Skip to main content

என்.. ஊர் கரவெட்டி..
கரவெட்டியான்
 என்பதில்
எனக்குப் பெருமை.

என்.. ஊர் கரவெட்டி..

கரவெட்டியான
என்பதில்
எனக்குப் பெருமை.

கரவு.. எட்டி
என்பதனால்
கரவெட்டி ஆனதாய்
பெரியவர்கள்
சொல்லக் கேள்வி..

கற்றாரும்.. மிக்காரும்
கனிந்திருப்பர்
கோயில் 
மணி ஒலியில்
புள்ளினங்கள் பாட்டிசைக்க
பசுந்தாள் தரவையில்
ஆவினங்கள் நடனமிடும்
அழகு நிறை
ஆடம்பரமில்லா கரவெட்டி..

கலைமகளின்
ஆட்சி இங்கே நடப்பதானால்
தடக்கி விழுந்தாலும்
வாத்தியார்
வீட்டுப் படலையே தஞ்சம்..

இயல் ..இசை.. நாடகம்
எல்லாம்
முளை கொண்ட தமிழுலகு..

இயல் .. இசை ..நாடக
விற்பன்னராய்
முச்சந்தி இலக்கியம் படைத்த
மனோன்மணி நடராசாவும்
எங்கள் ஊர் தானே..

கவியுலகின் மன்னவனாய்
எங்கள் 
மன்னவன் கந்தப்பு 
ஆசானின். நகைச்சுவைக் கவிக்கீடாய்
ஏது முண்டோ..

சிலேடைக் கவியை
சிறப்பாய்த் தந்த
பண்டிதர் வீரகத்தி
எம் ஊரின் சிறப்பன்றோ..
அவர் வழியில்
சிலேடைக் கவி தந்த
கணபதிப்பிள்ளை.. சிவராஜசிங்கம்
ஊருக்கு சேர்த்த
பெருமைதனை
என்ன வென்று சொல்வேன்..

தானே கவி எழுதி
தானே மெட்டமைத்துப் பாடும்
யதார்த்தனை
எப்படி மறப்பது..

இலக்கியத்தமிழையும்
பண்டித தமிழையும்
மேட்டுக் குடியின் ஆங்கிலத்தையும்
எங்கள் ஒழுங்கை வரை
கொண்டு வந்த
பண்டிதர் பொன் கணேசன்
அவர்கள்
பிறந்த ஊர் என் ஊர்..

பட்டிமன்ற பேச்சுக்களால்
மேடைகளை
அதிரவைத்த பொன் கணேசன்
இடிமுழக்கம் நடேசு
உணர்சிமிகு பேச்சாளர் மெய்யரசன்
அறிவு பேச்சாளர் லீலாரட்ணம்
இப்படி எத்தனை எத்தனை
பேச்சாளர்கள்..

தமிழ்த் தாய் பெற்றெடுத்த
தவப் புதல்வன்
முதுபெரும் இலக்கியவாதி..
எங்கள் பேராசிரியர் சிவத்தம்பி
பிறந்ததும் எங்களூரே..

நாடக.. உலகின்
சிம்ம சொப்பனம்
எங்கள் அருள் அண்ணன்
கூத்துக் கலையின் முன்னோடிகள்
கிருஸ்ணாழ்வார்.. ஏகன் சின்னத்தம்பி
போன்றோரும் எங்களூரே..

தனி நடிப்பால் 
புகழ் சேர்த்த பாலச்சந்திரனும்
தம்பர் மார்க்கண்டுவும்
எம் ஊரின் பெருமை அன்றோ..

கதை உலகின் நாயகர்களாய்
கரவைக்கதிர்., றஞ்சகுமார்
கணமகேஸ்வரன்.. நெல்லை க பேரன்
தெணியான் கருணையோகன்
கரவை மு தயாளன்
பட்டியல் நீளுகின்ற
எங்கள் ஊர்..

தூய்மை.. எளிமை மிகு
அரசியல் ஆளுமைகளாய்
வலம் வந்த
சிவசிதம்பரம்.. ஜெயக்கொடி.. கந்தையா
இராசலிங்கம்..
அரசியல் செய்த
பெருமை மிகு ஊர்
எங்கள் கரவெட்டி..

பத்திரிகைத் துறையில்
கேலிச் சித்திரங்கள் மூலம்
புதுமை செய்த
சிரித்திரன் சுந்தரின்
ஆளுமையை
என்னவென்பேன்..

பத்திரிகைத் துறையில்
சிகரம் தொட்ட
வீரகத்தி தனபாலுவும் ( வீ.த)
எங்கள் ஊரின்
சொத்து அன்றோ..

இன்னும்
நான் அறியாப் பல விடயங்கள்
இருக்கும்
அதை அறிந்தும்
எங்கள் ஊரின்
பெருமை சொல்வேன்...

நாற் புறமும்
வயல் சூழ
இயற்கை அழகு கொஞ்சும்
எங்கள் கரவெட்டி மண்ணில்
பிறந்தது
எனக்கும் பெருமை...

என் நெஞ்சை
நிமிர்த்திச் சொல்கிறேன்
நான்
கரவெட்டியான் என்று..

எங்கள் கரவெட்டி மண்ணே
நீ... வாழி.. வாழி..

Popular posts from this blog

சம்பந்தர் கடை ஒரு பெட்டிக் கடையின் கதை!

சம்பந்தர் கடை. ஒரு பெட்டிக்கடை சம்பந்தர் கடையடி என இடத்தின் பெயரானது. ஆக இக்கடைக்கு கரவெட்டியின் பிரபல்யமான மூத்த அரசியல்வாதியான சிவசிதம்பரத்தின் வயதிருக்கும். நூறு ஆண்டுகள். யாழ் குடாநாட்டின் புராதனமான கிராமங்களிலொன்று கரவெட்டி. அக்கிராமத்தின் "நடுச்சென்ரறில்" இருக்கிறது இக்கடை.  இன்று உவர் நீர்க் கிணறுகளும் வயல் நிலங்களும் கொண்ட   ஊரின் இப்பகுதி Real Estate பெறுமதி கூடிய பகுதியல்ல. செம்பாட்டு மண்ணும் நன்னீரும் கொண்ட நெல்லியடிப் பகுதிதான் இன்று விலைகூடிய பகுதி. ஆனால் நூறாண்டுகளுக்கு முதல் நெல் வயல்களும் மாடுகளுக்கான மேய்ச்சல் தரைகளும் கொண்ட  பள்ள நிலங்களான சம்பந்தர் கடையடிப் பகுதிகளே ஊரில் விலைகூடிய பகுதிகளாக இருந்தன. சித்த மணியம் போன்ற கரவெட்டியின் செல்வந்த நிலச்சுவாந்தர்களின்  வீடுகள் இப்பகுதிகளிலேயே இருந்தன.     - ஆசிரியர் குறிப்பு #சம்பந்தர்கடை_என்_நினைவில் By கரவெட்டி ராஜி கரவெட்டி  சம்மந்தர்கடை ஒரு உணர்வு பூர்வமான இடம் தான். கரவெட்டி பிரதேசத்தின் ஷொப்பிங் மால் தான் எங்கள் சம்மந்தர்கடை, அங்கு பெட்டிக்கடையில் இருந்து  பெருங்கடை வரைக்கும் உண்டு இன்று வரை. நாலு றோட்டு

கரவெட்டி கிராமத்தின் வரலாறு!

கரவெட்டி கிராமம் ஆனது வதிரி உடுப்பிட்டி துன்னாலை கரணவாய் என்று பெயர் சொல்லக்கூடிய கிராமங்களை எல்லையாக கொண்டு வடமராட்சியில் ஒரு முக்கிய கிராமம். இந்த கரவெட்டியில் நெல்லியடி, சம்மந்தர் கடையடி, கிளவிதோட்டம், யார்க்கரை, அத்துளு, கட்டைவேலி என்றவாறாக சிறு சிறு கிராமக்குடிகளை கொண்டு விளங்குகிறது. ஊர் வழக்கில் நெல்லியடியை கரவெட்டி என்று சொல்லுவதில்லை. அதை நெல்லியடி என்றே சொல்லிக்கொள்ளுவார்கள். கேவளை, தூவெளி, நுகவில் வயல் பகுதி, சாமியன் அரசடி, கோவில்சந்தை, போன்றவற்றை எல்லை கோடுகளாக கொண்டு அழகிய கிராமமாக விளங்குகிறது இதில் கேவளை சந்தி முந்தி ஒரு முக்கியமான இடமாக இருந்திருக்கின்றது. ஏனென்றால் சாவகச்சேரி ஊடாக முந்தி பஸ் ஓடிய காலத்தில் கனகம்புளியடி, கப்பூது, அந்தணதிடல் ஊடாக இந்த சந்திக்குதான் பஸ் எல்லாம் வந்து போறதாம். அது மட்டும் இல்லாமல் யாழ்ப்பாணம் நகரத்திலிருந்து போற பஸ் கூட புத்தூர் வழியாக வந்து கப்பூது வந்து இந்த சந்தி வந்து தான் பருத்தித்துறை போகும். அப்படியாக இந்த சந்தி ஒரு முக்கியமான ஒரு இடமாக விளங்கியிருந்தது என்றால் மிகையாகாது. அதுமட்டும் இல்லாமல் இந்த சந்தியை  ஆயம் என்றும்  ஆயக்கடவ