Skip to main content

சீக்கிரமாக முடி வளர இந்த மூன்று பொருட்கள் போதும்!




முடி உதிர்தல் பிரச்சனை பலருக்கு இருக்கிறது. முடிக்கு தொடர்ந்து அதிகளவு ஷாம்புக்கள் மற்றும் கண்டிஸ்னர்களை உபயோகிக்கும் போது அவற்றில் உள்ள கெமிக்கல்கள் முடியை சேதப்படுத்துகின்றன.

இதனால் முடி வறட்சி, முடி உதிர்தல், தலையில் அரிப்பு போன்றவை ஏற்படுகின்றன. இந்த பிரச்சனைக்கு இயற்கை பொருட்கள் மட்டுமே மிகச்சிறந்த தீர்வாக இருக்கும்.

முட்டை

முட்டை முடி உதிர்வு பிரச்சனை மற்றும் பொடுகு பிரச்சனைக்கு தீர்வாக இருக்கிறது. வெள்ளைக்கருவில் விட்டமின் ஏ, பி, டி மற்றும் இ ஆகியவை உள்ளன.

முட்டையின் வெள்ளைக்கருவானது முடிக்கு கண்டிஸ்னராகவும் பயன்படுகிறது. முட்டையை முடிக்கு பயன்படுத்துவதால் முடிக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. இது பாதுகாப்பானதாகவும் இருக்கிறது.

தேன்

தேன் வறண்ட, சேதமடைந்த கூந்தலுக்கு உதவியாக உள்ளது. தேன் முடியை மிருதுவாக்குகிறது. இது முடி வறட்சியால் உண்டான பொடுகை போக்க உதவுகிறது. தேனை பிற மருத்துவ பொருட்களுடன் கலந்து பயன்படுத்தும் முடிக்கு அதிக ஆரோக்கியத்தை கொடுக்கிறது.

விளக்கெண்ணை

விளக்கெண்ணை இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. இது முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது. இது முடியின் வேர்க்கால்களை வலிமையாக்குகிறது. இதில் ஆண்டி பாக்டீரியல் மற்றும் ஆண்டி வைரல் மூலக்கூறுகள் உள்ளன. இது முடியை மிருதுவாக்க உதவுகிறது.

செய்முறை
  • முட்டை 1
  • விளக்கெண்ணை - 2 டேபிள் ஸ்பூன்
  • தேன் - 1 டேபிள் ஸ்பூன்

மேலே கொடுக்கப்பட்டுள்ள மூன்று பொருட்களையும் ஒன்றாக கலந்து, முடிக்கு அப்ளை செய்து, பின்னர் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். 

இதனை 1 முதல் 2 மணிநேரம் வரை ஊற வைத்து, முடியை நன்றாக அலச வேண்டும். இதனை வாரத்தில் ஒருமுறை செய்ய வேண்டும்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை

இதை செய்வதோடு மட்டுமின்றி, ஆரோக்கியமான உணவுகள், சத்தான சரிவிகித உணவுகள் ஆகியவற்றை சாப்பிட வேண்டும். மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டியதும், உடற்பயிற்சி செய்ய வேண்டியதும் அவசியமாகும்.

Popular posts from this blog

சம்பந்தர் கடை ஒரு பெட்டிக் கடையின் கதை!

சம்பந்தர் கடை. ஒரு பெட்டிக்கடை சம்பந்தர் கடையடி என இடத்தின் பெயரானது. ஆக இக்கடைக்கு கரவெட்டியின் பிரபல்யமான மூத்த அரசியல்வாதியான சிவசிதம்பரத்தின் வயதிருக்கும். நூறு ஆண்டுகள். யாழ் குடாநாட்டின் புராதனமான கிராமங்களிலொன்று கரவெட்டி. அக்கிராமத்தின் "நடுச்சென்ரறில்" இருக்கிறது இக்கடை.  இன்று உவர் நீர்க் கிணறுகளும் வயல் நிலங்களும் கொண்ட   ஊரின் இப்பகுதி Real Estate பெறுமதி கூடிய பகுதியல்ல. செம்பாட்டு மண்ணும் நன்னீரும் கொண்ட நெல்லியடிப் பகுதிதான் இன்று விலைகூடிய பகுதி. ஆனால் நூறாண்டுகளுக்கு முதல் நெல் வயல்களும் மாடுகளுக்கான மேய்ச்சல் தரைகளும் கொண்ட  பள்ள நிலங்களான சம்பந்தர் கடையடிப் பகுதிகளே ஊரில் விலைகூடிய பகுதிகளாக இருந்தன. சித்த மணியம் போன்ற கரவெட்டியின் செல்வந்த நிலச்சுவாந்தர்களின்  வீடுகள் இப்பகுதிகளிலேயே இருந்தன.     - ஆசிரியர் குறிப்பு #சம்பந்தர்கடை_என்_நினைவில் By கரவெட்டி ராஜி கரவெட்டி  சம்மந்தர்கடை ஒரு உணர்வு பூர்வமான இடம் தான். கரவெட்டி பிரதேசத்தின் ஷொப்பிங் மால் தான் எங்கள் சம்மந்தர்கடை, அங்கு பெட்டிக்கடையில் இருந்து  பெருங்கடை வரைக்கும் உண்டு இன்று வரை. நாலு றோட்டு

கரவெட்டி கிராமத்தின் வரலாறு!

கரவெட்டி கிராமம் ஆனது வதிரி உடுப்பிட்டி துன்னாலை கரணவாய் என்று பெயர் சொல்லக்கூடிய கிராமங்களை எல்லையாக கொண்டு வடமராட்சியில் ஒரு முக்கிய கிராமம். இந்த கரவெட்டியில் நெல்லியடி, சம்மந்தர் கடையடி, கிளவிதோட்டம், யார்க்கரை, அத்துளு, கட்டைவேலி என்றவாறாக சிறு சிறு கிராமக்குடிகளை கொண்டு விளங்குகிறது. ஊர் வழக்கில் நெல்லியடியை கரவெட்டி என்று சொல்லுவதில்லை. அதை நெல்லியடி என்றே சொல்லிக்கொள்ளுவார்கள். கேவளை, தூவெளி, நுகவில் வயல் பகுதி, சாமியன் அரசடி, கோவில்சந்தை, போன்றவற்றை எல்லை கோடுகளாக கொண்டு அழகிய கிராமமாக விளங்குகிறது இதில் கேவளை சந்தி முந்தி ஒரு முக்கியமான இடமாக இருந்திருக்கின்றது. ஏனென்றால் சாவகச்சேரி ஊடாக முந்தி பஸ் ஓடிய காலத்தில் கனகம்புளியடி, கப்பூது, அந்தணதிடல் ஊடாக இந்த சந்திக்குதான் பஸ் எல்லாம் வந்து போறதாம். அது மட்டும் இல்லாமல் யாழ்ப்பாணம் நகரத்திலிருந்து போற பஸ் கூட புத்தூர் வழியாக வந்து கப்பூது வந்து இந்த சந்தி வந்து தான் பருத்தித்துறை போகும். அப்படியாக இந்த சந்தி ஒரு முக்கியமான ஒரு இடமாக விளங்கியிருந்தது என்றால் மிகையாகாது. அதுமட்டும் இல்லாமல் இந்த சந்தியை  ஆயம் என்றும்  ஆயக்கடவ

என்.. ஊர் கரவெட்டி..
கரவெட்டியான்
 என்பதில்
எனக்குப் பெருமை.

என்.. ஊர் கரவெட்டி..

கரவெட்டியான
என்பதில்
எனக்குப் பெருமை.

கரவு.. எட்டி
என்பதனால்
கரவெட்டி ஆனதாய்
பெரியவர்கள்
சொல்லக் கேள்வி..

கற்றாரும்.. மிக்காரும்
கனிந்திருப்பர்
கோயில் 
மணி ஒலியில்
புள்ளினங்கள் பாட்டிசைக்க
பசுந்தாள் தரவையில்
ஆவினங்கள் நடனமிடும்
அழகு நிறை
ஆடம்பரமில்லா கரவெட்டி..

கலைமகளின்
ஆட்சி இங்கே நடப்பதானால்
தடக்கி விழுந்தாலும்
வாத்தியார்
வீட்டுப் படலையே தஞ்சம்..

இயல் ..இசை.. நாடகம்
எல்லாம்
முளை கொண்ட தமிழுலகு..

இயல் .. இசை ..நாடக
விற்பன்னராய்
முச்சந்தி இலக்கியம் படைத்த
மனோன்மணி நடராசாவும்
எங்கள் ஊர் தானே..

கவியுலகின் மன்னவனாய்
எங்கள் 
மன்னவன் கந்தப்பு 
ஆசானின். நகைச்சுவைக் கவிக்கீடாய்
ஏது முண்டோ..

சிலேடைக் கவியை
சிறப்பாய்த் தந்த
பண்டிதர் வீரகத்தி
எம் ஊரின் சிறப்பன்றோ..
அவர் வழியில்
சிலேடைக் கவி தந்த
கணபதிப்பிள்ளை.. சிவராஜசிங்கம்
ஊருக்கு சேர்த்த
பெருமைதனை
என்ன வென்று சொல்வேன்..

தானே கவி எழுதி
தானே மெட்டமைத்துப் பாடும்
யதார்த்தனை
எப்படி மறப்பது..

இலக்கியத்தமிழையும்
பண்டித தமிழையும்
மேட்டுக் குடியின் ஆங்கிலத்தையும்
எங்கள் ஒழுங்கை வரை
கொண்டு வந்த
பண்டிதர் பொன் கணேசன்
அவ