Skip to main content

இதுதான் அஞ்சான் கதை!

லிங்குசாமியின் தயாரிப்பு, இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அஞ்சான் படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.

முதன் முறையாக இயக்குனர் லிங்குசாமி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்புகள் மும்பையில் முடிவடைந்திருக்கிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இறுதி கட்ட படப்பிடிப்பு கனடா, சுவிட்சர்லாந்து மற்றும் நியூசிலாந்தில் நடக்க இருக்கிறது. சமந்தா இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக நடித்து வருகிறார்.
லிங்குசாமியின் வட்டாரத்திலிருந்து கசிந்த வரையில் படத்தின் கதையாக, சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயரான சூர்யா, மும்பையில் நடக்கும் ஒரு கருத்தரங்கிற்காக செல்கிறார். மும்பையில் தன் கண்முன்னால் நடக்கும் ஒரு தவறை தட்டிக் கேட்கிறார். அது சின்ன தவறுதான். ஆனால் அதற்கு பின்னால் மும்பையின் அண்டர்கிரவுண்ட் தாதாக்கள் இருக்கிறார்கள்.
தன் வேலையை முடித்து விட்டு சூர்யா சென்னை வந்து விடுகிறார். வந்த உடனேயே அவரது வேலை பறிக்கப்படுகிறது. அவருக்கும், அவரது குடும்பத்துக்கும், காதலிக்கும் முகம் தெரியாத மனிதர்களால் அச்சுறுத்தலும், பிரச்னைகளும் வருகிறது.
அவை எல்லாமே மும்பை தாதாக்களால் செய்யப்படுவது. அப்போதுதான் சூர்யாவுக்கு மும்பை சம்பவங்கள் நினைவுக்கு வருகிறது. அப்படி பெரிதாக எதுவும் செய்யவில்லையே என்று துளாவி பார்க்கும்போதுதான், மும்பையில் நடந்தது சாதாரண விஷயம் இல்லை நாம் வசமாக தாதாக்களின் வலையில் சிக்கி விட்டோம் என்பதை உணர்கிறார்.
முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பதைப்போல தாதாக்களை சந்திக்க சூர்யாவும் தாதாவாக மாறுகிறார். இதுதான் படத்தின் கதை என்கிறார்கள்.

Popular posts from this blog

இந்த ஒரு பொருள் சாப்பிட்டு முடிச்சதும் தண்ணீர் குடிக்கக் கூடாது! ஏன் தெரியுமா?

வறுத்த மக்காச் சோளம் அல்லது பூட்டா அற்புதமான சுவையோடு ஆரோக்கியமான சிற்றுண்டி விருப்பமாகவும் இருக்கிறது. இருப்பினும், இதை உண்டவுடன் குடிநீரை உடனடியாக குடிப்பதால் பல்வேறு வகையான வயிற்றுக் கோளாறுகள் ஏற்படுமாம். நீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் இரைப்பைப் பிரச்சினைகள் மற்றும் வயிற்று வலிக்கும் இது வழிவகுக்கும். ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது? தண்ணீருடன் மக்காச் சோளம் அல்லது சோளக்கருது ஒன்றாக உட்கொள்ளும் போது ​பலர் வாய்வு மற்றும் கடுமையான வயிற்று வலி ஏற்படுவதாக புகார் செய்துள்ளனர். சோளக்கருது உண்டவுடன் குடிநீரை குடிப்பதன் மூலம் ஜீரண நொதிகள் இயல்பிலிருந்து பெருமளவு மாற்றமடைகின்றன எனவே செரிமான வேகம் குறைகிறது. சோளக்கருதில் உள்ள சிக்கலான கார்ப்ஸ் , ஸ்டார்ச் மற்றும் தண்ணீரின் நுகர்வு ஆகியவை வயிற்றில் உள்ள வாயுக்களை வெளியேற்றுவதற்கு வழிவகுக்கலாம். இதனால் வாய்வு , அசிடிட்டி மற்றும் கடுமையான வயிற்று வலி உருவாகும் என டாக்டர் அஷுடோஷ் கூறுகிறார். எவ்வளவு நுரம் கழித்து குடிக்கலாம்? சிறந்த நேர இடைவெளி, குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் இருக்க வேண்டும் என்று வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். இது தவிர, எலு...

சம்பந்தர் கடை ஒரு பெட்டிக் கடையின் கதை!

சம்பந்தர் கடை. ஒரு பெட்டிக்கடை சம்பந்தர் கடையடி என இடத்தின் பெயரானது. ஆக இக்கடைக்கு கரவெட்டியின் பிரபல்யமான மூத்த அரசியல்வாதியான சிவசிதம்பரத்தின் வயதிருக்கும். நூறு ஆண்டுகள். யாழ் குடாநாட்டின் புராதனமான கிராமங்களிலொன்று கரவெட்டி. அக்கிராமத்தின் "நடுச்சென்ரறில்" இருக்கிறது இக்கடை.  இன்று உவர் நீர்க் கிணறுகளும் வயல் நிலங்களும் கொண்ட   ஊரின் இப்பகுதி Real Estate பெறுமதி கூடிய பகுதியல்ல. செம்பாட்டு மண்ணும் நன்னீரும் கொண்ட நெல்லியடிப் பகுதிதான் இன்று விலைகூடிய பகுதி. ஆனால் நூறாண்டுகளுக்கு முதல் நெல் வயல்களும் மாடுகளுக்கான மேய்ச்சல் தரைகளும் கொண்ட  பள்ள நிலங்களான சம்பந்தர் கடையடிப் பகுதிகளே ஊரில் விலைகூடிய பகுதிகளாக இருந்தன. சித்த மணியம் போன்ற கரவெட்டியின் செல்வந்த நிலச்சுவாந்தர்களின்  வீடுகள் இப்பகுதிகளிலேயே இருந்தன.     - ஆசிரியர் குறிப்பு #சம்பந்தர்கடை_என்_நினைவில் By கரவெட்டி ராஜி கரவெட்டி  சம்மந்தர்கடை ஒரு உணர்வு பூர்வமான இடம் தான். கரவெட்டி பிரதேசத்தின் ஷொப்பிங் மால் தான் எங்கள் சம்மந்தர்கடை, அங்கு பெட்டிக்கடையில் இருந்து  பெருங்கடை வரைக்கும்...

கரவெட்டி கிராமத்தின் வரலாறு!

கரவெட்டி கிராமம் ஆனது வதிரி உடுப்பிட்டி துன்னாலை கரணவாய் என்று பெயர் சொல்லக்கூடிய கிராமங்களை எல்லையாக கொண்டு வடமராட்சியில் ஒரு முக்கிய கிராமம். இந்த கரவெட்டியில் நெல்லியடி, சம்மந்தர் கடையடி, கிளவிதோட்டம், யார்க்கரை, அத்துளு, கட்டைவேலி என்றவாறாக சிறு சிறு கிராமக்குடிகளை கொண்டு விளங்குகிறது. ஊர் வழக்கில் நெல்லியடியை கரவெட்டி என்று சொல்லுவதில்லை. அதை நெல்லியடி என்றே சொல்லிக்கொள்ளுவார்கள். கேவளை, தூவெளி, நுகவில் வயல் பகுதி, சாமியன் அரசடி, கோவில்சந்தை, போன்றவற்றை எல்லை கோடுகளாக கொண்டு அழகிய கிராமமாக விளங்குகிறது இதில் கேவளை சந்தி முந்தி ஒரு முக்கியமான இடமாக இருந்திருக்கின்றது. ஏனென்றால் சாவகச்சேரி ஊடாக முந்தி பஸ் ஓடிய காலத்தில் கனகம்புளியடி, கப்பூது, அந்தணதிடல் ஊடாக இந்த சந்திக்குதான் பஸ் எல்லாம் வந்து போறதாம். அது மட்டும் இல்லாமல் யாழ்ப்பாணம் நகரத்திலிருந்து போற பஸ் கூட புத்தூர் வழியாக வந்து கப்பூது வந்து இந்த சந்தி வந்து தான் பருத்தித்துறை போகும். அப்படியாக இந்த சந்தி ஒரு முக்கியமான ஒரு இடமாக விளங்கியிருந்தது என்றால் மிகையாகாது. அதுமட்டும் இல்லாமல் இந்த சந்தியை  ஆய...