமட்டும் இல்லாமல் இந்த சந்தியை  ஆய...