Skip to main content

கன்னியா வென்னீர் ஊற்றின் அருகில் உள்ள மலையில் காணப்படும் இராவணனின் தாய் கைகேசியின் கல்லறையே இது.




தனது தாயின் ஈமக் கிரியைகளை நிறைவு செய்வதற்காக இராவணன் ஏழு வென்னீர் ஊற்றுக்களை இவ்விடத்தில் உருவாக்கி கிரியைகளை நிறைவு செய்த பின் இவ்விடத்திலேயே தாயின் சமாதியையும் அமைத்தான் என இந்திய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இது 60 அடி சமாதி என அழைக்கப் படுகிறது. தாயின் சமாதியின் அருகிலேயே இராவணனின் சமாதியும் அமைக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது.

 இராவணனின் தலைநகர் அருகிலுள்ள திரிகூட மலையில் (திருக்கோணமலை) அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இராவணனின் பாட்டி ஆவிர்பூ கன்னியாக இருந்த போது இவ்விடத்தில் தான் புலத்திய முனிவரைக் கண்டதாகத் தெரிய வருகிறது. அகத்திய முனிவர் இவ்விடத்தில் சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டதாக குறிப்புகள் கூறுகின்றன.

இத்தனை பாரம்பரியமிக்க நமது கன்னியா நம் கையை விட்டுப் போய் விட்டதாக பலர் கவலையடைகின்றனர். ஆனால் இந்த நிலைமைக்கு தமிழர்களின் உதாசீனப் போக்குதான் காரணமாகிறது.

இந்த கால கட்டத்தில் இங்கு ஓர் பெரிய சிவன் கோயிலை ஏன் கட்டவில்லை???? அகத்தியர், ஆவிர்பூ, கைகேசி, இராவணன் ஆகியோருடன் தொடர்புடைய கன்னியாவை தமிழர்கள் கவனிக்காமல் விட்டது ஏன்??????

இங்கு ஒரு கோயிலைக் கட்டியிருந்தால் எத்தனை புத்தர் சிலைகள் வைத்தாலும் எம் கோயில் அப்படியே இருந்திருக்கும். யாராலும் அதை உடைக்க முடியாது. எமது அடையாளம் காப்பாற்றப் பட்டிருக்கும்.

ஆனால் இப்போது இந்துக்களின் அடையாளம் எதுவும் அங்கே இல்லை.திருக்கோணேஸ்வரத்திற்கு நாம் கொடுத்த முக்கியத்தில் பாதியாவது கன்னியாவிற்கு கொடுத்திருக்கலாம் அல்லவா,
ஏன் கொடுக்கவில்லை???

இது போல நூற்றுக்கணக்கான எம் பாரம்பரிய வழிபாட்டிடங்கள் உள்ளன. இவற்றை நாம் கண்டு கொள்ளாமல் இனிமேலும் தூங்கிக் கொண்டிருந்தால் ….

கன்னியா, கச்சகொடிமலை, பச்சனூர்மலை, சாம்பல்தீவு, மாணிக்கமடு என பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

நான் சிறுவயதுமுதற்கொண்டு கன்னியாவிற்கு எத்தனையோதரம் சென்றுள்ளேன். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள மலைக்கு இரண்டு மூன்றுதரம் சென்றிருக்கின்றேன்.
இதனை நாங்கள் ‘கபிறடி மலை’ என்றுதான் கூறுவது.
அங்கு நாற்பது முழமனிதனை  தாட்டதாகவும் அவருக்கு அருகில் அவருடைய ஐந்து அடிக்குருவி தாக்கப்பட்டதாகவுமே பலர் சொல்ல அறிந்திந்தேன்.

எனது நண்பர்கள் நான் ‘கபிறடி மலை’க்கு சென்றுவந்ததை அறிந்து அந்த இடங்களுக்கு போவதை தவிர்க்கவேண்டும் என்றும் கூறினார்.

மேலும் அவர் கன்னியாக்காட்டினுள் ‘திகைப்பூண்டு” என்ற ஒரு மூலிகை இருப்பதாகவும் அதை தவறி யாராவது மிதித்துவிட்டால் வழிதெரியாது காட்டினுள் சிக்குண்டு அலைவார்கள் என்றும் அப்படிப்பட்டவர்கள் இரண்டு மூன்றுபேர் அனுராதபுரக்காட்டில் அலைந்து திரிந்து பத்துப்பன்னிரண்டு நாட்களின்பின் அனுராதபுரத்தை அடைந்தார்கள் என்றும் கூறினார்.

- நன்றி சித்தர்களின் குரல்*

Popular posts from this blog

சம்பந்தர் கடை ஒரு பெட்டிக் கடையின் கதை!

சம்பந்தர் கடை. ஒரு பெட்டிக்கடை சம்பந்தர் கடையடி என இடத்தின் பெயரானது. ஆக இக்கடைக்கு கரவெட்டியின் பிரபல்யமான மூத்த அரசியல்வாதியான சிவசிதம்பரத்தின் வயதிருக்கும். நூறு ஆண்டுகள். யாழ் குடாநாட்டின் புராதனமான கிராமங்களிலொன்று கரவெட்டி. அக்கிராமத்தின் "நடுச்சென்ரறில்" இருக்கிறது இக்கடை.  இன்று உவர் நீர்க் கிணறுகளும் வயல் நிலங்களும் கொண்ட   ஊரின் இப்பகுதி Real Estate பெறுமதி கூடிய பகுதியல்ல. செம்பாட்டு மண்ணும் நன்னீரும் கொண்ட நெல்லியடிப் பகுதிதான் இன்று விலைகூடிய பகுதி. ஆனால் நூறாண்டுகளுக்கு முதல் நெல் வயல்களும் மாடுகளுக்கான மேய்ச்சல் தரைகளும் கொண்ட  பள்ள நிலங்களான சம்பந்தர் கடையடிப் பகுதிகளே ஊரில் விலைகூடிய பகுதிகளாக இருந்தன. சித்த மணியம் போன்ற கரவெட்டியின் செல்வந்த நிலச்சுவாந்தர்களின்  வீடுகள் இப்பகுதிகளிலேயே இருந்தன.     - ஆசிரியர் குறிப்பு #சம்பந்தர்கடை_என்_நினைவில் By கரவெட்டி ராஜி கரவெட்டி  சம்மந்தர்கடை ஒரு உணர்வு பூர்வமான இடம் தான். கரவெட்டி பிரதேசத்தின் ஷொப்பிங் மால் தான் எங்கள் சம்மந்தர்கடை, அங்கு பெட்டிக்கடையில் இருந்து  பெருங்கடை வரைக்கும் உண்டு இன்று வரை. நாலு றோட்டு

கரவெட்டி கிராமத்தின் வரலாறு!

கரவெட்டி கிராமம் ஆனது வதிரி உடுப்பிட்டி துன்னாலை கரணவாய் என்று பெயர் சொல்லக்கூடிய கிராமங்களை எல்லையாக கொண்டு வடமராட்சியில் ஒரு முக்கிய கிராமம். இந்த கரவெட்டியில் நெல்லியடி, சம்மந்தர் கடையடி, கிளவிதோட்டம், யார்க்கரை, அத்துளு, கட்டைவேலி என்றவாறாக சிறு சிறு கிராமக்குடிகளை கொண்டு விளங்குகிறது. ஊர் வழக்கில் நெல்லியடியை கரவெட்டி என்று சொல்லுவதில்லை. அதை நெல்லியடி என்றே சொல்லிக்கொள்ளுவார்கள். கேவளை, தூவெளி, நுகவில் வயல் பகுதி, சாமியன் அரசடி, கோவில்சந்தை, போன்றவற்றை எல்லை கோடுகளாக கொண்டு அழகிய கிராமமாக விளங்குகிறது இதில் கேவளை சந்தி முந்தி ஒரு முக்கியமான இடமாக இருந்திருக்கின்றது. ஏனென்றால் சாவகச்சேரி ஊடாக முந்தி பஸ் ஓடிய காலத்தில் கனகம்புளியடி, கப்பூது, அந்தணதிடல் ஊடாக இந்த சந்திக்குதான் பஸ் எல்லாம் வந்து போறதாம். அது மட்டும் இல்லாமல் யாழ்ப்பாணம் நகரத்திலிருந்து போற பஸ் கூட புத்தூர் வழியாக வந்து கப்பூது வந்து இந்த சந்தி வந்து தான் பருத்தித்துறை போகும். அப்படியாக இந்த சந்தி ஒரு முக்கியமான ஒரு இடமாக விளங்கியிருந்தது என்றால் மிகையாகாது. அதுமட்டும் இல்லாமல் இந்த சந்தியை  ஆயம் என்றும்  ஆயக்கடவ

என்.. ஊர் கரவெட்டி..
கரவெட்டியான்
 என்பதில்
எனக்குப் பெருமை.

என்.. ஊர் கரவெட்டி..

கரவெட்டியான
என்பதில்
எனக்குப் பெருமை.

கரவு.. எட்டி
என்பதனால்
கரவெட்டி ஆனதாய்
பெரியவர்கள்
சொல்லக் கேள்வி..

கற்றாரும்.. மிக்காரும்
கனிந்திருப்பர்
கோயில் 
மணி ஒலியில்
புள்ளினங்கள் பாட்டிசைக்க
பசுந்தாள் தரவையில்
ஆவினங்கள் நடனமிடும்
அழகு நிறை
ஆடம்பரமில்லா கரவெட்டி..

கலைமகளின்
ஆட்சி இங்கே நடப்பதானால்
தடக்கி விழுந்தாலும்
வாத்தியார்
வீட்டுப் படலையே தஞ்சம்..

இயல் ..இசை.. நாடகம்
எல்லாம்
முளை கொண்ட தமிழுலகு..

இயல் .. இசை ..நாடக
விற்பன்னராய்
முச்சந்தி இலக்கியம் படைத்த
மனோன்மணி நடராசாவும்
எங்கள் ஊர் தானே..

கவியுலகின் மன்னவனாய்
எங்கள் 
மன்னவன் கந்தப்பு 
ஆசானின். நகைச்சுவைக் கவிக்கீடாய்
ஏது முண்டோ..

சிலேடைக் கவியை
சிறப்பாய்த் தந்த
பண்டிதர் வீரகத்தி
எம் ஊரின் சிறப்பன்றோ..
அவர் வழியில்
சிலேடைக் கவி தந்த
கணபதிப்பிள்ளை.. சிவராஜசிங்கம்
ஊருக்கு சேர்த்த
பெருமைதனை
என்ன வென்று சொல்வேன்..

தானே கவி எழுதி
தானே மெட்டமைத்துப் பாடும்
யதார்த்தனை
எப்படி மறப்பது..

இலக்கியத்தமிழையும்
பண்டித தமிழையும்
மேட்டுக் குடியின் ஆங்கிலத்தையும்
எங்கள் ஒழுங்கை வரை
கொண்டு வந்த
பண்டிதர் பொன் கணேசன்
அவ