Skip to main content

கன்னியா வென்னீர் ஊற்றின் அருகில் உள்ள மலையில் காணப்படும் இராவணனின் தாய் கைகேசியின் கல்லறையே இது.




தனது தாயின் ஈமக் கிரியைகளை நிறைவு செய்வதற்காக இராவணன் ஏழு வென்னீர் ஊற்றுக்களை இவ்விடத்தில் உருவாக்கி கிரியைகளை நிறைவு செய்த பின் இவ்விடத்திலேயே தாயின் சமாதியையும் அமைத்தான் என இந்திய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இது 60 அடி சமாதி என அழைக்கப் படுகிறது. தாயின் சமாதியின் அருகிலேயே இராவணனின் சமாதியும் அமைக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது.

 இராவணனின் தலைநகர் அருகிலுள்ள திரிகூட மலையில் (திருக்கோணமலை) அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இராவணனின் பாட்டி ஆவிர்பூ கன்னியாக இருந்த போது இவ்விடத்தில் தான் புலத்திய முனிவரைக் கண்டதாகத் தெரிய வருகிறது. அகத்திய முனிவர் இவ்விடத்தில் சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டதாக குறிப்புகள் கூறுகின்றன.

இத்தனை பாரம்பரியமிக்க நமது கன்னியா நம் கையை விட்டுப் போய் விட்டதாக பலர் கவலையடைகின்றனர். ஆனால் இந்த நிலைமைக்கு தமிழர்களின் உதாசீனப் போக்குதான் காரணமாகிறது.

இந்த கால கட்டத்தில் இங்கு ஓர் பெரிய சிவன் கோயிலை ஏன் கட்டவில்லை???? அகத்தியர், ஆவிர்பூ, கைகேசி, இராவணன் ஆகியோருடன் தொடர்புடைய கன்னியாவை தமிழர்கள் கவனிக்காமல் விட்டது ஏன்??????

இங்கு ஒரு கோயிலைக் கட்டியிருந்தால் எத்தனை புத்தர் சிலைகள் வைத்தாலும் எம் கோயில் அப்படியே இருந்திருக்கும். யாராலும் அதை உடைக்க முடியாது. எமது அடையாளம் காப்பாற்றப் பட்டிருக்கும்.

ஆனால் இப்போது இந்துக்களின் அடையாளம் எதுவும் அங்கே இல்லை.திருக்கோணேஸ்வரத்திற்கு நாம் கொடுத்த முக்கியத்தில் பாதியாவது கன்னியாவிற்கு கொடுத்திருக்கலாம் அல்லவா,
ஏன் கொடுக்கவில்லை???

இது போல நூற்றுக்கணக்கான எம் பாரம்பரிய வழிபாட்டிடங்கள் உள்ளன. இவற்றை நாம் கண்டு கொள்ளாமல் இனிமேலும் தூங்கிக் கொண்டிருந்தால் ….

கன்னியா, கச்சகொடிமலை, பச்சனூர்மலை, சாம்பல்தீவு, மாணிக்கமடு என பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

நான் சிறுவயதுமுதற்கொண்டு கன்னியாவிற்கு எத்தனையோதரம் சென்றுள்ளேன். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள மலைக்கு இரண்டு மூன்றுதரம் சென்றிருக்கின்றேன்.
இதனை நாங்கள் ‘கபிறடி மலை’ என்றுதான் கூறுவது.
அங்கு நாற்பது முழமனிதனை  தாட்டதாகவும் அவருக்கு அருகில் அவருடைய ஐந்து அடிக்குருவி தாக்கப்பட்டதாகவுமே பலர் சொல்ல அறிந்திந்தேன்.

எனது நண்பர்கள் நான் ‘கபிறடி மலை’க்கு சென்றுவந்ததை அறிந்து அந்த இடங்களுக்கு போவதை தவிர்க்கவேண்டும் என்றும் கூறினார்.

மேலும் அவர் கன்னியாக்காட்டினுள் ‘திகைப்பூண்டு” என்ற ஒரு மூலிகை இருப்பதாகவும் அதை தவறி யாராவது மிதித்துவிட்டால் வழிதெரியாது காட்டினுள் சிக்குண்டு அலைவார்கள் என்றும் அப்படிப்பட்டவர்கள் இரண்டு மூன்றுபேர் அனுராதபுரக்காட்டில் அலைந்து திரிந்து பத்துப்பன்னிரண்டு நாட்களின்பின் அனுராதபுரத்தை அடைந்தார்கள் என்றும் கூறினார்.

- நன்றி சித்தர்களின் குரல்*

Popular posts from this blog

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய நீல திமிங்கலம்

ஜப்பானில் நீலத்திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. காமக்குரா (( Kamakura)) என்ற இடத்தில் கடலோரப் பகுதியில் கரை ஒதுங்கிய அந்த திமிங்கலம் சுமார் 35 அடி நீளமுள்ளதாகக் காணப்பட்டது. இதையடுத்து திமிங்கலத்தின் எலும்புகளை முழுமையாக எடுத்து அருங்காட்சியகத்தில் வைக்கும் வகையில் திராவகம் மூலம் அதன் சதைப் பகுதியை கரைக்கும் முயற்சியில் ஜப்பான் அரசு ஈடுபட்டுள்ளது. மேலும் திமிங்கலம் இறப்புக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பொதுவாக நீலத் திமிங்கலங்கள் 100 அடி நீளமும் 190 டன் எடை வரையிலும் தன்மை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

தொப்பையை குறைக்கும் எளிய உடற்பயிற்சிகள்

தற்காலத்தில் அனைவருக்கும் பெரிய பிரச்சினையாக காணப்படும் தொப்பையை வீட்டிலேயே சில எளிய உடற்பயிற்சிகளை செய்து குறைப்பது எப்படி என பார்ப்போம். plank walks exercise: இரண்டு கைகளையும் நிலத்தில் ஊன்றி, பக்கவாட்டில் உடலை இயக்க வேண்டும். வலது கை, வலது காலை வலதுபக்கமாக சற்று கீழே இறக்கி, ஏற்ற வேண்டும். அதேபோல் இடது கால், இடது கையை இடதுபக்கமாக கீழே இறக்கி, பின் ஏற்ற வேண்டும். இவ்வாறு 20 முறை செய்ய வேண்டும். படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ள வேண்டும். Squats: கால்கள் எந்த அளவிற்கு வலுவாக உள்ளதோ, அந்தளவுக்கு உடலும் வலுவடையும். கைகளை நேரே நீட்டியவாறு, உடலை பாதியளவிற்கு கீழே இறக்கி, பின் மேலே ஏற்ற வேண்டும். சேரில் அமருவதை போல் அமர்ந்து செய்யும் உடற்பயிற்சி இது. இந்த பயிற்சியை செய்யும் போது உங்களின் கால் தொடைகளில் மாற்றம் தெரிவதை உணரலாம். Mountain Climbers: தண்டால் எடுப்பது போன்ற நிலையில் இருக்க வேண்டும். அப்போது மலை ஏறுவது போல் கால்களை ஒவ்வொன்றாக கொண்டு சென்று, பின் பழைய நிலைக்கு வரவேண்டும். தசைகள் எவ்வளவு வேலை செய்கிறதோ, அந்தளவிற்கு உடல் கொழுப்பு கரைக்கப்படும். toe To Bar:...

ஷம்போக்கு பதிலா இதை தேய்ச்சாலே முடி தாறுமாறா வளருமாம்! பெண்களே உஷார்

எல்லாருக்கும் கடலை மாவு என்றாலே முகம் பளபளக்கும் சருமத்திற்கும் தான் என்று தெரியும். ஆனால் இந்த கடலை மாவை கொண்டு தலைமுடி வளர்ச்சியை தூண்டலாம். பயன்கள் சரும அழகைப் போலவே தலைமுடி பராமரிப்பிலும் கடலைமாவு பல்வேறு வகைகளில் நமக்குப் பயன்படுகிறது. பண்டைய காலத்தில் இருந்து கடலை மாவு அழகு பராமரிப்புக்கு என்றே பயன்பட்டு வருகிறது. இதிலுள்ள போஷாக்குகள் உங்கள் கூந்தலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. வலிமையான மற்றும் அடர்த்தியான பொலிவான கூந்தலை பரிசாக அளிக்கிறது. முடி வளர்ச்சி முடி உதிர்தலை தடுத்தல் கூந்தலை சுத்தமாக்குதல் கூந்தல் வறட்சியை போக்குதல் கூந்தலிலுள்ள சிக்கலை போக்குதல் இயற்கையான கண்டிஷனர் பொடுகை தவிர்த்தல் பொலிவான மற்றும் நீண்ட கூந்தலை அளித்தல் கூந்தல் நுனிப்பிளவை தடுத்தல் ஆகிய பிரச்சினைகளுக்கு கடலை மாவு மூலம் உங்களுக்குத் தீர்வு கிடைக்கும்.